tag:blogger.com,1999:blog-11745126208766311992024-03-19T13:25:12.258+04:00மக்கள் நேசன்ஓரிறையின் திருநாமத்தால்.. சமரசத்திற்கான அழைப்பிதழ்..!கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-1174512620876631199.post-4815582323055418382013-03-16T06:08:00.002+04:002013-03-16T06:11:15.476+04:00ஆபத்தை விளைவிக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள்:ஓர் எச்சரிக்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்றைய இஸ்லாமிய இளைய தலைமுறையினரின் நடத்தைகள் படுமோசமான நிலையில் இருக்கிறது.இந்த அவல நிலையைத் துடைத்தொழிக்க முறையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாமல் போனால் கல்வி,தொழில்,குடும்பம் ஆகிய துறைகளில் நமது வளரும் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCHR531cRqILw7GAecKSAytj6atnXaE6sR6tXCPWH5zpHVshPH8EmFJx8an3BEtWviovawS-_by6Q7ObLwO284zXJMyk47BSm0iXKHjVqevL0Lx7LfnjUpqLqJKcsxKWby-Lah0tysMe0/s1600/media-vioalance-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="130" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCHR531cRqILw7GAecKSAytj6atnXaE6sR6tXCPWH5zpHVshPH8EmFJx8an3BEtWviovawS-_by6Q7ObLwO284zXJMyk47BSm0iXKHjVqevL0Lx7LfnjUpqLqJKcsxKWby-Lah0tysMe0/s400/media-vioalance-1.jpg" width="400" /></a></div>
பத்து ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது தகவல் தொடர்பு சாதனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தவண்ணம் உள்ளன. கல்வி, பொருளாதார பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும்இச்சாதனங்கள்,<br />
ஆபாசம் போன்ற சமூக சீர்கேடுகளை பரப்புவதற்காக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. <br />
<br />
செல்போன்களும்,தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்<br />
<br />
செல்போன்கள் பயன்பாட்டிற்கு வருமுன் வீட்டில் கம்பிவட தொலைபேசி இணைப்பை வைத்திருப்போர் கூடுதல் கட்டணம் (பில்) வந்துவிடுமோ என்று அஞ்சி அவசியத் தேவைகளுக்காக மட்டுமே அதனை பயன்படுத்தி வந்தனர்.<br />
செல்போன்கள் பயன்பாட்டிற்கு வந்ததற்கு பின்னர் குடும்பத்தில் பெரியவர்கள் சிறியோர் உட்பட அணைவரும் இதனை பயன்படுத்;த தொடங்கி விட்டனர்.இதனால் குடும்ப வருமானத்தில் ஒரு கனிசமான தொகையை செல்போன் அட்டைகளுக்காக செலவிடும் போக்கு தற்போது அதிகரித்து விட்டது.<br />
<br />
அவசியம் இல்லாவிட்டாலும் ஆடம்பரத்திற்காக மனைவி,மக்களுக்கு விலையுயர்ந்த செல்போன்ளை வாங்கித் தரும் பழக்கம் இன்றைய சமூகத்தில் நாகரீகமாக கருதப்படுகிறது. <br />
<br />
நவீன வசதிகளுடன் கூடிய செல்போன்களின் வரத்து சந்தைகளில் இன்றைக்கு அதிகரித்துள்ளதால்; சமூகத்தின் அணைத்து தரப்பினரிடமும் இத்தகைய செல்போன்களுக்கு மவுசு கூடியுள்ளது.இவற்றில் இருக்கும் புளூடூத்,காமிரா,இணையம் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி ஆபாசமான அருவருக்கத்தக்க காரியங்களை தங்களுக்கு மத்தியில் நமது இளைய தலைமுறையினர் பரிமாறிக் கொள்வதை நம்மால் காண முடிகிறது.<br />
கள்ளத்த்தனமாக மணிக்கணக்கில் நமது இளைஞர்களும் இளம்பெண்களும் மாற்றார்களுடன் உரையாடும் போக்கு தற்போது செல்போன்கள் வாயிலாக அதிகரித்துள்ளது.இவ்வாறு தொடரும் செல்போன் உரையாடல்கள், இறுதியில் குடும்பத்தாரைப் பகைத்துக் கொண்டு வீட்டை விட்டு அந்நியர்களுடன் ஓடிவிடும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.<br />
<br />
இது ஒரு புறமிருக்க,பொழுது போக்கு ஊடகம் எனப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சேனல்கள் சமூகத்தை இன்னொரு வகையில் சீர்கேடு எனும் படு நாசக் குழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.<br />
இன்றைக்கு வெளிவரும் திரைப்படங்களும்,தொலைக்காட்சி நாடகத் தொடர்கள், நிகழ்ச்சிகள் அணைத்தும் தங்கு தடையற்ற முறை தவறிய ஆண்-பெண் கலப்புறவுக்கு சமூகத்தை தயார் படுத்தும் வகையில் தான் தயாரிக்கப் படுகின்றன.<br />
<br />
நடன அரங்குகள் ( DANCE CLUB )போன்றவை மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டும் தான் இருந்தன என்பதாக சில காலங்களுக்கு முன் வரை கேள்வி பட்டிருக்கிறோம்.ஆனால் இத்தகைய நடன அரங்குகளை நமது தொலைக்காட்சி சேனல்கள் தமது நிகழ்ச்சிகளின் வாயிலாக ஒவ்வொரு வீடுகளிலும் அரங்கேற்றி வருவதை இன்று நம்மால் காண முடிகிறது.<br />
நடன அரங்குகள் போன்ற ஆபாச கேளிக்கை மையங்கள் குறித்து கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத பாமர மக்களுக்கு நடன போட்டி என்ற பெயரில் சினிமாப் பாடல்களுக்கு அரைகுறை ஆடையுடன் பெண்னை ஆணுடன் ஆபாசமாக ஆடவிட்டு புது வித ஆபாச இன்பத்தை பார்வையாளர்களுக்கு நமது தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன.<br />
<br />
சுருங்கச் சொன்னால் ஆபாசமான விஷயங்களை காண்பது கண்கள் செய்யும் விபச்சாரம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் எச்சரித்துள்ள அந்த பாவத்தை செய்பவர்களாக சமூகத்தை இந்த தொலைக்காட்சிகள் மாற்றியிருக்கின்றன.<br />
குடும்ப உறவுகளை குலைக்கும் மெகா சீரியல்களும்,அவ்வப்போது ஒளிபரப்ப படும் விளம்பரங்களும் காண்போர் மனங்களில் ஓர் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி வருகின்றன. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMSsNKZIFFg9caFj2qb6BzIgC3i3ZX7zsWsFjoxuVkAEGOGGuJQg4Y4sfvYa6eUQ1EmIfI_Ymj8c5KtJDaEc21TVyxf8hzIN3BQQSpnbExp1DVvC0XYtXJXSqu0UaqqqcaChVThLsF9gQ/s1600/media-vioalance-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="232" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMSsNKZIFFg9caFj2qb6BzIgC3i3ZX7zsWsFjoxuVkAEGOGGuJQg4Y4sfvYa6eUQ1EmIfI_Ymj8c5KtJDaEc21TVyxf8hzIN3BQQSpnbExp1DVvC0XYtXJXSqu0UaqqqcaChVThLsF9gQ/s320/media-vioalance-2.jpg" width="320" /></a></div>
இதற்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன..?<br />
<br />
இத்தகைய இழிவுகளிலிருந்து சமூகத்தை சீர் படுத்த இஸ்லாம் சில வழிகளை கற்றுத் தருகிறது.இறைவன் தன்னிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுமாறு குர்ஆனில் நமக்கு கற்றுத் தருகிறான்..<br />
<br />
'(நபியே நீர் கூறும்) இருள் படரும் போது ஏற்படும் தீங்குகளை விட்டும் (இறைவா)உன்னிடம் (நான்)காவல் தேடுகிறேன். (சூரா அல் பலக்- 3)<br />
<br />
இதனை விவரித்து நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்...<br />
சூரியன் மறையும் நேரம் வந்து விட்டால் உங்களின் சிறுவர்களை வீட்டிலிருந்து வெளியில் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நேரத்தில் ஷைத்தான் வீதியில் சுற்றுகிறான். (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).ஆதாரம்:புகாரி, முஸ்லிம் )<br />
<br />
எவ்வளவு உண்மை..!ஷைத்தான் வருவதாக நபிகளார் கூறும் அந்த இருள் சூழ்ந்த வேளையில் தான் பாவமான அருவருக்கத்தக்க,தீய சிந்தனையைத் தூண்டக் கூடிய நாடகங்களும் நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகின்றன.<br />
<br />
இந்த நேரங்களில் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் ஷைத்தானிய சேனல்களிடமிருந்து தற்காத்து கொள்ளாமல் போனதால் அதன் கதாபாத்திரங்களில் லயித்து ஒழுக்கம்,சமுதாயக் கட்டுப்பாடு ஆகியவை காற்றில் பறக்க விடப்பட்டு முறையற்ற ஆண்-பெண் கலப்புறவு தங்கு தடையின்றி உள்ளூர் முதல் உலக அளவில் அரங்கேறி வருகின்றது.<br />
தொலை தொடர்புக்கான எளிய சாதனமாக பயன்பட்ட செல்போன்கள் ,இத்தகைய கள்ளத் தனங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி தரும் தரகு வேலை செய்பவையாக உருமாறியிருக்கின்றன.இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கின்றன என்பதை தற்போது நாம் கண்டு வருகின்றோம். <br />
<br />
ஆகவே நமது பெண்களின் வெளி உலகத் தொடர்புகள் எவ்வாறு இருக்க வேண்டு;ம் என்பதை குறித்தும், செல்போன்,தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படங்கள், இணையதளம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை முறைப்படி கையாள்வதற்குரிய கீழ்கானும் சில ஆலோசனைகள் நமது குடும்பங்களில் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.<br />
<br />
1.பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்,வேலையில்லா இளைஞர்கள்,இளம் பெண்கள் (திருமணமான-திருமணமாகாத)ஆகிய தரப்பினரை செல்போன் பயன்படுத்துவதை குடும்ப பெரியவர்கள் கட்டாயம் அனுமதிக்க கூடாது.மேற்படி தரப்பினர் அவசியம் கருதி வெளியே செல்லும் போது அவசரமாக குடும்பத்தாரை தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால்..அருகிலுள்ள பொது தொலைபேசி சேவை (Pஊழு) பூத்களை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.<br />
<br />
2.குடும்ப பெரியவர்கள்,தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள்,பாடல்கள்,நடனப் போட்டிகள் போன்ற பாலுணர்வைத் தூண்டுபவற்றையும்,குடும்ப உறவுகளை சீர்குலைக்கும் நாடக நெடுந்தொடர்களையும் தமது குடும்பத்தினர் பார்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.<br />
<br />
தொலைக்காட்சி சேனல்களை முற்றிலுமாக பார்க்கவே கூடாது என்பது இதன் பொருளல்ல அறிவியல் கண்டுபிடிப்புகள்,மருத்துவ உண்மைகள்,வன விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள்,சிறார்களுக்கு தெம்பையும் துணிவையும் ஊட்டும் (ADVENTURE- இடர்பாடான சூழ்நிலைகளில் பயணம் செய்யும்) நிகழ்ச்சிகள்,ஏழை நாடுகள் மற்றும் போரினால் சீரழிந்து கிடக்கும் நாடுகளில் மக்கள் படும் விவரிக்க இயலாத ஏழ்மையையும் துன்பங்களையும் சித்தரிக்கும் (DOCUMENTARY) ஆவணப் படங்களை போன்றவற்றை பார்க்கவும் அதிலிருந்து படிப்பினை பெறவும் இளைஞர்களையும் சிறுவர்களையும் ஊக்கப் படுத்த வேண்டும்.இதற்கு அவர்கள் தயாராகாத பட்சத்தில் தொலைக்காட்சியை மூடிவிடுவது சிறந்ததாகும்.<br />
<br />
3.வீட்டில் இணையதள வசதி உள்ளவர்கள் அதனைப் பயன்படுத்துவோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.அவர்கள் எந்த மாதிரியான தளங்களில் தமது நேரங்களை செலவிடுகின்றனர்..?அவை எப்படி பட்டது என்பதை கண்டறிந்து தீமையை விதைக்கும் தளமாக இருந்தால் அவற்றை காண தடை விதிக்க வேண்டும்.மேலும் சாட்டிங் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் யாருடன் சாட்டிங் செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
4.அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதாக இருந்தாலும் பெண்களை தனித்து பயனம் செய்ய அனுமதிக்கக் கூடாது.அவ்வாறு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் திருமணம் செய்ய விலக்கப்பட்ட (மஹ்ரமான)வர்களோடு மட்டும் பயனிக்க செய்ய வேண்டும்.(கணவனோ அல்லது தந்தை,உடன்பிறந்த சகோதரர்களை துணைக்கு அழைத்து செல்வது சிறந்ததாகும்)சிறுவர்களை மட்டும் துணைக்கு அழைத்து செல்லும் பெண்களை தற்போது பேருந்துகளில் அதிகமாக காண முடிகிறது.அவ்வாறு சிறுவர்களோடு பெண்கள் பயணிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.சிறுவர்கள் துணையோடு பயணித்தல் என்பது தணித்து பயணிப்பதற்கு சமமானதாகும்.<br />
<br />
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.. தனியாக பயணிப்பதில் ஏற்படும் அபாயம் குறித்து நான் அறிந்திருக்கும் அளவுக்கு மக்கள் அறிந்திருந்தால் ஒருவருமே இரவு தனியாக பயணம் செய்யமாட்டார்கள்.(அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி),ஆதாரம்:புகாரி)<br />
<br />
பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் அணிந்து செல்வதையும்,மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேக்கப் செய்து கொள்வதையும் வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதையும் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.<br />
மேற்கூறப்பட்ட ஆலோசனைகளை குடும்ப பெரியோர்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து அவற்றை தமது குடும்பத்தில் செயல்படுத்த முன்வர வேண்டும்.<br />
<br />
இஸ்லாம் தகவல் தொடர்பு சாதனங்களக்கு எதிரானதா..?<br />
<br />
இஸ்லாம் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு எதிரான மார்க்கமல்ல..சாதாரணமாக கத்தியைக் கொண்டு காய்கறி,பழங்கள் போன்றவற்றையும் நறுக்கலாம்.அதே கத்தியைக் கொண்டு ஆளையும் கொல்ல முடியம்.யாரும் கத்தியைக் கொண்டு கொலை பாதகத்தை செய்ய விரும்பமாட்டாhகள்.இதைப் போலவே.. தகவல் தொடர்பு சாதனங்களை ஆக்கப்பூர்வமான வழியில் இஸ்லாம் அனுமதித்துள்ள வகையில் ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.<br />
<br />
சுருங்கச் சொன்னால் அவற்றை இல்லாமல் ஆக்குவதை விட.. இஸ்லாமிய மயமாக்கி விடுவதே சாலச் சிறந்ததாகும். <br />
<br />
இறைவன் கூறுகிறான்..<br />
உங்கள் கரங்களை நாசத்தின் பால் கொண்டு செல்லாதீர் (குர்ஆன்:2-195) மேலும் கூறுகிறான்..<br />
விசுவாசிகளே.. நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.. அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். (குர்ஆன்:66-6)<br />
<br />
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களை சற்று ஆராய்ந்து மனதில் கொண்டு நம்மை நாமே நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முயல்வோமாக.<br />
இறைவன் நம் அணைவருக்கும் அருள் புரிவானாக....!<br />
<br />
நன்றி: மக்கள் உரிமை வார இதழ்.<br />
(மக்கள் உரிமை டிசம்பர் 19-25,2008 இதழில் வெளியான கட்டுரை)<br />
(தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் ஈமானை மறந்து காதல் என்ற பெயரில் மாற்றார்களோடு கள்ள உறவை மேற்கொண்டு சமுதாயத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் ஐக்கிய அரபு அமீரகம் அல்-அய்ன் மண்டல தமுமுக சார்பில் சமுதாயத்தை விழிப்படைய செய்யவும்,அதற்கான ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் மேற்கண்ட கட்டுரை மக்கள் உரிமையில் வெளியிடப்பட்டது)</div>
கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-6241349842143513552012-08-13T17:55:00.001+04:002012-08-13T20:11:03.859+04:00தலைவரே............<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாய்... ஒலித்துக் கொண்டிருக்கும் சமுதாயப்பெரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்றைக்கு அசைக்க முடியாத ஆல விருட்சமாக கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதென்றால்... இதன் பின்னணியில் வேர்களாகவும் விழுதுகளாகவும் இருந்து தம்மையே உரமாக்கி அல்லாஹ்வின் துணை கொண்டு இந்த பேரியக்கத்தை தூக்கி நிறுத்திய பெருமைக்குரியோர் பலர் இருக்கின்றனர்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu4gn1Yclzde5TYMCOPPd03kgv5QZSUUtfdy4B6w42jPrMvjgieAdAQxhHOQEXupzlerIXHy3kPQzdQkiZ36KTb0aYMnK1AwiUkKs0GDry8yYktdf4hy_6jYhPcX5eGeNCOmO13XFR4W4/s1600/smj.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="260" mda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu4gn1Yclzde5TYMCOPPd03kgv5QZSUUtfdy4B6w42jPrMvjgieAdAQxhHOQEXupzlerIXHy3kPQzdQkiZ36KTb0aYMnK1AwiUkKs0GDry8yYktdf4hy_6jYhPcX5eGeNCOmO13XFR4W4/s320/smj.bmp" width="320" /></a></div>
<div>
அத்தகையவர்களில் ஒருவர் தான் தலைவர் எஸ்.எம்.ஜின்னாஅவர்கள். </div>
<div>
இந்திய துணைக்கண்டத்தில் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இந்தப் பேரியக்கம் நிர்மாணிக்கப்பட்ட வேளையில் கடலூர் மாவட்டத்தில் நிர்வாகக் குழுவில் ஒருவராக இடம்பெற்றார்.சிறிது காலம் கழித்து கடலூர் மாவட்ட கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று மாவட்டம் முழுவதிலும் கிளைகளை கட்டமைக்க சூறாவளியாய் களப் பணியாற்றினார். இந்த நாள்களில் அவர் சந்தித்த துன்பங்களும் தொல்லைகளும் கொஞ்ச நெஞ்சமல்ல...<br />
<br />
இவரது களப்பணியை கண்டு பொறுக்காத காவல் துறை இவர்மீது பல்வேறு பொய்வழக்குகளை புனைந்து இவரை முடக்க சதி செய்தது.இவரது ஊர் ஜமாஅத் கூட இவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இவரை </div>
<div>
புறக்கணித்தது.</div>
<div>
</div>
<div>
<br />
இந்த துயரங்கள்ஒருபுறமிருக்க 2004 ஆம் ஆண்டு இந்த பேரியக்கத்தில் </div>
<div>
இருந்து வெளியேறி சென்று வேறொரு இயக்கத்தை உருவாக்கியவர்கள்,<span id="6_TRN_58"> </span></div>
<div>
ஜின்னா தம்மோடு வருவார் என்று எதிர்பார்த்தனர்.ஆனால் தலைவர் ஜின்னா அவர்களோ.. அவர்களது எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி
<br />
<div>
விட்டு தாம் பாடுபட்டு உருவாக்கிய இந்த பெரியக்கத்திலேயே இன்னும் வீரியமாக களப்பணியை தொடர்ந்தார்.</div>
<div>
</div>
<div>
<br />
இதனால் சினங்கொண்ட அந்த அமைப்பினர்,தங்கள் தமுமுகவிலிருந்து </div>
<div>
தூக்கி சென்ற பத்திரிகையில் இவரைப்பற்றி எழுதிய அவதூறுகள் கொஞ்ச நெஞ்சமல்ல,இது போன்ற எத்தனையோ தடைக்கற்கள் அனைத்தையும்<br />
படிக் கற்களாக்கி சமுதாயப் பேரமைப்பை வீரியத்தோடு வழிநடத்தினார்.<br />
<br />
இதனால் கழகம் எனும் எல்லையை தாண்டி சமுதாய மக்களிடத்தில்"ஒரு<br />
மக்கள் தலைவனாக"உருவெடுத்தார். இவரை புறக்கணித்த ஊர் ஜமாஅத்தார்களும் இவரை அரவணைத்துக் கொண்டனர்.</div>
<div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii1aLGO7kp1RlXMlxcEVvQKrEeMPghLK1Gn2odq_0-2VxoO1PA4GU_s9lj5CBJ36sH178DIlDjBPhW1Z-xP7x5U7aJ6gkTl2LjuaBwegCEaPN0mHy9NYTJFZ-XznAKnDZMrTjcFono_fw/s1600/Jinnah_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii1aLGO7kp1RlXMlxcEVvQKrEeMPghLK1Gn2odq_0-2VxoO1PA4GU_s9lj5CBJ36sH178DIlDjBPhW1Z-xP7x5U7aJ6gkTl2LjuaBwegCEaPN0mHy9NYTJFZ-XznAKnDZMrTjcFono_fw/s320/Jinnah_1.jpg" width="320" /></a></div>
<div>
( கடந்த ஜூலை 14 ஆம் தேதி லால்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.. இதுவே இவர் பங்கேற்ற கழகத்தின் கடைசி நிகழ்ச்சியாகும்.)</div>
<div>
</div>
<div>
பின்னர் மாநில துணைச்செயலாளராக கழகத்தில் பணி உயர்வு அளிக்கப்பட்டு கடலூர் மாவட்டத்துக்கு வெளியேயும் சென்று கழகப் பணியாற்றினார்.இதன் மூலம் பல்வேறு தரப்பினரின் அன்பையும் பெற்றார்.குறிப்பாக புதுச்சேரியில் களமாடி வரும் மனித உரிமை போராளி கோ.சுகுமாரன் அவர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி .., ஆதலால் விவசாய சங்கங்களுடன் நல்லுறவை பேணி வந்தார்.</div>
<div>
</div>
<div>
<br />
இன்றைக்கு கடலூர் மாவட்டத்தில் தமுமுக வடக்கு தெற்கு என்று இரண்டாக செயல்படும் அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது.இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது அல்லாஹ்வின் கிருபையால் தலைவர் ஜின்னா அவர்களின் உழைப்புதான். </div>
<div>
<br />
இன்றைக்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றும் சகோதரர் நெய்வேலி அபூபக்கர் சித்திக்,வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் வி.எம்.ஷேக் தாவூத்,கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக வின் இன்றைய தலைவர் மானியம் ஆடூர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் போன்ற கழகத்தின் தளபதிகள் அனைவரும் தலைவர் ஜின்னாவின் பாசறையில் பயின்ற போராளிகளாவர். </div>
<div>
</div>
<div>
<br />
வயது வித்தியாசம் பாராமல் அணைவரிடமும் நல்ல மரியாதையோடு நடந்து கொள்வார்.இரவு 2 மணிக்கு போன் செய்தால் கூட கோபப்படாமல் பேசுவார்.</div>
<div>
2006 ஆம் ஆண்டு நான் மலேசியாவில் இருந்த போது அங்கே இந்திய முஸ்லிம் சமூகத்தின் அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.கோலாலம்பூரில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்து கொண்டு,நான் வசிக்கும் ஈப்போ நகருக்கு அன்றிரவு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அப்பொழுது இந்தியாவில் நேரம் இரவு சுமார் 1 மணி இருக்கும்.அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் நான் தலைவர் ஜின்னா அவர்களுக்கு போன் செய்து "கோலாலம்பூரில் தலைவரை சந்தித்த" செய்தியை அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன்.அவரும் ஆர்வமாக என்னிடம் அந்த சமயத்திலும் கழக செயல்பாடுகள் பற்றி சளைக்காமல் கலந்துரையாடினார்.</div>
<div>
</div>
<div>
<br />
பின்னர் 1 வருடம் கழித்து நான் தாயகம் திரும்பிய சமயத்தில் சிதம்பரம் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கழகத்தின் அப்போதைய பொதுச்செயலாளரும்,அன்றைய தமிழக வக்பு வாரியத் தலைவரும்,மூத்த தலைவருமான செ.ஹைதர் அலி அவர்களை விருந்தினர் மாளிகையில் சந்தித்து சில நிமிடங்கள் நான் பேசிக் கொண்டிருந்த போது அங்கே வந்த தலைவர் ஜின்னா அவர்கள் என்னை பற்றி ஹைதர் அலி அவர்களிடம்.. "இரவு 1 மணி 2 மணி ஆனாலும் என்னிடம் தொலைபேசியில் பேசக்கூடிய சகோதரர் இவர்" என்பதாக என்னைப் பற்றி சிலாகித்துக் கூறினார். </div>
<div>
2007 ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றைக்கும் என் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கிறது.அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் கொள்ளுமேட்டில் தமுமுக சார்பாக "தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கூறி ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு அன்றைய கழக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஜே.எஸ்.ரிபாயி அவர்களும் அன்றைய மாநில செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும் தேதி கொடுத்திருந்தார்கள்.</div>
<div>
<br />
கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் கொள்ளுமேடு கிளை தமுமுக சகோதரர்கள் இதற்காக மும்முரமாக களப்பணி ஆற்றிக் கொண்டிருந்தனர்.அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதிலுமுள்ள கிளைகளுக்கு நேரில் சென்று அழைப்பு கொடுப்பது என்று முடிவு செய்து அதன் படி மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கினோம்.</div>
<div>
</div>
<div>
<br />
அதில் இன்றைய கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக செயலாளரும்,அப்போதைய கொள்ளுமேடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவருமான சகோதரர் என்.அமானுல்லாஹ்,அன்றைக்கு கடலூர் மாவட்ட தமுமுகவின் உலமாக்கள் அணி செயலாளராக இருந்த நான்,</div>
<div>
கொள்ளுமேடு கிளை தமுமுக செயலாளர் வஜ்ஹுல்லாஹ் ஆகியோர் காரில் பயணத்தை தொடக்கி நேராக தலைவர் ஜின்னா அவர்களின் வீட்டுக்கு சென்று அவரையும் எங்களின் சுற்றுப்பயனத்தொடு இணைத்து கொண்டு கடலூர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு கிளைக்கும் சென்று பொதுக் கூட்டத்துக்காக அழைப்பு கொடுத்தோம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikVFMese-EtbuNmzH2oVughYJTRmTA44E17-zfX1fMizegLWVJ6NDltfvKDK-XhVDYBDeBaQWEATWbzc0KcdMIEqrGvdwoNBrcyQ1THcKrDeo2VdOHo8B_x0QvXW0fsFo0U_zvAn8r2A4/s1600/Jinnah_3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikVFMese-EtbuNmzH2oVughYJTRmTA44E17-zfX1fMizegLWVJ6NDltfvKDK-XhVDYBDeBaQWEATWbzc0KcdMIEqrGvdwoNBrcyQ1THcKrDeo2VdOHo8B_x0QvXW0fsFo0U_zvAn8r2A4/s320/Jinnah_3.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div>
எல்லா ஊர்களையும் முடித்து விட்டு இறுதியாக லால்பேட்டையை நோக்கி நாங்கள் சென்றோம்.லால்பேட்டையை நெருங்கும் முன்பே தலைவர் ஜின்னா அவர்கள் அப்போதைய மாவட்ட துணைத் தலைவர் மர்ஹூம் முனவ்வர் ஹுசைன் அவர்களை தொடர்பு கொண்டு "நவ்வரு... நாங்க இப்போ லால்பெட்டைக்கு வந்து கொண்டிருக்கோம்.. நீ நேரா கைக்காட்டிக்கு வந்துடு"என்று என்பதாக அவரை வர சொல்லி விட்டார்.</div>
<div>
</div>
<div>
அவரும் எங்களின் வருகைக்காக கைக்காட்ட்யில் காத்துக் கொண்டிருந்த வேளையில்.... எங்களின் கார் கைக்காட்டியை நெருங்கும் பொது... எங்களோடு காரில் இருந்த கொள்ளுமேடு கிளை செயலாளர் வஜ்ஹுல்லாஹ் தலைவரிடம்... "தலைவரே... அங்கே பாருங்க... நம்ம பட்டாம்பாக்கம் ரஜாக் நிக்கிறா மாதிரி தெரியிது"என்றார். </div>
<div>
<br />
<i style="color: red;"><b>(இந்த பட்டாம்பாக்கம் ரசாக் அவர்கள் தமுமுக 2004 ஆம் ஆண்டு பிரிவினை ஏற்படும் வரைக்கும் தமுமுகவின் மாவட்ட தொண்டரணி செயலாளராக இருந்தவர்.பின்னர் ததஜவுக்கு போய் அங்கே மாவட்ட செயலாளராக இருந்து,பின்னர் மாநில நிர்வாகியாக இருந்து கொண்டிருந்த சமயம்.)</b></i></div>
<div>
<br />
உடனே தலைவர் வஜ்ஹுல்லாஹ்விடமும்,என்னிடமும் "நீங்க ரெண்டு பெரும் ரஜாக்'க்கு கிட்ட பேசிட்டு இருங்க... அந்த கேப்புல நான் வந்து அங்கே நுழைஞ்சிடுறேன்"என்றார்.நாங்கள் "என்ன....? என்று அவரிடம் கேட்ட பொது.. "தமுமுகவிலிருந்து ரஜாக் வெளியில் போனதிலேர்ந்து அவரை நான் சந்திக்கவும் இல்லை... போன்ல பேசலாம்ன்னு அவர் மொபைல்க்கு போன் செஞ்சா அப்பவும் அவர்கிட்ட பேச முடியிறது இல்ல...இன்னிக்கி நல்ல சந்தர்பம்.. ரஜாக்'கை எப்படியாவது சந்திச்சிரனும். என்றார்.</div>
<div>
உடனே நானும் வஜ்ஹுல்லாஹ்வும் காரிலிருந்து இறங்கி... ரஜாக்'கை நோக்கி சென்று சலாம் சொல்லி கை கொடுத்து தலைவரின் ப்ளான் படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.</div>
<div>
</div>
<div>
<br />
அந்த சமயத்தில் தலைவர் அங்கே நுழைந்து ரஜாக் அவர்களின் கரங்களை பிடித்து கொண்டு.."ராஜாக்கு... எப்படி இருக்கே..? என்று அவரிடம் அக்கறையோடு நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.</div>
<div>
</div>
<div>
<span style="color: red;">(<b> இங்கே இன்னொரு முக்கியமான விசயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.மலேசியாவுக்கு போயிருந்த பிஜே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு,அவ்வாறு அவர் வெளியேற்றப்பட்டதற்கு</b></span></div>
<div>
<span style="color: red;"><b> தமுமுகவும்,தமிமுன் அன்சாரியும் தான் காரணம் என்று வழக்கம் போல அண்ணன் பிஜே தமுமுகவை "காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்ததால்,</b></span></div>
<div>
<span style="color: red;"><b>அப்பொழுது ததஜவினர் "ரொம்பவும் தமுமுகவினர் மீது கொலைவெறியில் இருந்தனர்.இந்த சமயத்தில் தான் ஜின்னா - ரசாக்</b></span></div>
<div>
<span style="color: red;"><b>இடையில் சந்திப்பு நடைபெறுகிறது.)</b></span></div>
<div>
<br /></div>
<div>
தமக்கு துரோகம் இழைத்தவர்களோடும் கூட நல்லுறவை பேண வேண்டும் என்று விரும்பிய அந்த நல்ல இதயம் இன்று நம்மை விட்டு அல்லாஹ்வின் பால் சென்று விட்டது என்ற தகவல் என் காதுகளில் எட்டியபோது எனது இதயம் சுக்கு நூறாகிப் போனது.</div>
<div>
</div>
<div>
<br />
கடந்த ஆண்டு சிதம்பரம் நகருக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வருகை தந்த போது,அன்றைய தினத்தில் தான் தலைவரை நான் கடைசியாக நேரில் சந்தித்தேன்.கடந்த ரமளானில் திடீரென நான் அமீரகத்துக்கு புறப்பட வேண்டிய கட்டாய சூழல் உருவான போது ,தலைவரை நேரில் சென்று சந்தித்து என்னால் விடைபெற முடியவில்லை.. விமான நிலையத்துக்கு காரில் பயணித்துக் கொண்டே.. தலைவரிடம் பயணம் சொன்னேன்.அப்பொழுது கூட அவர் என்னிடம்... "என்ன ரிபாயி... உன்கிட்ட நேரில் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன்... முடியாமல் போயிடுச்சே..."என்று வருத்தப் பட்டார்.தொலைபேசியிலேயே நீண்ட </div>
<div>
நேரம் இயக்க-சமுதாய விசயங்களை என்னிடம் அப்பொழுது பேசினார். </div>
<div>
</div>
<div>
<br />
கடந்த வருடம் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தை அவர் செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரத்தில் தலைமையேற்று நடத்தினார்.அன்றைய தினத்தில் விடுமுறையில் தாயகம் சென்றிருந்த வேளையில்,காஞ்சி மாவட்டத்தில் விபத்து ஒன்றில் சிக்கி பலியான அமீரகத்தில் (தமுமுக நிர்வாகியின் நிறுவனத்தில்) பணியாற்றிய ஒரு மாற்று மத பொறியாளர் சம்பந்தமாக அவரிடம் பேசினேன்.இதுவே அவரிடம் நான் கடைசியாக பேசியது.</div>
<div>
</div>
<div>
<br />
தலைவரே...... என்று உம்மை நான் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம்... "சொல்லுங்க ரிபாய்"..... என்று சொல்வீரே.... இனி உன் குரலை கேட்க முடியாமல் போயிடுச்சே.......</div>
<div>
இன்ஷா அல்லாஹ் உம்மை நான் மறுமையில் சந்திக்கிறேன்...</div>
<div>
</div>
<div>
<br />
அல்லாஹ் உமது பாவங்களை மன்னித்து உமது சேவைகளை அங்கீகரித்து... ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தில் உம்மை சேர்ப்பானாக என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...</div>
<div>
</div>
<div>
<br />
கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி </div>
<div>
அல் அய்ன்.</div>
</div>
</div>
கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-91787252213522209622012-06-10T17:18:00.001+04:002012-06-10T17:35:09.376+04:00மேலப்பாளையத்தில் நடைபெறும் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் பொதுக் கூட்டத்தின் நேரலை...நன்றி: பெரியார் தளம்.<iframe width="560" height="340" src="http://cdn.livestream.com/embed/tamil24news?layout=4&height=340&width=560&autoplay=false" style="border:0;outline:0" frameborder="0" scrolling="no"></iframe><div style="font-size: 11px;padding-top:10px;text-align:center;width:560px">Watch <a href="http://www.livestream.com/?utm_source=lsplayer&utm_medium=embed&utm_campaign=footerlinks" title="live streaming video">live streaming video</a> from <a href="http://www.livestream.com/tamil24news?utm_source=lsplayer&utm_medium=embed&utm_campaign=footerlinks" title="Watch tamil24news at livestream.com">tamil24news</a> at livestream.com</div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-89890069950013041982012-05-18T19:45:00.001+04:002012-05-18T19:46:12.183+04:00இஸ்லாத்தில் கடவுள் கொள்கை - பேரா முனைவர் அப்துல்லாஹ் உரை<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/oAdbByVhsww" frameborder="0" allowfullscreen></iframe> <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comKollumedu, தமிழ்நாடு, India11.3337884 79.551211911.3182194 79.5314709 11.349357399999999 79.5709529tag:blogger.com,1999:blog-1174512620876631199.post-16487973174954027952012-04-16T19:46:00.000+04:002012-04-16T19:46:00.338+04:00துபையில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpGpKO4NqG50tUISicZe_CWrkg_Q5x2NkRnighlKtsa-sKkO0OEBAy0MM7FsX1zR7EjEuywielECOQWhVH4SwR00xGEbT834WvaPz-6Do6hblTSs-vik4OQrN8_EQ0UjD3fUefDENXSyE/s1600/1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpGpKO4NqG50tUISicZe_CWrkg_Q5x2NkRnighlKtsa-sKkO0OEBAy0MM7FsX1zR7EjEuywielECOQWhVH4SwR00xGEbT834WvaPz-6Do6hblTSs-vik4OQrN8_EQ0UjD3fUefDENXSyE/s320/1.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTxzIH8laJGA1YOBdVxe84a1ZRnNSMMEozh2oW5BtLcA-zaWqIX80_3aazUEbfWzztUvTbsgL2zPvkjnplgMvUMlC9OaF6NYj9xjq-JeUFLfdlBlxpOcUq1Pzvkws2Cx0RTtseSi-zm-o/s1600/2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTxzIH8laJGA1YOBdVxe84a1ZRnNSMMEozh2oW5BtLcA-zaWqIX80_3aazUEbfWzztUvTbsgL2zPvkjnplgMvUMlC9OaF6NYj9xjq-JeUFLfdlBlxpOcUq1Pzvkws2Cx0RTtseSi-zm-o/s320/2.JPG" width="238" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1L1nRrxfhAY8d6_2BoTj9qLQWIwFDswBGbiBYO0c7lVRFJHNXao_E8FYnB_jNa-Fr11_iZMzP66GkKthOTy4Tx5uJoZ5ycjQAcZVOZuUn4nSOzV3j3Fl4fa_zSajv-WJj78Ji7eWGXHM/s1600/13042012521.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1L1nRrxfhAY8d6_2BoTj9qLQWIwFDswBGbiBYO0c7lVRFJHNXao_E8FYnB_jNa-Fr11_iZMzP66GkKthOTy4Tx5uJoZ5ycjQAcZVOZuUn4nSOzV3j3Fl4fa_zSajv-WJj78Ji7eWGXHM/s320/13042012521.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIGAwEu9TF8W9mxgOvfR6J4Ts8zW13qCNj103skefk1uqDvtusNg7jVz3teiRujRVzYPesobtX7nOoQVXuiP5Fn9cEzCSg8OZACaWRH5jjgl3XdquLzRQrXNq_g8ixskfUHgz_0jVDYnM/s1600/3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIGAwEu9TF8W9mxgOvfR6J4Ts8zW13qCNj103skefk1uqDvtusNg7jVz3teiRujRVzYPesobtX7nOoQVXuiP5Fn9cEzCSg8OZACaWRH5jjgl3XdquLzRQrXNq_g8ixskfUHgz_0jVDYnM/s320/3.JPG" width="238" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSGdRtQ75WN_TpYdMzVbZcVNv3TqfRd3KiqkSgbmP_BgZsfRMQxx58KtAiAchx7KRv1pLAp7B4DaR9bHzoI7y0nKLmnCZIBV5XX14el3rLq2PWQzJcZLteSENcuEIEO4ild2-AvSg0vho/s1600/4.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSGdRtQ75WN_TpYdMzVbZcVNv3TqfRd3KiqkSgbmP_BgZsfRMQxx58KtAiAchx7KRv1pLAp7B4DaR9bHzoI7y0nKLmnCZIBV5XX14el3rLq2PWQzJcZLteSENcuEIEO4ild2-AvSg0vho/s320/4.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1-SbUOwRJv4nOJ7HX7GmQe0RUL8PaPwYROTTpucFQbL8x1iRdn8Z1BszmuJRal4tae7tMAJugtyecv6ezqToaijvBhQdxNnyHt_qzYaAXVTnsRo4fQjUdT3udd2ybZeyYc3VAsPI_Mwc/s1600/5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="139" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1-SbUOwRJv4nOJ7HX7GmQe0RUL8PaPwYROTTpucFQbL8x1iRdn8Z1BszmuJRal4tae7tMAJugtyecv6ezqToaijvBhQdxNnyHt_qzYaAXVTnsRo4fQjUdT3udd2ybZeyYc3VAsPI_Mwc/s320/5.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJPXvKGhvLBf59SR-VEeVy184arFZEDg53TnNjQm75qxkzK2mW4bMJkFM00XZjfL7wgPRPj6qOvX5Nm_tvkpbT0xv9w0hW30Oz6lFIRWu5MvcvZRWTc2SeUH6NroXMbQk1c829P33dTrM/s1600/6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="224" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJPXvKGhvLBf59SR-VEeVy184arFZEDg53TnNjQm75qxkzK2mW4bMJkFM00XZjfL7wgPRPj6qOvX5Nm_tvkpbT0xv9w0hW30Oz6lFIRWu5MvcvZRWTc2SeUH6NroXMbQk1c829P33dTrM/s320/6.jpg" width="320" /></a></div>
<div style="text-align: left;">
<div id="yui_3_2_0_1_1334590269083153">
அரபுலகின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கப்படும் துபையில்,கடந்த 12,13,14,ஆகிய
தேதிகளில்(வியாழன்,வெள்ளி,சனி) "அமைதி வழியில் உலகை ஒருங்கிணைப்பது"என்ற
கருப்பொருளில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு, துபை உலக வர்த்தக மையத்தில்
நடைபெற்றது.12 <span><span>ந் </span></span>தேதி வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்சிகள் அலுவல்
ரீதியாக தொடக்கி வைக்கப்பட்டது.<br />இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக வெள்ளிக்கிழமை, ஜுமுஆ தொழுகை இந்த மாநாட்டு அரங்கில்
நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் குவைத்தை
சேர்ந்த பிரபல இஸ்லாமிய அறிஞர் ஷைக் மிஷ்அரி அல் அ<span>ஃ</span>பாஸி குத்பா உரை நிகழ்த்தி ஜுமுஆ தொழுகையை நடத்தினார்.<br />புகழ் பெற்ற இஸ்லாமிய வல்லுனர்களான டாக்டர் ஜாகிர் நாயக்,யூசு<span id="yui_3_2_0_1_1334590269083150">ஃப் எஸ்டிஸ்,அப்துல் ரஹீம் கிரீன்,ஹுசைன் யீ,மற்றும் சயீத் ராகீஷ்(சோமாலியா),டாக்டர் தவ்<span>ஃ</span>பீக் சவுத்ரி (ஆஸ்திரேலியா), முஹம்மது சலாஹ்(அமெரிக்கா),அப்துல் பாரி யஹ்யா (அமெரிக்கா),முஹம்மது அல்
ஷரீ<span id="yui_3_2_0_1_1334590269083147">ஃப்
(கனடா),அஹமது ஹாமிது (ஹைதராபாத்,இந்தியா),மற்றும் மாயன் குட்டி மாதிர்
(கேரளா அரசு வழக்கறிஞர்) ஆகியோர் இஸ்லாம் குறித்த பல்வேறு தலைப்புகளில்
மாநாட்டு அரங்கில் உரையாற்றினர்.ஒவ்வொரு அறிஞர்களின் உரைக்கு பின்னர்
பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அறிஞர்கள் பதிலளித்தனர்.<br />
மாநாட்டின் இரண்டாவது நாளிலும், மற்றும் இறுதி நாளின் இறுதி நிகழ்ச்சியாக
அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி விரிவாக
நடைபெற்றது.முஸ்லிமகாத சகோதர சகோதரிகள் இஸ்லாம் குறித்து தங்களுக்கு
இருக்கும் சந்தேகங்களை இந்நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு
தெளிவு பெற்றுக் கொண்டனர்.அவர்களில் பலர் அல்லாஹ்வின் கிருபையால் அதே
நேரத்தில் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.இந்த
மாநாட்டில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி
மாத்திரமே நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.<br />
இம்மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக,இன்றைய நவீன அறிவியல்
கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாம் எவ்வாறு முன்னோடியாக விளங்குகிறது என்பதை
உபகரணங்களுடன் விளக்கி நடைபெற்ற இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி,இஸ்லாத்தின்
சிறப்புக்களை முஸ்லிமாகாத சகோதரர்களுக்கு இலகுவாக விளங்க செய்ததில் முக்கிய
பங்காற்றியது.இதல்லாமல் ஹலால் பொருள்களை கொண்ட
சந்தை,புத்தகம்,குறுந்தகடுகள் விற்பனை மகளிர்,சிறுவர் அரங்கம் என பல்வேறு
சிறப்பான அம்சங்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் இடம்பெற்றிருந்தது.<br />
பல்வேறு சர்வதேச பொருளாதார பிரகடனங்களுக்கும்,கண்காட்சிகளுக்கும் பெயர்போன
துபை உலக வர்த்தக மையம்,இந்த மாநாடு நடைபெற்ற மூன்று நாள்களில் முழுக்க
முழுக்க இஸ்லாமிய மயமாக மாறிப்போனது.சுருங்க சொன்னால்,நவீனத்தை</span></span><span><span><span> </span></span></span><span><span> இஸ்லாமிய
மயமாக்கி காட்டியதில் இம்மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அல்லாஹ்வின் கிருபையால்
சாதனை புரிந்துள்ளனர்.</span></span></div>
<div>
<span><span> </span></span></div>
<div>
<span><span>-களத்தொகுப்பு கொள்ளுமேடு ரி<span>ஃபாயி</span></span></span></div>
<div>
<span><span><br /></span></span></div>
</div>
<br /></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comWorld Trade Centre Hotel 2 - Dubai - United Arab Emirates25.22749 55.29039125.2256945 55.2879235 25.2292855 55.2928585tag:blogger.com,1999:blog-1174512620876631199.post-72085425362937847612012-03-28T22:03:00.000+04:002012-03-28T22:03:21.383+04:00இன்ஷா அல்லாஹ் லால்பேட்டையில் "திருக்குர்ஆனின் மகத்துவத்தினை விளக்கும் கண்காட்சி"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyXwEbYUq09zUu4VLgIiCx-o_7CuAyuNSX_zhvtYQWPCnx4p8KjyXRF8rd2m43IxyI1SHhSjD2L0Inftl1mjhjS7evhKWTREKAJ2LICGBl01xgkCnJAUjki0K7iBBxPBAzAZGFY66jgFY/s1600/imd1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyXwEbYUq09zUu4VLgIiCx-o_7CuAyuNSX_zhvtYQWPCnx4p8KjyXRF8rd2m43IxyI1SHhSjD2L0Inftl1mjhjS7evhKWTREKAJ2LICGBl01xgkCnJAUjki0K7iBBxPBAzAZGFY66jgFY/s320/imd1.jpg" width="274" /></a></div>
இஸ்லாமிய ஒளியினை உலகெங்கிலும் பரப்பிடும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் எனும் கலா சாலையினை கொண்டிருக்கும் லால்பேட்டை நகரில் இஸ்லாத்தினை நவீன உத்திகளுடன் பரப்பிட நடைபெறும் இம்மகத்தான முயற்சி வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.<br />
<br />
<br />
<br />
கொள்ளுமேடு ரி<span>ஃ</span>பாயி<br />
அல் அய்ன். </div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comKollumedu, தமிழ்நாடு, India11.3337884 79.551211911.3182194 79.5314709 11.349357399999999 79.5709529tag:blogger.com,1999:blog-1174512620876631199.post-75184585913338032652012-03-23T14:30:00.001+04:002012-03-23T14:30:36.415+04:00நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqOgdhrAZp-XO8XYEDzXUe8DljydYijUNH9VlJDoQoVZG97LpV4rdGq9qdnmi1Uq-FUTrzexdMLiPgNDwTFftSSFsL6-2utDGEKVjkZeMWgLdIZcV_e1FDDXpAvMLz1ZRZJ8ceC_As37g/s1600/crist+sister.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqOgdhrAZp-XO8XYEDzXUe8DljydYijUNH9VlJDoQoVZG97LpV4rdGq9qdnmi1Uq-FUTrzexdMLiPgNDwTFftSSFsL6-2utDGEKVjkZeMWgLdIZcV_e1FDDXpAvMLz1ZRZJ8ceC_As37g/s1600/crist+sister.jpg" /></a></div>
<span class="hasCaption">நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச்<br /> சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக<br />
அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய
நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய
பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின்
அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.<br /> <br /> பின்னர் பருவ வயதில்
தேவாலயத்தைச் சேர்ந்த ''Liaision Maria'' என்ற கல்வி நிறுவனத்தில்
சேர்ந்தேன். Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்<br /> <br /> இந்த நிறுவனத்தின் முக்கிய
குறிக்கோள் என்னவெனில் ''Stray Sheeps'' என்று சொல்லப்படக் கூடிய
''காணாமல் போன ஆடுகளை'' தேடுவதாகும். ''காணாமல் போன ஆடுகள்'' என்று
அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள்
குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக ''காணாமல்
போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, ''கிறிஸ்தவர்களல்லாத
மற்றவர்களை''. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற
முஸ்லிம்களை அவர்கள் ''காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள்.
நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம்
அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.<br /> <br /> ஒரு வருடம் கழித்த பிறகு
நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ
அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ
தேவாலயத்தில் சேர்ந்தேன்.<br /> <br /> சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம்
ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான்
கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது.
கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து,
அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.<br /> <br />
பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும்
தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப்
படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு
(Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி
பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம்
என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.<br /> <br />
''இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால்
இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்'' என்று எங்களுக்கு
விளக்கினார்கள்.<br /> <br /> இந்தோனேசியாவில்,<br /> <br /> o ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்<br /> <br /> o முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்<br /> <br /> o வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்<br /> <br /> o ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்<br /> <br /> o தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்<br /> <br />
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும்
''இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்'' என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள்.
ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு
புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம்,
''நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள
நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்'' என்று கூறினேன்.<br /> <br /> உதாரணமாக,<br /> <br /> பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும்<wbr></wbr><span class="word_break"></span> இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.<br /> <br />
மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும்,
திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும்,
சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர்
அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!<br /> <br /> அயர்லாந்து
குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே
தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு
நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது
கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான்.
அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள்.
ஐரோப்பிய சமூகம் அவர்களை ''அயர்லாந்தின் தீவிரவாதிகள்'' என்று கருதுகிறது.
அவர்கள் ''ஐரோப்பிய தீவிரவாதிகள்'' என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.<br /> <br />
இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள்
- இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக்
கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.<br /> <br /> அப்போது நான் என்னுடைய
மேலதிகாரியான பாதிரியாரிடம், ''இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று
நிரூபிக்கப்படவில்லையே'' கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை,
இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்
வைத்தேன். அதற்கு, ''நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க
வேண்டும்'' என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.<br /> <br /> நான்
குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக ''இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்''
என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற
''திரித்துவக் கடவுள் கொள்கைக்கு'' (Trinity of God) முற்றிலும்
மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா
இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ
தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த
போது ''கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity)
என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப்
படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது ''இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது
(குர்ஆன்) உண்மையானது தான்'' என்றும் கூறிற்று.<br /> <br /> மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.<br /> <br /> ''கடவுளின் திரித்துவக் கொள்கை'' (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.<br /> <br /> கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான்<br /> இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம்<br /> பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும்<br /> ஆச்சரியமடைந்தார்.<br /> <br />
அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர்,
ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு
கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.<br /> <br /> அதற்கு நான்,
உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து
சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக
இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்<br /> <br />
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ''இதற்கு சாத்தியமே இல்லை''
என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு
சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று
சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று
கூறினேன்.<br /> <br /> அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார்,
''முடியாது'' என்று கூறினார். முன்பு ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று
கூறிய அவர், தற்போது ''முடியாது'' என்று மட்டும் கூறினார்.<br /> <br /> நான் கேட்டேன், ''ஏன்?''<br /> <br />
அதற்கு பாதியார், ''இது நம்பிக்கை''. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ
அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள்
எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள்
எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம்
செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.<br /> <br /> இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப்<br /> பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான<br />
ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து
கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.<br /> <br />
ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''இந்த மேசைகளை உருவாக்கியது
யார்?'' என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே
பதிலளிக்குமாறு கூறினார்.<br /> <br /> அதற்கு நான் ''இந்த மேசைகளை உருவாக்கியது 'தச்சர்கள்' (Carpenters)'' என்றேன்.<br /> <br /> ''ஏன்?'' பாதிரியார் கேட்டார்.<br /> <br />
அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு
வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே
இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் ''தச்சார்களாக'' (Carpenters)
மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு
ஒருபோதும் முடியாது.<br /> <br /> ''நீ என்ன சொல்ல வருகிறாய்?'' பாதிரியார் கேட்டார்.<br /> <br />
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும்
உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு
மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே
இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான்.
ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை
மனிதனோடு ஒப்பிட முடியாது.<br /> <br /> அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன்.
ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை
தேர்தெடுத்து அவரை தங்களின் ''ஜெனரலாக'' தேர்தெடுத்தால் அந்த தேர்வு
செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு
செய்திருப்பினும் சரியே!<br /> <br /> ''நீ என்ன சொல்ல வருகியாய்?'' பாதிரியார்<br /> <br />
அதற்கு நான், ''மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள்
படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து
அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது'' என்று நான் அந்த
பாதிரியாரிடம் விளக்கினேன்.<br /> <br /> பின்னர் நான் தொடர்ந்து படித்து
வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''என்னுடைய ஆராய்ச்சிகளின்
படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325
ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்'' என்று
கூறினேன்.<br /> <br /> இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.<br /> <br /> பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே<br /> ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய<br /> இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த<br />
கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும்
Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு
இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.<br /> <br /> அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்<br /> <br /> <br /> <a href="http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=1734%3A2010-03-26-02-20-58&catid=88%3A2010-05-22-12-46-16&Itemid=825" rel="nofollow nofollow" target="_blank">http://www.nidur.info/<wbr></wbr><span class="word_break"></span>index.php?option=com_conten<wbr></wbr><span class="word_break"></span>t&view=article&id=1734%3A2<wbr></wbr><span class="word_break"></span>010-03-26-02-20-58&catid=8<wbr></wbr><span class="word_break"></span>8%3A2010-05-22-12-46-16&It<wbr></wbr><span class="word_break"></span>emid=825</a><br /> <br /> <a href="http://www.youtube.com/watch?v=qSM1hu5gtus&feature=related" rel="nofollow nofollow" target="_blank">http://www.youtube.com/<wbr></wbr><span class="word_break"></span>watch?v=qSM1hu5gtus&feature<wbr></wbr><span class="word_break"></span>=related</a></span><br />
<span class="hasCaption">நன்றி:சகோதரர் அக்பர் அலி.</span><br />
<span class="hasCaption"> http://www.facebook.com/profile.php?id=100000998285851 </span></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-75084495274423607012012-03-02T19:17:00.000+04:002012-03-02T19:18:01.828+04:00தவ்ஹீது vs சுன்னத் வல் ஜமாஅத்..?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="hasCaption">தவ்ஹீது (ஏகத்துவம்)<br /> <br /> தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.<br /> <br />
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே
என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும்
குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப்
பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர்
யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு
'தவ்ஹீத்' என்று பெயர்.<br /> <br /> அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்<br /> <br />
'அஹ்லுஸ் ஸுன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு
அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத்
வல்ஜமாஅத் ஆவர்<br /> <br /> இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி
அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே
முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற
வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று
எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில்
வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!<br /> <br /> இஸ்லாத்தை பொறுத்தவரை
அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர்
முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ - திருத்தம்
செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான் மறையில்,<br /> <br />
''அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு
விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான்
கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும்
அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான
வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.'' ((33:36))<br /> <br /> திருக்குர்-ஆன் மிக
தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவுக்கோலை
ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய
அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது
அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக
கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.<br /> <br /> இறைவனை மையப்படுத்தும்
விசயங்களிலெல்லாம் இறை நேசர்களை முன்னிலைப்படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த
கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக
குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக பார்வையில்
அறிமுகப்படுத்தப்படுகின்றனர<wbr></wbr><span class="word_break"></span>்.<br /> <br /> சுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்<br /> <br />
அல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில்
எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை
முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...<br /> <br /> கப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.<br /> <br />
பிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம்
துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும்
எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என
தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே!<br /> <br /> அதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம்<br /> <br /> அல்லாஹ் மட்டுமே வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும்<br /> <br />
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள
வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை
தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.<br /> <br /> மேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால்<br /> <br /> o எந்த தேவைக்கும் என்னை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ,<br /> <br /> o எனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்?<br /> <br />
ஒருவரை நாம் மதிப்பது உண்மையென்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான
ஒன்று. இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள்
மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.<br /> <br />
அவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக
எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெனில் மார்க்கம்
அங்கீகரித்திராத செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே
செய்யாத, முன்மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில் செய்வதற்கு மார்க்க ரீதியில்
ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..?<br /> <br /> இவைதான்<br /> <br /> இப்படித்தான்<br /> <br /> தர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில் எழுப்ப வேண்டிய கேள்விகள்...<br /> <br /> ஆனால்,<br /> <br /> "தர்காவுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...!"<br /> <br />
ஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின்
செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் செயலில் மாற்றத்தை
ஏற்படுத்துகிறான். ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி
மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்<br /> <br /> அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.<br /> <br /> ஒருவரை விமர்சிப்பதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் இருக்கவேண்டும்.<br /> <br />
1. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக
அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே
நமக்கு சாத்தியம்.<br /> <br /> 2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்<br /> <br /> இன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம்<wbr></wbr><span class="word_break"></span>
அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட
வரலாறுகளே. அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள்
எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள்
முன்னிலைப்படுத்தப்படுகின்ற<wbr></wbr><span class="word_break"></span>ன.<br /> <br />
நம்பக தன்மையில் குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக்
கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை
குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாக தான் இருக்கும். ஒருவர்
மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில்
அடைந்துக்கொள்வார் எனும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே!<br /> <br />
மேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக
மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக
இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி
விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது. இதன்
விளைவாய் தனிமனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.<br /> <br /> மேலும் இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?<br /> <br />
இவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில்
முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல..! என்றும்
தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின்
ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத்
காரனல்ல..! என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.<br /> <br /> உங்களில் சில
பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி
இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ! இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை
வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு!<br /> <br />
அறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும்
முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க
கடமையும் கூட!. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன
செய்ய முடியும் சொல்லுங்கள்???<br /> <br /> நபி வழியில் தான் தமது வாழ்வை
அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில்
நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய்
செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.<br /> <br />
இறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால்.
அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்!<br /> <br /> நாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்! அல்லாஹ் நன்கு அறிந்தவன்</span><br />
<span class="hasCaption">நன்றி:அக்பர் அலி </span><br />
<span class="hasCaption">http://www.facebook.com/profile.php?id=100000998285851 </span></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-3162981824415755982012-02-25T16:12:00.000+04:002012-02-25T16:12:07.223+04:00அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் மாதாந்திர மார்க்க விளக்க பொதுக்கூட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் மாதாந்திர மார்க்க விளக்க
பொதுக்கூட்டம் இன்று (24-02-2012 வெள்ளிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்கு
பின்னர்,அல் அய்ன் நகரின் தொழிலாளர் முகாம்கள் நிறைந்துள்ள பகுதியான
மஜியாதில் கிளின்கோ கேம்ப் பள்ளிவாசலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கழக
ஊழியர் சகோதரர் ஆத்தூர் ஷேக் சபி தலைமை தாங்கினார்.இஸ்லாமிய அழைப்பாளர்
சகோதரர் நாகூர் அபுதர் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்.<br />
அமீரக தமுமுக துணை செயலாளர் சகோதரர் டாக்டர் அப்துல் காதர்
"பிரார்த்தனை" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அமீரக தமுமுக செயலாளர்
சகோதரர் யாசீன் நூருல்லாஹ் அவர்கள் தமுமுக வின் இன்றைய நிலை குறித்து
உரையாற்றினார்.
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyh_zczSn9ChyRpwhGGPtPeRv56gvVOZjd7j9SGTLqh4Uz8xtV8nbEEXVMXbD0-r998te9bNb8jOuVUroue2ikuC5p_UEor81XO2x8-s8-9XscEyaMxfXAn7lC1NWFK5mPmKbmkV_CAac/s1600/askar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyh_zczSn9ChyRpwhGGPtPeRv56gvVOZjd7j9SGTLqh4Uz8xtV8nbEEXVMXbD0-r998te9bNb8jOuVUroue2ikuC5p_UEor81XO2x8-s8-9XscEyaMxfXAn7lC1NWFK5mPmKbmkV_CAac/s320/askar.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiselLFELbj0UPxOKFP2GSJbENS9yoSyfa5dLdPDPnY1vAKMWjVXA6FcvWqirg8tzufJjcrMn2Qd4edEMdyhohrI_dLtIg7DpxbPyamb5InIJb0RXJi9jRxYwyUWobyh1Ie8-DCiftDufU/s1600/dr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiselLFELbj0UPxOKFP2GSJbENS9yoSyfa5dLdPDPnY1vAKMWjVXA6FcvWqirg8tzufJjcrMn2Qd4edEMdyhohrI_dLtIg7DpxbPyamb5InIJb0RXJi9jRxYwyUWobyh1Ie8-DCiftDufU/s320/dr.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjowzFuq0fO1QYZjQ7EnqvXGsv1s_M3-jZGhhublZ2tuVaxUQeHWiD8GZLSxw90Kmv5de4fQkiXA54gY8UBhzSYeegz9O87UbqmrnWBwwfEZ4UQYcQtQwZUPXK-vih_WHRJqC5Q5PZT-kc/s1600/noorull.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjowzFuq0fO1QYZjQ7EnqvXGsv1s_M3-jZGhhublZ2tuVaxUQeHWiD8GZLSxw90Kmv5de4fQkiXA54gY8UBhzSYeegz9O87UbqmrnWBwwfEZ4UQYcQtQwZUPXK-vih_WHRJqC5Q5PZT-kc/s320/noorull.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUHgadyPM5dfLm_-rIrA12xmgiHIZWlchIrFTEKFQ6FpU5JNzMGb9c7s97rgXz2f7NCgH30Ymw5hIjbp29iRleSu0w26t0q2XorzkUCD-BVC11LKAS_2gYWWrKDY8OX-oJGBpnjHhDAW8/s1600/safi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUHgadyPM5dfLm_-rIrA12xmgiHIZWlchIrFTEKFQ6FpU5JNzMGb9c7s97rgXz2f7NCgH30Ymw5hIjbp29iRleSu0w26t0q2XorzkUCD-BVC11LKAS_2gYWWrKDY8OX-oJGBpnjHhDAW8/s320/safi.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMcj-sL145xLwkKCSqFXMMKObAEmjbxnCsxE0rngqrv-Tj_c6vXogUWV02M91ljO-YRF6Ag7Q9Mo2ZYH7zVXY1Nn5Gc-qMYqQG6iemoqjA23M0xhEKAxMV-EkHmRi0KhWkhRqug26ofF0/s1600/tmmk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMcj-sL145xLwkKCSqFXMMKObAEmjbxnCsxE0rngqrv-Tj_c6vXogUWV02M91ljO-YRF6Ag7Q9Mo2ZYH7zVXY1Nn5Gc-qMYqQG6iemoqjA23M0xhEKAxMV-EkHmRi0KhWkhRqug26ofF0/s320/tmmk.jpg" width="320" /></a></div>
மஜியாத் கிளின்கோ கிளை தமுமுக தலைவர் சகோதரர் அம்பகரத்தூர் ஹபீப்
ரஹ்மான் நன்றி கூறினார்.பின்னர் துஆவுடன் கூட்டம்
நிறைவுற்றது.மஜியாத்உள்ளிட்ட அல் அய்ன் நகரின் பல்வேறு பகுதியிலிருக்கும்
ஏராளமான தமிழக சகோதரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.இஷா தொழுகைக்கு
பின் வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.மஜியாத் கிளை
சகோதரர்கள் நிகழ்ச்சிக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.</div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-46783855308767934912012-02-12T19:23:00.000+04:002012-02-12T19:23:04.779+04:00இனியொரு விதி செய்வோம்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzOtU08FjawUOE9SoZOUCjctD4f5YDX7TQjdHABmu6_U6CsgUbgzePtoVY9frW-8ykbfnXI96n9Mn9Mw9PfGDsAcYpxdw0Ts7Jq_jNYhFsLnI0HwjgHbiVgo8ZEaGaLuvQntOz7Hzi3ig/s1600/media+violance.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzOtU08FjawUOE9SoZOUCjctD4f5YDX7TQjdHABmu6_U6CsgUbgzePtoVY9frW-8ykbfnXI96n9Mn9Mw9PfGDsAcYpxdw0Ts7Jq_jNYhFsLnI0HwjgHbiVgo8ZEaGaLuvQntOz7Hzi3ig/s1600/media+violance.jpg" /></a></div>
<div style="text-align: left;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 15px; line-height: 20px;">இன்றைய காலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் யுகம் என்று நம்பப்படுகிறது.கணினி,இணையதளத்தின் பயன்பாடு மிக உச்சத்தில் இருப்பதன் மூலம் உலகின் ஒரு மூலையில் நடக்கும் ஒரு சம்பவத்தை வீடியோ,புகைப்படம் வடிவில் செய்தியாக,அடுத்த நொடியிலேயே உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லும் அளவுக்கு ஊடகங்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைத்துள்ளது.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 15px; line-height: 20px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 15px; line-height: 20px;">அனால் இதன் மறுபக்கம் கருப்பு நிறம் கொண்டவையாக அமைந்திருக்கிறது.கல்வி,வணிகம்,சமூக மேம்பாட்டு விசயங்களுக்காக இவை பயன்படுத்தப் படுவதை விட</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 15px; line-height: 20px;"> ஆபாசம்,வன்முறை போன்றவற்றை ஒருங்கிணைக்கும் 'குற்றங்களின் ஒட்டுமொத முனையமாக'செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது.இதில் முக்கிய பங்கு வகிப்பது சினிமா.இந்தியாவைப் பொறுத்த வரை சினிமா என்பது பொழுது போக்கு ஊடகம் என்ற நிலையை தாண்டி,வாழ்வில் அணைத்து நிலையிலும் ஊடுருவி மக்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கிறது.<br />இந்த சினிமாக் கவர்ச்சி தான் இந்த தேசத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது."கோட்டைக்கு செல்லும் வழி கோடம்பாக்கம்" என்று சொல்லப்படும் அளவுக்கு பிரம்மாண்ட சக்தியாக வளர்ச்சியடைந்திருக்கும் அளவுக்கு,சமூகத்தில் நல்ல மாற்றங்களை இந்த சினிமா துறை உருவாக்கவில்லை.<br />இன்றைய இளைய தலைமுறை மத்தியில் நாளுக்கு நாள் நற்பண்புகள் குறைந்து வருகிறது.பெற்றோர்களை மதிக்காமை ஆசிரியர்களை அவமதிப்பது என்று தீய பண்புகளின் உறைவிடமாக நமது மாணவ சமூகம் மாறி வருவதை தான் சில நாள்களுக்கு முன்பு சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் தனது ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமும்,இளம் பெண்ணை கல்லூரி மாணவர்கள் நால்வர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்த சம்பவமும் உணர்த்துகிறது.<br />மாணவ சமூகத்திடம் இத்தகைய கலாசார சீரழிவுகளை உருவாக்கி கொண்டிருக்கும் இந்த மாதிரியான கழிசடை சினிமாக்களை அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல்,அவற்றுக்கு வரிவிலக்கும் அளித்து வருவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.<br />சமூகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரவேண்டிய பொறுப்பு அரசுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது.சினிமாக்காரர்களால் தீர்மானிக்கப் படுகின்ற நமது அரசாங்கங்களிடமிருந்து இத்தகைய ஆரோக்கியமான நடவடிக்கையை நாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.தேர்தல் வரும் காலங்களில் கவர்சிகரமான வாக்குறுதிகளையும்,போலியான முழக்கங்களை நம்பியும்,காந்தி படம் போட்ட நோட்டுக்ககவும்,டாஸ்மாக் பாட்டலுக்காகவும் எமது பொன்னான வாக்குகளை வீணடிக்காமல்,நல்ல மனிதர்களுக்கு வாக்களித்து சமூக மாற்றத்திற்கு வித்திடும் பொறுப்பு குடிமக்களாகிய நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை இங்கே நாம் மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.</span>
</div>
</div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comAl Ain - United Arab Emirates24.2075 55.744722223.975783 55.4288652 24.439217 56.0605792tag:blogger.com,1999:blog-1174512620876631199.post-10708581561390942082012-02-07T18:04:00.000+04:002012-02-07T18:04:35.623+04:00கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆசை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu_c6uvNKFPJ0U3OjkSVnRLad7fk44RUSfFSzFsKyiIxvXwMZunBGsPCME-nWXpSTE3TlVL-fxVd1WPW6qKQgbL4ywXK1-F5mUBoZk-FXILfLXrVljOOhUdgwiXRlB3dCal-D9Cxk7GFI/s1600/cuddalore.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="209" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu_c6uvNKFPJ0U3OjkSVnRLad7fk44RUSfFSzFsKyiIxvXwMZunBGsPCME-nWXpSTE3TlVL-fxVd1WPW6qKQgbL4ywXK1-F5mUBoZk-FXILfLXrVljOOhUdgwiXRlB3dCal-D9Cxk7GFI/s320/cuddalore.jpg" width="320" /></a></div><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">மஸ்ஜிதுந் நபவீயில் கலீபா உமர் (ரலி)</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ஒரு முறை அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் உமர் ஃபாரூக்(ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீயில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது தம் தோழர்களில் சிலரை நோக்கி ‘உங்கள் ஆசை என்ன?’ என்று கேட்டார்கள்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ஒருவர் : உஹது மலை அளவு தங்கம் கிடைத்தால் நான் அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்குவேன் என்றார்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இரண்டாமவர்: மதீனா நகரம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு ஒட்டகைகள் கிடைத்தால் அவற்றை அறுத்து உணவு வழங்குவேன் என்றார்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">மூன்றாமவர்: மதீனா நகரம் முழுவதும் எனக்கு அடிமைகள் இருந்து அவர்களை அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடி விடுதலை வழங்குவேன் என்றார்.</span> <br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இவ்வாறு அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளை வெளியிட்டார்கள். கடைசியாக கலீபாவின் முறை வந்தது.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் ஆசை என்னவென்று கூறுங்களேன் என இருந்தவர்கள் கேட்டார்கள். அதற்கு கலீபா அவர்கள்.. எனது ஆசை:</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">‘இந்த மாண்பார் பள்ளிவாசல் முழுவதும் அபூபக்கர்(ரலி) அவர்கள் போன்ற உத்தமர்களால் நிறைந்து வழிய வேண்டும்.’ என்றார்கள்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">அவர்கள் ஆசைப்பட்டவாறே, உண்மையான இறைபக்தர்களால் வழிந்தோடக் கண்டார்கள். அவர்களே தங்களின் ஈமானிய வலிமையால் புதிய வரலாற்றைப் படைத்தவர்கள்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">அந்த உத்தமர்களைக் குறித்து சூரத்துஸ்ஸுமரில் வரும் வசனம் நம் சிந்தனைக்குரியதாகும்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">நல்லடியார்களுக்கு நற்செய்தி</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">(நபியே!) நீர் நம்முடைய அந்த நல்லடியார்களுக்கு நற்செய்தியைக் கூறுவீராக.:</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">அவர்கள் (நம்முடைய) வசனங்களை செவியுற்று, அவற்றிலுள்ள நல்லவைகளைப் பின்பற்றியும் வந்தனர். நிச்சயமாக அல்லாஹ் நேரான பாதையில் செலுத்தியது இத்தகையோரைத்தான். இவர்கள் தாம் (உண்மையில்) அறிவுடையோருமாவார்கள். அல்குர்ஆன்: (39:18)</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">சரி இப்பொழுது உங்களின் ஆசையை சொல்லுகள் !!!</span> <br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><br />
</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">By Dr. Ahmad Baqavi Ph.D.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">Reference By: </span><a href="http://albaqavi.com/" rel="nofollow nofollow" style="background-color: white; color: #3b5998; cursor: pointer; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px; text-decoration: none;" target="_blank">http://albaqavi.com/</a><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" />Thanks: http://www.facebook.com/CuddaloreMuslimFriends<br />
<br />
</div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-50487548160060328832012-02-06T19:39:00.000+04:002012-02-06T19:39:08.649+04:00மதச்சார்பின்மை (SECULARISM)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2HQjf0qHPOy60V9VYpWJvxSFVOz8A5b4ZJPoL5XDxMPFGxBmxYuwGMM9Pe-dv8I_9QAe9BFV7knqBgzn9sWN_wHdbYYW26IhH8DdyT-5TvRaIbOk3Ma2J-2tHa5e2c71wU53lHayIZUA/s1600/secularim.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2HQjf0qHPOy60V9VYpWJvxSFVOz8A5b4ZJPoL5XDxMPFGxBmxYuwGMM9Pe-dv8I_9QAe9BFV7knqBgzn9sWN_wHdbYYW26IhH8DdyT-5TvRaIbOk3Ma2J-2tHa5e2c71wU53lHayIZUA/s1600/secularim.jpg" /></a></div><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்நோக்கும் கொள்கைப் பிரச்சினைகளுள் மதச்சார்பற்ற சிந்தனையும் ஒன்றாக இன்று தாக்கம் செலுத்துகின்றது.இஸ்லாமிய இளைஞர்களை கொள்கையிலிருந்து கடத்திச் சென்று,கொள்கையற்ற கோமாளிகளாக மாற்றுகின்ற சதினாஷ நடவடிக்கைகள் இன்று முஸ்லிம் கிராமங்களிலும் இடம்பெறும் இவ்வேளையில் - அது பற்றி நாம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">அறிவியலும் தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியுற்று மனித வாழ்வில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.அவை பகுத்தறிவுக்குக் சிந்தனைக்கும் ஆராய்ச்சிகளுக்கும் களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">அதனால்,மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து பகுத்தறிவினைநாடி எழுந்துள்ள அறிவியல்,விஞ்ஞான தொழில்நுட்ப யுகம் தோன்றி ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் ஏற்பட்டு விட்டதாக மனித மனங்களில் ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுலதை இன்று பரவலாக அவதானிக்க முடிகிறது. இதன் விளைவாக மதச்சார்பின்மை (SECULARISM) என்ற சிந்தந்ததை ஆதிகளவில் பிரச்சாரப்படுத்தி,இளைஞர்கள</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ை அதிகளவில் கவர்வதொடு,இறை நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள மதங்களை கொச்சைபடுத்துவதும் ஒழுக்கப் பெறுமானங்கள்,வணக்க வழிபாடுகள்,எள்ளி நகையாக்கப்பட்டு,உயர் ஒழுக்க விழிமியங்கள் மலினப்படுத்தப்படுகின்ர காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ஆனால் அறிவுபூர்வமான கருத்துக்களை தன்னகத்தே கொண்டு,காலத்தை வென்று,வளர்ச்சி அடைந்து வரும் இஸ்லாத்தையும்,சிறுமைத்தனமா</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ன சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போன சிலர் பத்தோடு பதினொன்றாக விமர்சித்தும் கொச்சைப்படுத்தியும் வருகின்றனர்.நமது இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் நஞ்சை விதைக்கின்றனர்.எனவே நாம் இந்த சதிவலையிலிருந்து மீள இது பற்றி தெளிவு அவசியமாகின்றது.</span> <br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு மதச்சார்பின்மை ஒரு தீர்வாக வைக்கப்படுகிறது.எனினும் பல வளர்ச்சி கண்டதாக இருமாந்திருக்கும் நாடுகளில் கூட இந்த சிந்தனை நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையவில்லை என்பது நிரூபமான இந்தக்காலப்பிரிவில்அந்நாடு</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">களில் ஒரு கணிஷமனவர்களும் முஸ்லிம் சமூகத்தில் படித்த ஒரு பிரிவினரும் இளைஞர்கள் சிலரும் இச்சிந்தனைக்கு உட்பட்டு இதை பிரபலப்படுத்தியும் முக்கியம் கொடுத்துப் பேசியும் வருகின்றனர்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இன்று ஷிர்க்,பிதுஅத்,மூடநம்பிக்க</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ை போன்றவைகளைவிட மதச்சார்பின்மைச் சிந்தனை முஸ்லிம் வீடுகளில் கிராமங்களில் பாடசாலைகளில் பல்கலைக்களகங்களில் ஆகிய அனைத்திலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.எனவே மதச்சார்பின்மை கருத்தியலின் தோற்றம்,காரணம்,அதுபற்றி சமூக உளவியல் சார்ந்தோரின் கருத்து போன்றவை கீழ்வரும் பந்திகளில் ஆராயப்படுகிறது.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">அன்று படாடோபத்தில் திளைத்திருந்த கிருஸ்தவ உலகம் ''பூமி சுழல்கிறது'' என்பது பைபிளுக்கு விரோதமானது.பூமி தட்டைப்போல் விரிக்கப்பட்டிருப்பதாக பைபிள் கூறுகிறது.''ஏசு நாதர் பிறந்த பூமி சூரியனை சுற்றுவதா? இல்லவே இல்லை.அப்படி சொல்பவர்களின் நாக்கை வெட்டி விடுவோம்'' என விஞ்ஞானிகளை மிரட்டி,சிறையில் அடைத்து,எரித்து,தூக்கில் இட்டு அவர்களின் குரலை ஒடுக்கியது அக்கால திருச்சபை.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இப்படியான காலப்பகுதியில் தான் தொலைநோக்கியின் முன்னோடியான கலிலியோ கலிலி (1564-1642) ''பூமி சூரியனை சுற்றுகிறது'' என்றார்.இது எங்கள் வேதத்துக்கு முரணானதென்று 69 வயது தளர்ந்த கலிலியோவை படாதுபாடுபடுத்தினர்.இவ்வாற</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ன கொடூர புத்தி கொண்ட கொடியவர்கள் இஸ்லாத்தை நாகூசாமல் விமர்சனம் செய்யவும் துணிந்துள்ளனர் என்பதே ஆச்சரியமிக்க விசயமாக உள்ளது. </span> <br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">15,16,17 ஆம் நூற்றாண்டுளில் அறிவியலை அடக்கி தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பா அறிவியல்,பண்பாடு,நாகரீகத் துறைகளில் பின்னடைந்து இருட்டில் மூழ்கியது.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ஐரோப்பா இத்தகைய இருளில் மூழ்கியிருந்த வேலையில் தான் முஸ்லிம்கள் ஸ்பெயினிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் பிரகாசித்துக்கொண்டிருந்தது</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">.ஐரோப்பிய மன்னர்கள் கையெழுத்துப் பழகும் போது நம் முஸ்லிம் விஞ்ஞானிகள் குர்துபா (Cordoba) பல்கலைக்கழகத்தில் உலகத்தை உருண்டை வடிவில் வைத்து பாடம் நடத்திகொண்டிருண்டார்கள்.அன</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">்று அவர்கள் ஐரோப்பியாவில் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கிற</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">து.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">''கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதிமூன்றாம் வரை இடைப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களே உலகில் கலாச்சாரத்திலும்,நாகரீகத்த</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ிலும் ஒளியை ஏற்றி நின்றனர்.''என பேராசிரியர் P.K.Hitti குறிப்பிடுகிறார்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">''மேற்கத்தைய உலகம் ஆழமான அறிவை பெற்றுக்கொள்ள எண்ணியபோதும் புராதன சிந்தனையோடு தன் உறவை புதுப்பித்துக்கொள்ள எண்ணிய போதும் அது முதலில் அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது.''பேராசிரியர் GOERGE SARTON - HISTORY OF SCIENCE.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இதுபற்றி தெளிவட்ட்றோரும் ஆழமான அறிவற்றவர்களும் புனிதமான இஸ்லாத்தை விரும்பாதொரும் முஸ்லிம் உம்மத்துக்குள் இருந்து கொண்டே மதச்சார்பின்மையை முன்வைக்கின்றமை வேதனை மிகு விசயமாகும்</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய கலாச்சார்ப் பன்பாடுகள் முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் விதைக்கப்பட்டன.முஸ்லிம்களி</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ல் ஒரு சாரார் அபிவிருத்திக்கு ஒரே வலி மதத்தை விட்டு வெளியேறுவதுதான் என நினைக்கலாயினர்.ஆனால் இவர்கள் பின்பட்ட்ரும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கணிசமானோர் இப்போக்கை மறுக்கின்றனர்.அங்குள்ள பல உளவியலாளர்கள் ''மனித குலத்தின் மாண்புக்கு மதமே சிறந்த வழி'' என்று தற்போது இஸ்லாத்துக்குள் வந்த வண்ணம் உள்ளனர்.</span> <br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">நாம் மேலே வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து எடுத்துக் காட்டிய ஐரோப்பிய உலகினதும் இஸ்லாமிய உலகினதும் நிலை,மதச்சார்பின்மை தோன்றுவதற்கு காரணம் ஐரோப்பாவில் நடந்த சில துயரமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்தது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டோம்.உலகின் மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மதம் அறிவியலுக்கு தடையாக ஐரோப்பா தவிர வேறு எங்கும் இடம்பெறவில்லை.ஐரோப்பாவில் நிகழ்ந்த இந்த வரலாறு இன்று உலகின் பல பாகத்திற்கும் பரப்பப்பட்டு,எமது முஸ்லிம் சமூகத்திலும் பரவி நம் முஸ்லிம் புத்திஜீவிகளிடத்திலும் திணிக்கப்பட்டுள்ளது.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">மதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையைஇருட்டடிப்புச்செய்க</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ிறது. </span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">''உலகில் உள்ள அனைத்தும் பகுத்தறிவுக்குட்பட்டதே! இயற்கையின்யதார்த்தத்தில் மனித வாழ்வை விளக்கவும் முடியும் என்ற விசயத்தில்மனிதன் உறுதியாக நம்பிக்கை கொள்கிறான்.இதனடிப்படையில் மறுமைவாழ்வு என்று ஒன்று இல்லை என்பதோடு,மறு உலக வாழ்விலிருந்தோஅல்லது இறைவன் மீதான நம்பிக்கையிளிருந்தோ பெறப்பட்ட எல்லாகருத்தியலையும் தவிர்த்தல் என்ற வகையில் உலக வாழ்வின் மனிதஇனத்தின் சுயனலனைக்குறித்த வகையில் மட்டுமே ஒழுக்கம் அடிப்படையாகஅமையவேண்டும்''எ</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ன்பதே மதச்சார்பற்ற சிந்தனையின் கருப்பொருளாகும்.</span> <br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">உண்மையில் மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒரு மதத்தையோஇனத்தையோ பிரநிதிதுவப்படுத்துவதில்லை</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"> என்ற நிலை மட்டுமல்ல.நாம்முன்னர் குறிப்பிட்டது போல் ஆன்மா,கடவுள்,மறுமை வாழ்வு அனைத்தையும்மறுத்துரைக்கும்</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"> சடவாத சிந்தனைப் போக்கையே அது குறித்து நிற்கிறது இதுஉலக வாழ்வில் எல்லையட்ட்ற மோகத்தையும் ஆன்மீக வறுமையையும்தோற்றுவித்துள்ள</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">து.இதனால் மேற்கத்தைய உலகம் மனஅமைதியின்மையால் வாடுகிறது.அங்கே பெரும் எண்ணிக்கையானோர்நரம்புத்தளர</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">்ச்சிக்கும் மனநோய்க்கும் ஆளாகியுள்ளனர்.மதச்சார்பின்</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">மை என்றமுட்டாள் கோட்பாடு இன்று மனித வாழ்வுக்கு பொருளையும் கருத்தையும்குறிக்கோளையும் இலட்ச்சியத்தையும் வழங்க முடியாமல்தோற்றுவிட்டது.எனவ</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ே வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் மேதகுநாட்டவர்கள் ஆறுதலையும் நிம்மதியையும் தேடி இஸ்லாமிய மடியை நாடிஅடைக்கலம் புகும்போது நம்மவர்கள் அந்தக் குப்பையில் போய் விழுவதும்வீழ்ந்திருப்பதும்</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"> தான் ஆச்சரியமாக உள்ளது. </span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">கிருஸ்தவ பாதிரிமார்களின் கடும் போக்கு நிலை காரணமாகவே மனிதன் மதத்தை வெறுத்தான்.இதனால் அவனின் இறை நம்பிக்கையும் விசுவாசமும் ஆட்டம் கண்டது.கிருஸ்தவ மதப்பிடியிளிருந்து விடுப்படும்பொருட்டு மனிதன் அனைத்து மதகொள்கையையும் தூக்கி எறிந்துவிட்டு தனிப்பாதையில்(மதச்சார்பின்</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">மை) தனது பயணத்தை தொடர்ந்தான்.இந்தப்பாதையில்</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"> அவன் மகத்தான வெற்றி கண்டான்.எனினும்ஆத்மீக ஒளியற்ற இவ்வளர்ச்சியினால் அவன் அவனது வாழ்வை இருட்டிலே கழிக்கிறான்.அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி முயற்ச்சிக்கும் எதிராககிருஸ்தவ திருச்சபையும் அதனை பிரதிநிதித்துவப்படுத்திய மதகுருமார்களும் நடந்துகொண்டதால் மதத்துக் எதிரான சிந்தனைப்போக்கு ஆரம்பமானது.</span> <br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">கிருஸ்தவ போதனை போன்று மனித வாழ்விற்குரிய தெளிவானவரையறுத்த பகுத்தறிவுபூர்வமான அறிவியலை புறக்கணிக்காத சட்டங்களும் கொள்கைகளும் பல மதங்களில் கனப்படாமையே மதச்சார்பின்மை வளர காரணமாக அமைந்தது.இச்சிந்தனையின் கருத்தாடலில் கவரப்பட்டவர்கள் இஸ்லாத்தையும் அதே மனப்பதிவோடு மேலோட்டமாக விமர்சிக்கின்றனர்.இஸ்லாத்த</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ின் அடிப்படை மூலாதாரங்களில் எந்த உடுருவலும் இடம்பெற முடியாது.அது தெய்வ வழிகாட்டல்.அதன் பாதுகாப்பு இறைவன் அவன் வசம் வைத்துள்ளான்.இங்கு மனித கையாடலோ நினைத்தவுடன் பெரும்பான்மை பலத்துடன் மாற்றுவதற்கோ இடமில்லை.எனினும் அது சில விசயங்களில் நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையுடன் பகுத்தரிவுபூர்வமாக காணப்படுகிறது. </span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">மனிதன் வெறும் சடப்பொருலன்று,அவனின் புரத்தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டிருப்பத</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ு போல் அவனது ஆத்மாவின் தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இதனைப் புறக்கணித்துவிட்டு எழுந்த சிந்தனையால் இன்று நிலைத்துநிற்க முடியாது போய்விட்டது.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">அடிப்படையில் மனிதுள்ளத்தில் இறைவன் பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.இறைவனைப்பற்றிய ஏதாவதொரு அமைப்பில் காணப்படாத சமூகமொன்று வரலாற்றில் காணவே முடியாது.இதற்கு புறம்பான(மதச்சார்பின்மை) கொள்கையுடையவர்கள் தற்போது இதற்கே மீண்டுள்ளனர்.எங்கு இந்த மதச்சார்பின்மை துளிர்விட்டு வளர்சியுற்றதோ அங்கேயே அது சாத்தியப்படாது என்று புரிந்து கொண்டு இன,மத,கலாச்சார பாரம்பரியங்களுக்கு மெல்ல மெல்ல மனித இனம் நகர்கிறது.எனவே இந்த மதச்சார்பின்மை என்ற எண்ணக்கரு தோல்வி கண்டு வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இக்கருத்தியல் உலகில் சமாதானம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த தவறிவிட்டது.மேலை நாடுகளின் மேலாதிக்க உணர்வு,கருப்பு வெள்ளையன் என்ற நிறவெறி,பிறரை ஒழித்துக்கட்டும் வக்கிர புத்தி பலமற்றவனின் மீது அதிகார வெறியாட்டம் போன்றன மிகக்கொடுரமான நோய்களாகும்.</span> <br />
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">உலகில் சமாதனம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த ஒரு வெற்றிகரமான வழி உள்ளது அது தான் இஸ்லாம்.பதினான்கு நூற்றாண்டுகள் தாண்டியும் அது எதுவித மாற்றமும் இன்றி அப்படியே உயிரோட்டமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.அந</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">்த நெறியின் பால் முழு மனித சமூகமும் மீள வேண்டும்.அப்போதுதான் உண்மையான சமாதனம் சகவாழ்வு சமத்துவம் ஏற்படும்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இஸ்லாம் காட்டிய உண்மைப்பாதையில் மனித இனம் செழித்து வளர்ந்து கிழக்கேயும் மேற்கையும் ஓர் உயிர்துடிப்புமிக்க ஆன்மீகநெறி அறிவியக்கம் செயல்படதுவங்கியுள்ளது.தீய சக்திகாளாலும் வக்கிர உணர்வாலும் கட்டவிழ்த்துவிட்ட பொய்மைகலாலும் அதன் முன்னேற்றத்தை தடுத்துநிறுத்த முடியாது.இனியும் முடியாது.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">அதே வேளை,இஸ்லாமிய சிந்தனையில் கொள்கையில் வார்த்தேடுக்கப்பட்டவர்கள்,</span><wbr style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #333333; display: inline-block; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"></span><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ஷிர்க்கில் மூழ்கி தர்காக்களில் தஞ்சமடைவதால்,இதுதான் இஸ்லாமிய பாரம்பரியம் என்று நினைகிறார்கள்.சில முஸ்லிம்களின் நடவடிக்கை இஸ்லாம் ஆகிவிடாது.இஸ்லாம் என்பது குரானும் சுன்னாவுமாகும். இதுவரை அதில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை அதற்கான அவசியமும் இல்லை.இஸ்லாமே ஈருலக வெற்றிக்கும் விமொசனத்திகும் ஒரே வழி.வேறு எந்த நம்பிக்கைகளுக்கும் மனிதனை இருளிலிருந்து விடுவிக்க முடியாது.</span> <br />
<div style="text-align: left;"><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><br />
</span></div><div style="text-align: left;"><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">நன்றி: அபுல் அமீன். பேஸ் புக் வழியாக.....</span></div></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-36527881786215042422011-07-10T13:18:00.001+04:002011-07-10T13:32:19.491+04:00தமிழ் சமூகம் சந்திக்கும் சவால்களும், சமூக நீதிக்கான வழிமுறைகளும்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbqCGRXxDWqvchufgNl5NtIcrORK26Ge29sRYqqLjIQEEirHXvpl-lPX49tJgeMImR38UktgJQl4qOj3d7v4iombFBkTDUZ0NbOa_326biQMkTJd7g4WOhMVtY75_d5RjemPPbcH6a85E/s1600/marks_dammam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240px" m$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbqCGRXxDWqvchufgNl5NtIcrORK26Ge29sRYqqLjIQEEirHXvpl-lPX49tJgeMImR38UktgJQl4qOj3d7v4iombFBkTDUZ0NbOa_326biQMkTJd7g4WOhMVtY75_d5RjemPPbcH6a85E/s320/marks_dammam.jpg" width="320px" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>கடந்த 03.07.2011 ஞாயிறு மாலை தம்மாம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சவுதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள பேரா.அ.மார்க்ஸ் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.<br />
<br />
<br />
வாரம் சவுதிக்கு வருகை தந்த அ.மார்க்ஸ் கடந்த வெள்ளி (01.07.2011) அன்று தலைநகர் ரியாத் மாநகரில் உரையாற்றியிருந்தார்.<br />
<br />
மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தம்மாம் கருத்தரங்கில் பேரா.அ.மார்க்ஸ் 'தமிழ் சமூகம் சந்திக்கும் சவால்களும், சமூக நீதிக்கான வழிமுறைகளும்' எனும் தலைப்பில் சுமார் ஒன்னரை மணி நேரம் சிறப்புரையாற்றினார்.<br />
அவரது உரையில் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்.<br />
<br />
'தமிழ் சமூகம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் ஒரே சமூகமாக எக்காலத்திலும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. எனவே தமிழ் சமூகம் என்பதை விட தமிழ் சமூகங்கள் எனக் குறிப்பிடுவதே சிறந்தது. ஆனால் பன்மைத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். மற்றவர்களோடு இணைந்து வாழ்வது தான் அடிப்படை அரசியல்.<br />
<br />
உதாரணமாக, தமிழகத்தின் முன்னாள் ஆளுனர் திரு.ராம் மனோகர் ராவ் ஐபிஎஸ், ஒருமுறை தமிழகத்தில் ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த போது, 'அருமையான கலைநயமுள்ள பள்ளியைக் கட்டிய நீங்கள் ஏன் நபி (ஸல்) அவர்களின் படத்தை ஏன் மாட்டவில்லை' என்று கேள்வி எழுப்பினாராம். உயர் அதிகாரத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி சமூகத்தின் பிற சமய கோட்பாடுகளை புரிந்து வைத்துள்ளதில் உள்ள குறைபாடு தான் இது.<br />
<br />
நபியாகவே இருந்தாலும் உருவ வழிபாடு கிடையாது என்பதில் உறுதியானவர்கள் முஸ்லிம்கள் என்ற அடிப்படையை புரிந்து கொண்டிருந்தால் ராம் மனோகர் ராவ் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்.<br />
<br />
எனவே தான் காந்தியடிகள் செக்யூலரிஸம் கொள்கையை அரசியல் கொள்கையாக மாற்றி அமைக்க பெரும்பாடுபட்டார். அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு எனும் கொள்கையை உறுதியாக நம்பினார். இதனால் தான் இந்துத்துவ பயங்கரவாதிகள் காந்தியை கொலை செய்ய ஏழு முறை முயற்சித்தனர்.<br />
<br />
முதல் சுதந்திர போராட்டமான கிலாஃத் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்தவர் காந்தி. அதேபோல் தமிழகத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு போராட்டத்தில் பங்கு கொண்டவர் காந்தியடிகள். இதன் காரணத்தால், காஞ்சி மட அன்றய பீடாதிபதி மகா பெரியவாள் என மரியாதையாக அழைக்கப்பட்ட சங்கராச்சாரியாரின் ஆரிய தர்மம் எனும் பத்திரிக்கையில் கடுமையாக சாடி எழுதப்பட்டார். பிற சமூகங்களைப் பொறுத்தவரை TOLERANCE ஓ COMPROMISE ஓ தேவையில்லை. ACCEPTENCE தான் தேவை என்பதை ஆணித்தரமாக காந்தி வலியுறுத்தி வந்தார். அதன் காரணமாகவே கொல்லப்பட்டார்.<br />
<br />
எனவே முதலில் எந்த சமூகமும் பன்மை சமூகம் தான் என்பதனையும், அவற்றை அவரவர் நம்பிக்கைப்படி உள் வாங்கி அங்கீகரித்து அனைவருக்கும் ஒரே நீதி என்ற இலக்கை நோக்கி பயணிப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.<br />
<br />
தமிழ் சமூகம் பண்டைய காலந்தொட்டே பல சமூகங்களாக பிரிந்து வாழ்ந்துள்ளது என்பது வரலாறு. செந்தமிழ், கொடுந்தமிழ், இழிசனர் தமிழ், சமண தமிழ், சைவத் தமிழ் என பல சமூகங்களாக வாழ்ந்துள்ளனர்.<br />
<br />
இன்றும் கூட சமூக காரணங்களால் மட்டுமல்ல, மாறாக அரசியல் காரணங்களால் கூட தமிழ் கமூகம் பல்வேறு கூறுகளாகவே பிரிந்துள்ளது. <br />
<br />
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்று சமச்சீர் கல்வி படும்பாடு. கடந்த அரசால் அங்கீகரிக்கப்பட்ட காரணத்தால் இன்றய அரசால் சமச்சீர் கல்வி உதாசீனப்படுத்தப்படுகிறது.<br />
நான்கு ஆண்டு கால ஆய்வின் பின் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி இன்று அற்ப காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனையானது. அவசியம் என அரசு கருதினால் சில மாற்றங்களோடு அல்லது சில நீக்கங்களோடு உடனே அமுல்படுத்த முனைய வேண்டும். ஒப்புக் கொள்ளப்பட்ட பின் பாடத்திட்டத்தில் சில அம்சங்கள் நீக்கப்பட்டதற்கான முன்னுதாரணங்கள் உண்டு.<br />
உதாரணமாக நண்பர் கவிஞர் இன்குலாப், ராஜராஜ சோழன் காலத்தில் நடைமுறையில் இருந்த பெண்ணடிமைத் தனத்தை - தாசித்தனத்தை சாடி எழுதிய கவிதை நீக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அதுபோல் இப்பொழுதும் நாங்கள் அளித்த வரைவு பாடத்திட்டத்தில் கடந்த கலைஞர் அரசு செய்த இடைச்சொருகல்களை நீக்கி அமுல்படுத்த அரசு முன்வர வேண்டும்.<br />
<br />
அரசியல் ரீதியான தமிழ் சமூக பிளவு என்றால், சமூக ரீதியான பிளவுகளுக்கு சிறந்த உதாரணம் இரட்டை குவளை நிலை, காலணி அணிய அனுமதி மறுப்பு போன்றவற்றை குறிப்பிடலாம். சில இடங்களில் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல ஏற்படுத்தப்பட்டுள்ள தடையையும் கூட இவ்வகையில் சேர்க்கலாம்.<br />
<br />
பாண்டிச்சேரியில் நடைமுறையில் இருந்த இதுபோன்ற ஒரு தடை சமீபத்தில் தமுமுகவின் தீவிர முயற்சிக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.<br />
<br />
சமூக முன்னேற்றத்திற்கான வழிகளாக நான் குறிப்பிடுவது இத்தகைய வேறுபாடுகள் களைப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அப்துல் கலாம் போன்றவர்கள் அணு உலை அமைப்பது தான் நமது முன்னேற்றத்திற்கான பாதை என வலியுறுத்தி வருகின்றனர்.<br />
<br />
அணு உலை விபத்திற்கு பின் அனேக நாடுகள் அணு உலையை மூடிவிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ஏனெனில் அணு உலையின் பயன்பாடு ஏறத்தாழ 25 வருடங்கள் தான். ஆனால் அணு கழிவுகளால் ஏற்படக்கூடிய ஆபத்து சுமார் 30,000 வருடங்களாகும். எனவே அபுல்கலாம் குறிப்பிடுவது போல் மேலிருந்து கீழாக வளர்ச்சியோ முன்னேற்றமோ அடைய முடியாது. மாறாக நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் குறிப்பிடுவது போல் வளர்ச்சியோ, முன்னேற்றமோ கீழ் மட்டத்திலிருந்து அமைய வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும். அதனை நோக்கியே நாம் பயணப்பட வேண்டும்.<br />
<br />
அதாவது நீதிபதி ராஜேந்திர சச்சாரின் கமிட்டியில் இடம் பெற்ற அபூஸாலிஹ் குறிப்பிடுவது போல் சமூகங்களிடையேயான சம வாய்ப்புகள் உருவாக வேண்டும். அதுவே பன்மைத்துவ குறியீடாக அமையும்.<br />
<br />
இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றிய பேரா. அ. மார்க்ஸ் இறுதியாக அங்கு கூடியிருந்த பெரும்பாலான முஸ்லிம்களுக்கான சிறப்பு கவன ஈர்ப்பு உரையாக சில நிமிடங்கள் பேசினார்.<br />
<br />
ராஜேந்திர சச்சாரின் அறிக்கையின்படி முஸ்லிம் இயக்கங்கள் இதுவரை முயற்சிக்காத ஆனால் உடனே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. இவற்றை தனித்தனியாக குறிப்பிட்டு ஒற்றுமையாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டும்.<br />
<br />
முதலாவதாக, சமூகங்களுக்கான சம வாய்ப்பு. இதன்படி முஸ்லிம்களுக்கு மாத்திரம் தனியாக 10 சதவிகித இட ஒதுக்கீடு அனைத்து அம்சங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென சச்சார் அறிக்கை வலியுறுத்துகிறது.<br />
<br />
இரண்டாவதாக, சட்டமன்ற, பாராளுமன்ற அவைகளிலே இட ஒதுக்கீடு பெறத் தாமதமானாலும், அந்தந்த மாநில அதிகாரத்திலுள்ள நகரசபை, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பெற குரல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற இட ஒதுக்கீடு ஆந்திர மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது அறிந்ததே.<br />
<br />
அடுத்ததாக சிறைக் கொட்டடிகளில் வாடி வரும் முஸ்லிம் கைதிகள் எதிர்வரும் ஜுலை 15 அண்ணா நினைவு நாளில் விடுதலை செய்யப்பட அரசை வலியுறுத்த வேண்டும்.<br />
சச்சார் கமிட்டியின் பரிந்துரைப்படி தேர்வு குழுக்களில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற அரசை நிர்பந்திக்க வேண்டும்.<br />
<br />
இந்தியாவிற்கு ஏற்பட்ட களங்கமான பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் அரசு உடனடியாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்தபடி மஸ்ஜித் கட்டித்தர கோரி வலியுறுத்த வேண்டும். அயோத்தியிலுள்ள இந்து தீவிரவாதியான சுவாமி ராம் விலாஸ் வேதாந்தியின் மிரட்டலுக்கு பயந்து இடிக்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டாமல் காலம் தாழ்த்துவதை கைவிட்டு, உடனடியாக பள்ளி கட்டி தந்து சமூக நீதியை பாதுகாக்க அரசை நிர்பந்திக்க வேண்டும். <br />
<br />
முக்கியமாக, பல காலமாக வரைவு நிலையிலுள்ள 'இனக்கலவர தடுப்பு சட்ட மசோதா' வை (COMMUNAL RIOTS PREVENTION ACT) உடனடியாக நிறைவேற்றுவதுடன் சாட்சிகளுக்கான பாதுகாப்பையும், உயிர் உத்திரவாதத்தையும் தர அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்.<br />
<br />
சுமார் ஒன்னரை மணி நேர மேற்கண்ட உரைக்குப் பின் சபையோரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.<br />
<br />
இந்த கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சகோ.கபீர், அப்துல் சத்தார் மற்றும் சிவக்குமார் செம்மையாக செய்திருந்தனர்.<br />
<br />
சிறப்புச் செய்தியாளர்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
--கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-64164165476256712962011-06-12T12:12:00.000+04:002011-06-12T12:12:04.060+04:00இராமநாதபுரம் எம்.எல்.ஏ. பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong>முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்</strong>: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தலைமையிலான தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே மீனவர்களுடைய நலனைப் பேணுவதிலே அக்கரை கொண்டு பல்வேறு அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. அந்த அப்படையில் 1974ல் தமிழகத்தில் திமுக அரசும், மத்தியிலே காங்கிரஸ் அரசும் ஆட்சியிலே இருந்தபோது காலங்காலமாக இராமநாபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான இருந்து விடுதலைப் பெற்று பிறகு நமது நாட்டின் சொத்தாக மாறிய கச்சச் தீவை தாரை வார்த்துவிட்டார்கள். எனக்கு முன்னர் இங்கே உரையாற்றிய மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்டதைப்போல, கச்சத்தீவுவை தாரை வார்த்து நம்முடைய தமிழக மீனவர்களுக்கு குறிப்பாக இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக...<br />
<br />
<br />
<strong>முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்</strong>: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அன்றாடம் நம்முடைய மீனவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடிய ஒரு பிரச்சினை, கச்சத் தீவை தாரைவார்க்கும் பிரச்சினையாக அமைந்திருக்கின்றது இதில் மிக முக்கியமாக ஒரு விஷயத்தை மட்டும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். கச்சத் தீவு தொடர்பான சட்டத்திலே கச்சத் தீவுக்கு செல்வதற்கும், அந்த பகுதியிலே மீன் பிடிப்பதற்கும் ஏன் அந்தத் தீவிலே மீன் வலைகளை காய வைப்பதற்கும்கூட தாரை வார்த்தச் சட்டத்திலே உரிமை இருந்தாலும் கூட, இலங்கையிலே தமிழ் மக்களுக்கு எதிரான போர் நடைபெற்றிருந்த காலத்திலே 1983ல் தமிழ்நாடு என்ற ஒரு சட்டத்தின் வாயிலாக நம்முடைய மாற்றுப்பட்டு கச்சத் தீவுக்கு நாம் செல்லக்கூடிய உரிமை தடுக்கப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது. இப்போது போர் முடிவுற்ற நிலையிலே இந்தச் சட்டத்தையும் திருத்தி நம்முடைய மீனவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்லி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தை மனதார ஆதரித்து விடைபெறுகிறேன். நன்றி (மேசையைத் தட்டும் ஒலி)<br />
<br />
<strong>முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்</strong>: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகின்றேன். ஊழல் மலிந்த, அராஜகம் நிறைந்த, சுயநல ஆட்சியை வீழ்த்த அனைத்துத் தரப்பினரையும், ஒருங்கிணைத்து மக்கள் விரும்பிய கூட்டணியை அமைத்து மக்களின் மௌனப் புரட்சிக்கு வித்திட்டு, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலே வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று தற்போது 3&வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் எங்கள் அன்பு சகோதரிக்கும் (மேசை தட்டும் ஒலி) அவரது தலைமையின் கீழ் செயல்படும் இலட்சோபலட்ச அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.<br />
<br />
தமிழகத்தில், ஜனநாயத்தைக் காப்பாற்றும் இந்த அறப்பணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம் பெற்ற எங்கள¢கூட்டணிக் கட்சிகளான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவற்றின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் நலனுக்கெதிரான கூட்டணியை தோல்வியுறச் செய்யவேண்டுமென்று வீறுகொண்டு எழுந்து செயல்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சகோதரர் சீமானுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மிரட்டல்கள், இழிசொற்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு நடுநிலையுடன் செயல்பட்டு தமிழகத்தின் ஜனநாயகம், பணநாயகமாக மாறாமல் தடுத்து நிறுத்தி அதைத் தடுத்து நிறுத்துவதையே ஒரு சவாலாகவே கருதி மனஉறுதியுடன் செயல்பட்ட தலைமை தேர்தல் ஆணையாளர் குரேஷி அவர்களுக்கும், திரு.பிரவின்குமார் தலைமையிலான தமிழக தேர்தல் ஆணையத்தின் அத்துணை அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து வகையான கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி சுயநலனை விட நாட்டு நலனே மேல் என்பதை நெஞ்சில் சுமந்து தங்கள் கையில் உள்ள எனும் வாக்குச்சீட்டு களாக மாற்றி சமீபத்தில் எகிப்தில் நடைபெற்றுதுபோல ஒரு அமைதிப் புரட்சியை தமிழகத்திலும் ஏற்படுத்தி நல்லாட்சி ஏற்ற்ட வழிவகை செய்த தமிழக வாக்காளப்பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br />
<br />
16 ஆண்டுகளுக்கு மேலாக தன்னலம் பாராமல் அளப்பரிய தியாகங்களுடன் மனிதநேய சேவைகளைச் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கண்மணிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற அயராது உழைத்த என் கட்சியின் சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.<br />
<br />
நான் போட்டியிட்ட இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் உலகின் பல்வேறு பகுதிகளிலே வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. ஈழ மண்ணில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷே என் நண்பர் என்று தன்னைச் சொல்வதிலே பெருமை கொள்ளும் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக எனக்கு எதிராகக் களம் இறக்கப்பட்டார். அவர் மட்டும் அல்ல, காங்கிரஸ் கட்சியும் கூட ராஜபக்ஷேயின் நண்பராகத்தான் இருந்து வருகிறது. இதனால் தான் டெல்லியில் நடைபெற்ற ஊழல் மலிந்து போட்டிகளின் நிறைவு விழாவிற்கு ராஜபக்ஷேவிற்கு சிவப்புக் கம்பன வரவேற்பு அளித்தார்கள். அந்த சிவப்புக் கம்பளம் என் தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் அடையாளமாகத்தான் எனக்குக் காட்சியளித்தது.<br />
<br />
காங்கிரஸ் கட்சியின் ராஜபக்ஷே ஆதரவை நிராகரித்து அவரது நண்பரான காங்கிரஸ் வேட்பாளருக்கு சரியான பாடம் கற்பித்து என்னைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற வைத்த இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வெற்றிக்காக அரும்பாடுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றி, நடந்து முடிந்த இந்த 14 வது சட்டப் பேரவைக்கான இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசிடம் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் துடிப்புடனும், கோபத்துடனும், விவேகத்துடனும் இந்த புதிய அரசின் ஆரம்பக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.<br />
<br />
அருமையான 6 மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்த ஆட்சி தொடங்கியுள்ளது. அனைவரையும் அரவணைக்கும் வகையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு ஆளுநர் உரையும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை நிறைவேற்றுவதற்கான வழிவகை ஆளுநர் உரையிலே இடம்பெற்றுள்ளது. அதை மனிதநேய மக்கள் மனமார வரவேற்கிறது.<br />
<br />
கடந்த அரசு அவசரக் கோலத்தில் நடைமுறைப்படுத்திய சமச்சீர் கல்விக் கொள்கையை மேல் ஆய்வுக்காக இந்த அரசு நிறுத்தி வைத்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. சிறுபான்மை மக்களின் மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை அந்த மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்து 10 வது மற்றும் ப்ளஸ்2விலே தேர்வு எழுதும் வாய்ப்பை திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையிலே மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக பழுத்த கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரை புறந்தள்ளப்பட்டது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறை மேல் ஆய்வு செய்யப்படும்போது அரசியல் சாசன சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறுபான்மை மக்கள் தமிழுடன் சேர்த்து தாய் மொழியை கற்பதற்கும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதற்கும் வழிவகுக்கப்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br />
<br />
அதேநேரத்தில் சிறுபான்மை மக்களின் நலனின் அக்கறை கொண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது திருச்சி, வேலூர், பரமக்குடி என்று பல்வேறு ஊர்களிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்திலே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார். சிறுபான்மை முஸ்லிம்களின் இந்த உள்ளக்கிடக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.<br />
<br />
அதேபோல முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முறையில் உள்ள சிக்கல்களினால் அதன் பலனை சில துறைகளில் குறிப்பாக உயர் மருத்துவ படிப்பு சேர்க்கை, பல்ககலைக்கழகங்களிலே பேராசிரியர் நியமனம் முதலியவற்றில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
இந்த குளறுபடிகள் நீக்கப்படுவதற்கும், நவிந்தோர் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அமலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டார்கள். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.<br />
<br />
கடந்த திமுக அரசு 2009 லே தமிழ்நாடு திருமணங்கள் புதிவுச் சட்டம் என்ற பெயரில் கட்டாயமாக திருமணங்கள் அனைவரும் புதிவு செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது. காலம் காலமாக முஸ்லிம்களின் திருமணங்கள் எழுத்துபூர்வமாக அதனை நடத்தும் ஜமாத்துகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக அரசு இந்தத் திருமணங்களைப் பதிவு செய்ய கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்தில் கொண்டு வந்து விதிமுறைகள், முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு முரணாக இருந்தன, தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.<br />
<br />
சென்ற 2010, மார் 6ம் தேதி நாள் உள்பட அனைத்து முஸ்லிம்கள் அமைப்புகளின் பிரதிநிகள் சட்ட அமைச்சரைச் சந்தித்து, கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள ஆட்சேபணைகளை வெளிப்படுத்தினோம். ஆனால், அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை சென்ற திமுக அரசு நிராகரித்தது. தேர்தலிலே படுதோல்வி அடைந்தது.<br />
<br />
அரசினால் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. மாறாக, இந்தப் பதிவிற்காக முந்தைய திமுக அரசு கொண்டுவந்த விதிமுறைகளைத்தான் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். ஜமாத்துகள், காஜிகள் பதிவு செய்யும் திருமணம் தொடர்பான பதிவுச் சான்றினை அப்படியே ஏற்றுக்கொண்டு வேறு எவ்வித குறிப்பாவணங்களும் இல்லாமல் பதிவு துறை பதிவு செய்து, சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கையாகும். அதாவது தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009 விதிமுறைகளிலே பிரிவு5, உட்பிரிவு4லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கை, இந்தக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்று, இதை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றித் தருவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்கள். இந்தக் கோரிக்கையை அவர்கள் விரைவில் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.<br />
<br />
இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் குழு சார்பாக ஹஜ் செல்வதற்கு (குறுக்கீடு)<br />
<br />
<strong>முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்</strong> : மிக்க நன்றி, அமைச்சர் அவர்களே, இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் குழு சார்பாக ஹஜ் செல்வதற்கு 10400 பேர் விண்ணப்பித்தார்கள், இவர்களில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 3400 பேர்களுக்கு மட்டுமே குலுக்கல்மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வாய்ப்பு இழந்த சுமார் 7000 பேரில் பாதி பேருக்காவது வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யவேண்டுமென்று கேட்க்கொள்கிறேன்.<br />
<br />
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது, குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலே பட்டா நிலங்களிலே சர்ச்சுகள், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு இருக்ககூடிய சிக்கலை இந்த அரசு, அதிமுக அரசு நிவர்த்தி செய்யும் என்று குறிப்பிட்டார்கள். அதையும் நி¬வேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.<br />
<br />
என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ள இராமநாதபுரம் தொகுதி மீனவர்கள் நிறைந்த தொகுதி, மீனவர்களின் நலனின் இந்த அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக, தொடக்கமாக இந்த அரசு தேர்தலிலே வாக்குறுதி அளித்தபடி மீன்பிடி டைக் காலத்திற்கு வழங்கப்படும் உதவித் தொகையை மாதம் ஒன்றுக்கு ரூ.2000/& ஆக உயர்த்தியதை மணமார வரவேற்கிறேன்.<br />
<br />
கச்சத்தீவு தொடர்பாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் மீனவர்களின் நலனின் இந்த அரசுக்குள்ள அக்கறைந வெளிப்படுத்துகிறது. இதே போல, பருவகாத்தால் நான்கு மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழலில் இருக்கும் மீனவக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4000 ரூபாயாக வழங்கப்படும் நிறைவேறும் என்று நம்புகிறேன்.<br />
<br />
பாரம்பரிய மீனவர்கள் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி நோக்கோடு நடுக்கடலில் மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் ஏற்றுமதிக் கப்பல் பூங்கா அமைக்கப்படும் என்று அஇஅதிமுக&வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா இராமநாதபுரம் தொகுதியில் விரைவில் அமைய ஆவண செய்ய வேண்டுமெனப் பணிவண்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.<br />
<br />
13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அஇஅதிமுக&வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மீன் பூங்காக்களில் குறைந்தது ஐந்து தொழில் வளர்ச்சயில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன். அடுத்து தொடர்ந்து நம்முடைய தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும். அந்த வகையிலேதான் அஇஅதிமுக&வினுடைய தேர்தல் அறிக்கையிலே மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதை ஏற்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.<br />
<br />
இந்த சூழலில் தேர்தல் நேரத்திலே நான்கு மீனவர்கள் இ£ரமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள், விக்டஸ், அந்தோனிராஜ், ஜான்பால் மற்றும் மாரிமுத்து என்ற இந்த நான்கு மீனவர்களும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உலகக் கோப்பை கிரிப்கெட் போட்டி நடைபெற்ற அந்த தினத்திலே மீன் பிடிப்பதந்காக TN-10-WFB-626 என்ற படகிலே சென்றிருக்கின்றார்கள். கிரிக்கெட் போட்டியிலே இலங்கை தோல்வியடைந்தது. இலங்கை தோல்வி அடைந்ததற்குப் பழிவாங்ழுவதற்காக வேண்டி, நம்முடைய இந்த நான்கு மீனவர்களும் சித்திரவதை வெய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதிலே, மிகப்பெரிய கவலை மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், இந்த செய்தி, 2 ஆம் தேதியே அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், அவர்களுடைய சடலத்தையும் இலங்கை கடற்படையினர் தூக்கிச் சென்றுவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து இந்த செய்தியை அன்றை தமிழக அரசு மறைத்து இந்த நான்கு மீனவர்களும் காணாமல் போய்விட்டார்கள் என்று சொல்லி சில நாட்களாகத் தேடி, பிறகு இலங்கையிலுள்ள ஒரு பத்திரிகையிலே இரண்டு சடலங்கள் & விக்டஸினுடைய சடலமும், இன்னொருவருடைய சடலமும் ஒதுங்கியிருக்கின்றது என்று செய்திகளெல்லாம் வந்தபிறகு மீனவக் குழுக்கள் 6 பேர் கொண்ட குழு இலங்கைக்குச் செல்கின்றது.<br />
<br />
<strong>முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்</strong> : அந்த குழுவும் கப்பலிலேயே சுடும் வெயிலிலே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதற்குப் பிறகு விக்டஸினுடைய உடல் யாழ்ப்பாணத்திலேயே கண்டெடுககப்படுகின்றது. அதிலே பல காயங்கள், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த மறு தினம், அந்தோனிராஜினுடைய உடல் தமிழகத்திலே தொண்டிக்கு அருகே கரை ஒதுங்குகிறது. தேர்தல் முடிந்த மறுநாள் 14 ஆம் தேதி ஜான் பாலினுடைய உடல் கரை ஒதுங்குகிறது. 16 ஆம் தேதி மாரிமுத்துவினுடைய உடல் தலை இல்லாமல் கரை ஒதுங்குகிறது. இதிலே மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மீனவர்கள் காணாமல் போனால் அவர்களுடைய உடல் கிடைத்தால் மட்டுதான் அரசாங்கம் அவர்களுடைய குடும்பத்திற்கு இழப்பீடு தரக்கூடியதொரு நிலையிலே, இந்த நான்கு மீனவர்களில் ஒருவருடைய உடல், விக்டஸினுடைய உடல் யாழ்ப்பாணத்திலே கண்டெடுக்கப்பட்ட பிறகு நான்கு குடும்பங்களுக்கும் தமிழக அரசு அன்றை தமிழக அரசு இழப்பீடு கொடுக்கின்றது. இதிலே நமக்குள்ள சந்தேகம் என்னவென்றால் தேர்தல் நேரத்திலே இந்த நான்கு மீனவர்களையும் கிங்களப் பேரினவாத இலங்கை அரசு கிரிக்கெட் உலகக் கோப்பைப்போட்டியிலே தோல்வியடைந்தற்காகச் சுட்டுக் கொன்றிருக்கிஙனறது. சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது. இந்த உண்மைய மறைத்திருக்கின்றார்கள். இதற்காக தமிழக அரசு முழமையான ஓர் விசாரணையை ஏற்படுத்தி இந்த நான்கு மீனவர்களினுடைய (குறுக்கீடு)<br />
<br />
<strong>முனைவர் எம் ஹெச் ஜவாஹிருல்லா</strong> " இது வேறு அது வேறு இந்த 4 மீனவர்களுக்கும் அதிமுக சார்பாக ஒரு லட்சம் கொடுத்தார்கள் .ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையும் இந்த உண்மையை மறைத்தவர்கள் மீதான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் .அதே போல் கடந்த 30 ஆண்டுகளாக 500 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.அவாகளுடைய குடும்பத்தின் வாரிசுகளுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி இந்த 4 மீனவர்களும் சென்ற படகு என்ன ஆனது என்பதைப்பற்றிய விவரம் இது வரை தெரியவில்லை அந்த படகுக்காக வேண்டி தமிழக அரசு இழப்பீடு தரவேண்டும் . இந்த 4 குடும்பங்களினுடைய உறுப்பினர்களுக்கு அரசு வேலை தருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக்கொண்டு இறுதியாக சுருக்கமாக சில செய்திகளை மட்டும் சொல்லி கோரிக்கைகளை மட்டும் முன் வைத்து விடை பெறுகின்றேன் .<br />
<br />
இராமநாதபுரம் மாவட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளாகிவிட்டது . ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற க்கழகத்தினுடைய நிறுவனர் , ஏழைகளின் பங்காளர் ,பாரத ரத்னா எம்ஜி ஆர் அவர்களுடைய காலத்திலேயே தான் இராமநாத புரம்மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகமும் இராமனாதபுரத்திலே அமைக்கப்பட்டது.(மேசையை தட்டும் ஒலி) இந்த இராமநாத புரம் மாவட்டம் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய இந்த மாவட்டத்தை எம் ஜி ஆர் அவர்கள் உயிர்பித்தார்கள்.அதற்கு சரியான மாவட்டத்தலைநகர் அந்தஸ்து கொடுத்தார்கள் இந்த ஆட்சியிலே மிகவும் பிற்படுத்தப்பட்ட தொழில் வளம் இல்லாத விவசாயமும் அதிகம் இல்லாத இந்த மாவட்டத்தை தமிழகத்தையே எப்படி இந்தியாவினுடைய முன்னோடி மாநிலமாக ஆக்கவேண்டுமேன்று அதிமுக அரசு முயற்சி செய்திருக்கிறதோ அதே போல எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தை தமிழகத்தில் மிகவும் முன்னோடியான மாவட்டமாக உருவாக்குவதற்கு இந்த அரசு.<br />
<br />
<strong>முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்</strong>: இராமநாதபுரம் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டிருக்கின்றது. இராமேஸ்வரத்திலே யாத்ரிகர்களும், சுற்றுல்லாப் பயணிகளும் ஏராளமாக வருகின்றார்கள். அதற்கு அடிப்படை கட்டமைப்பு வவசதிகள் அளிக்கப்பட வேண்டும். இராமநாதபுரத்திலே சென்ற அரசு பெயரளவிலே மருத்துவக் கல்லூரி தொடங்கியதாக அறிவிப்பு மட்டும் செய்தது. வேறு எந்த நடவடிக்கையும் இல்லை. அதுவும் தொடர வேண்டும். இராமநாதபுரத்திலே ஓடக்கூடிய போக்குவரத்துக் கழகத்தினுடைய தலைமையகம் கும்பகோணத்திலே இருக்கின்றது. அந்தக் கோட்டம் கும்பகோணத்திலிருந்து காரைக்குடிக்கு மாற்ற வேண்டுமென்று கேட்டுகொண்டு நல்ல வாய்ப்பைத் தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்.<br />
<br />
<em>அதற்கு விளக்கமளித்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எஸ் கோகுல இந்திரா உறுப்பினர் பேசும்போது இஸ்லாமியர் சில கோரிக்கைகளை திருமண பதிவு சம்பந்தமாக கூறியிருக்கின்றார் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி விளக்கமாக சொல்லி வாக்குறுதியில் சொல்லியுள்ளதாக சொல்லியிருக்கின்றார்கள்..உறுப்பினர் அந்த கோரிக்கைகளை விளக்கமாக எங்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் நிச்சயமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடனடியாக அதற்குரிய (மேசையை தட்டும் ஒலி)நியாயப்படுத்தப்பட்ட அவர்களுடைய கோரிக்கையை சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக சாதி பாராத நீதி மானாக இதுவரை விளங்ககூடிய முதலமைச்சர் அம்மா அவர்கள் உடனடியாக அதற்குள்ள ஆய்வுகள் செய்து நிவாரணமும் அவர்களுக்குள்ள அந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார்</em></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-29469864420637245532011-06-12T11:54:00.000+04:002011-06-12T11:54:20.666+04:00இலஞ்ச, ஊழல், அதிகார துஷ் பிரயோகங்களை அறவே விரும்பாத அரசர்!!!!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">முஹம்மது மக்தூம் அப்துல் ஜப்பார் அவர்களின் Facebook குறிப்புகளிலிருந்து....</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636, 6679)</div></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-25791189178794726912011-06-11T19:00:00.000+04:002011-06-11T19:00:06.084+04:00இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="mbl notesBlogText clearfix"><div>இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.<br />
ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.<br />
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது<br />
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது.<br />
இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள்.<br />
பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.<br />
ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.<br />
<br />
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை.<br />
<br />
ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.<br />
<br />
அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.<br />
<br />
இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".<br />
<br />
ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர், "பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்".<br />
<br />
இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார்.<br />
<br />
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."<br />
<br />
நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.<br />
<br />
அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.<br />
<br />
குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,<br />
<br />
Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள்.<br />
Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு.<br />
One Reason - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு.<br />
The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம்<br />
Thanks: syed lalpet Facebook notes.... </div></div></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-6493047813416046292011-06-11T18:49:00.000+04:002011-06-11T18:49:37.821+04:00சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரலை எதிரொலித்த ஜவாஹிருல்லாஹ்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="mbl notesBlogText clearfix"><div><span class=" fbUnderline"><strong>சட்டமன்ற மமக கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சமுதாயத்தின் குரலை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.</strong></span><br />
<br />
வியாழன்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கெடுத்து அவர் பேசியது: பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்யும் சட்டம், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.<br />
<br />
<span class=" fbUnderline"><strong>இஸ்லாமியர்களின் திருணங்கள் ஜமாத்துக்களில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் திமுக அரசு கொண்டு வந்த திருமணங்கள் கட்டாய பதிவு என்கிற சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இதுகுறித்த கோரிக்கையை அப்போதைய திமுக அரசிடம் வைத்தோம். ஆனால் நிராகரித்து விட்டது.</strong></span><br />
<br />
<span class=" fbUnderline">திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. ஆனால், பதிவுக்கான விதிமுறைகளை எதிர்க்கிறோம். எந்தக் குறிப்பாணையும் இல்லாமல் ஜமாத்துக்களின் சான்றுகளை வைத்துக் கொண்டு திருமணங்களை பதிவு செய்திட வேண்டும் என்று பேராசிரியர் தனது பேச்சை தொடர, அமைச்சர் கோகுல இந்திரா (குறுக்கிட்டு): திருமண பதிவு சம்பந்தமாக உறுப்பினர் சில கோரிக்கைகளை வைத்தார். </span><br />
<br />
அவரது கோரிக்கையை விளக்கமாக எங்களிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.<br />
முதல்அமைச்சர் ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்றார்.<br />
<br />
<br />
<span class=" fbUnderline"><strong>தொடர்ந்து பேராசியர் பேசுகையில், ''இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 10,400 பேர் அரசிடம் விண்ணப்பித்தனர். ஆனால், இதில் 3 ஆயிரம் பேருக்குத்தான் ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைத்தது. எனவே, மீதமுள்ளவர்களில் பாதி பேருக்காவது அங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். </strong></span><br />
<br />
வருங்காலத்தில் இன்னும் வலுவாக சமுதாயத்தின் கருத்தை பதிவு செய்வார்.....<br />
<div style="text-align: left;">Thanks....Aym yusuf' facebook notes</div></div></div></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-84717482590879371532011-06-09T19:52:00.002+04:002011-06-09T19:52:29.240+04:00ஊழல் மற்றும் மதுபான ஆற்றில் மூழ்கிக் கிடக்கும் குஜராத் அன்னா ஹசாரே பரபரப்பு குற்றச்சாட்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஊழலுக்கு எதிராக போர் முரசம் கொட்டி வரும் சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் குறித்து தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார். மோடி யின் அரசு ஓர் ஊழல் நிறைந்த அரசு என்றும் அது ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங் களை கையகப்படுத்தும் செயலில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது என்றும் சமூக நல ஆர்வலர் அன்னாஹசாரே கடுமை யாக சாடியுள்ளார். <br />
<br />
ஹசாரேயின் கருத்துக்கள் மோடி அரசின் கொடூரத்தை வெளிப்படுத்தி காட்டுவதாக இருந்தது. இருப்பினும் இனப்படு கொலை தவிர்த்து மோடியின் நிர்வாகம் நல்ல முறையில் நடை பெறுவதாக ஒரு குருட்டு கருத்தோட்டம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்தது.<br />
<br />
2002ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலை நிகழ்வுகளுக்கும் மோடிக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்க முடியாது என பல ஊடகங்களும் மோடியை வளர்ச்சிக்கான அரசியல் வாதியாக வர்ணித்தன. காந்தியடிகள் பிறந்த மாநிலம் ஆதலால் அங்கு பூரண மது விலக்கு என்றுமே நடைமுறையில் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அதைக்கூட மோடியின் சாதனையாக டமாரம் அடிக்க ஒரு கூட்டம் காத்திருந்தது, மோடிக்கு முன்பாக ஆட்சி செய்தவர்கள் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் அதைக்கூட மோடியால் செயல்படுத்த முடியவில்லை.<br />
<br />
இந்நிலையில் அன்னாஹசாரே வெளியிட்ட கருத்துக்கள் மாயை களை உடைத்து உண்மைகளை வெளிப்படுத்தியது. குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதாக கூறப்படுவது ஒரு மாயை என்றும் மாநிலத்தில் பாலைவிட அதிகமாக மதுபானங் கள் தான் ஆறாக ஓடுகின்றன என்றும் கூறி பரபரப்பு தீயை பற்றவைத்திருக்கிறார்.<br />
<br />
லஞ்ச ஊழலுக்கு எதிராக பாடுபட்டுவரும் அன்னாஹசாரே கடந்த மாதம் மோடி அரசை நல்லாட்சி என்று பாராட்டினார். பின்னர் அது தவறு என்று உணர்ந்து கொண்டதாக கூறி தனது மோடி ஆதரவு கருத்துக் களை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
-ஹபீபா பாலன்<br />
</div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-62640404619084122982011-05-12T16:54:00.000+04:002011-05-14T00:26:02.713+04:00தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong>எதிர்ப்புகள் தணிந்த பின்னரும் மக்களின் சாவுகள் பற்றிய கோபம் கனன்று கொண்டுதான் இருக்கிறது.</strong><br />
<strong>நிருபமா சுப்ரமணியன் – தி இந்து 24.11.2010</strong><br />
<br />
“ஷமீர் இந்தா, போய் பேரிக்கா வாங்கிக்க,” என்று தந்தை கொடுத்த 10 ரூபாய் நோட்டுடன் வாசலுக்கு ஓடிய சிறுவன், தள்ளுவண்டிக்காரரிடம் வாங்கிய கொழுத்த 5 பேரிக்காய்களுடன் திரும்பினான். அதில் ஒன்றைக் கவ்விக்கொண்டு, “அப்பா நான் மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்ரேன்” என்று கத்திக் கொண்டே மறுபடியும் வெளியே ஓடினான். ஸ்ரீநகர் பத்மலூ பகுதியில் வாழ்பவரும், பக்கத்து பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்பவருமான ஃபியாஸ் அகமத் ராஹ் என்ற தந்தையும் அவரது எட்டு வயது மகன் ஷமீரும் ஆகஸ்ட் 2 அன்று நண்பகலில் பேசிக்கொண்ட கடைசி சொற்கள் இவைதான். அடுத்த சில மணிகளில் அச்சிறுவன் ஷமீர் இறந்து கிடந்தான்.<br />
புறக்கடை சந்தில் வைத்து நாலைந்து சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அவனை லத்திக் கம்புகளால் விளாசியதையும், அவன் தொண்டைக் குழியில் கம்பை வைத்து அழுத்தியதையும் பார்த்ததாக அக்கம் பக்கத்து மக்கள் ராஹிடம் தெரிவித்தனர்.<br />
”ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர். அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான்” என்று கதறுகிறார் தந்தை.<br />
சிறுவன் அடித்துக் கொல்லப்படவில்லை; அன்று அந்த பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டபோது தலைதெறிக்க ஓடிய கூட்டத்தில் மாட்டி மிதிபட்டு செத்தான் என்று மறுத்துரைக்கிறது ஸ்ரீநகர் போலீசு. சட்டத்தை அமல் படுத்துவோருக்கும் மக்களுக்கும் இடையிலான பிளவு கடந்த நான்கு மாதங்களாய் படுபாதாளமாகி இருக்கும் நிலையில் போலீசின் இந்தக் கூற்றைக் கொள்வாரில்லை. ஷமீர் மரணம் தொடர்பாகப் போலீசால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுக்கிறார் அவனது தந்தை.<br />
”அன்று அப்படி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை. என் மகனது மரணத்துக்குப் பின்னர்தான் எதிர்ப்புகள் கிளம்பின” என்று விவரிக்கும் தந்தையின் கண்ணீர் வழிந்தோடுகிறது. ”என் மகனைக் கொலை செய்த சி.ஆர்.பி.எஃப் ..காரர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது” என்கிறார் ஃபயாஸ்.<br />
ஸ்ரீநர் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் கல்லெறியும் மக்கள் போராட்டத்தை எதிர்கொண்ட போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினரின் தாக்குதலால் ஜூன் 11 அன்று கொல்லப்பட்ட 17 வயது பள்ளிச் சிறுவன் துஃபயில் மட்டூ தொடங்கி, ஜூன் முதல் அக்டோபர், 2010 வரையிலான மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட 112 பேர்களில் ஷமீரும் ஒருவன். ஒவ்வொரு சாவும் பல போராட்டங்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது. ஒவ்வொரு போராட்டமும் சாவு எண்ணிக்கையை உயர்த்துகிறது.<br />
<br />
<strong>போலீசுத் தரப்பு மறுமொழி</strong><strong> </strong><br />
“இந்த சாவுகளில் சில நியாயப்படுத்த முடியாத வகையில், தவறான நடவடிக்கைகளால் விளைந்ததாக இருப்பினும், பெரும்பாலான சம்பவங்களில் கிளர்ந்தெழும் கும்பலின் நோக்கம் வன்முறையாகவே இருந்தது. துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிற வேறு தெரிவு இல்லை” என்கிறது போலீசு தரப்பு.<br />
அமைதிவழிப் போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனத்துக்கு, “தீ வைப்பு எல்லாம் என்று முதல் அமைதிவழிப் போராட்டம் ஆனது?” , “ துப்பாக்கி அற்ற, காந்திய வழியில் நாங்கள் வன்முறையை எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதெல்லாம் அதீத கற்பனை” என்கிறார் ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரி.<br />
போலீஸ் தரப்பு நியாயங்கள் எதுவாயினும், போராட்டம் சற்றே ஓய்ந்திருப்பினும், இந்த மரணங்கள், “இந்தியப் படைகளுக்கும்”, புது டில்லி அரசுக்கும், மற்றும் ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசுக்கும் எதிராக நீறுபூத்ததொரு கோபக் கனலை விட்டுச் சென்றுள்ளன. இப் படுகொலைகளை விசாரிக்க ஜூலை இறுதி நாட்களில் இரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதில் வெறும் 17 சாவுகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட இருப்பது மேலும் ஒரு கசப்பான முடிவு.<br />
நிகழ்ந்த எல்லாப் படுகொலைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால், அதே சமயம், கடந்த கால விசாரணைக் கமிஷன்களில் தாங்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், குற்றவாளிகள், அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படையினர், தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் எள்ளளவும் இல்லை.<br />
1990 முதல் 2006 வரையிலான காலத்தில் 458 வழக்குகளில் ஆய்வு முடிவுகள் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சுமத்தின. ஆனால் அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடுப்பதற்கான அனுமதி இதுநாள் வரை வழங்கப்படவில்லை என ஹிந்து நாளேட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள் கூட்டணியைத் தலைமையேற்று நடத்தும் வழக்கறிஞர் பர்வேஸ் இம்ரோஸ்.<br />
<br />
<strong>மற்றொரு உதாரணம்</strong><strong> </strong><br />
தங்கள் முன் வாக்குமூலம் அளிக்குமாறு விசாரணைக் கமிஷனில் இருந்து வந்த இரண்டு தாக்கீதுகளுக்கும் கொலையுண்ட சிறுவன் துஃபயிலினின் தந்தை அர்ஷத் மட்டூ செவிசாய்க்கவில்லை. மாறாக, தனது மகன் சாவுக்கு ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வலியுறுத்தி அவர் சொந்த முறையில் நீதிமன்றப் போராட்டம் நடத்துகிறார்.<br />
12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பு முடிந்து வீடு திரும்புகையில் இறக்கிறான். முதலில் அவன் தனது நண்பர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது போலீசு. ஆனால், தலையில் கண்ணீர்ப் புகைக் குண்டடி பட்டதால் ஏற்பட்ட மரணம் இது என்றது பிரேதப் பரிசோதனை அறிக்கை. அவன் கல்லெறியும் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டதில்லை என்கிறார் அவனது தந்தை.<br />
தான் பெற்ற நீதிமன்ற ஆணையைக் கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய போலீசை நிர்ப்பந்திக்கிறார் மட்டூ. ஆனால் அவ்வாறு பெறப்படும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போலீசின் முதல் தகவல் அறிக்கையோ, இரு தரப்புத் துப்பாக்கிப் பிரயோகத்தின் இடையே நிகழ்ந்த மரணம் இது என்கிறது. மட்டூ இதை மறுக்கிறார். வழக்கு இன்னமும் சி.ஜெ.எம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.<br />
வசதியான கம்பள வியாபாரியான அவர் அரசு அளித்த 5 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை ஏற்கவில்லை. அக்கம்பக்கத்து வீட்டுச் சுவர்களில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கின்றன. ”என் மகன் சிந்திய குருதியை விலைபேசவா நான் இருக்கிறேன். என் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இந்த அரசு உடனடியாக முனைந்திருக்குமானால் ஏனைய 111 பேர் தம் உயிரை இழக்கும்படி நேர்ந்திருக்காது” என்கிறார் மட்டூ.<br />
”இந்தியா என்னை ஏமாற்றிவிட்டது. செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட இந்திய ஜனநாயகத்தின் பல அம்சங்களை நான் மதித்து வந்தேன்… ஆனால், இனி என்றும் அதற்கு இடமில்லை” என்கிறார் அவர்.<br />
இந்த மனநிலைதான் பரந்த அளவில் அங்கு காணப்படுகிறது. “உ.பி. போலீசு துப்பாக்கி சூட்டில் இரு விவசாயிகள் இறந்ததற்குப் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டார்களே; காஷ்மீரில் 112 பேர் செத்ததற்கு மட்டும் எதையும் காணோமே, ஏன்?” என்று கேட்கிறார்கள் மக்கள். ஊழல் விவகாரத்தால் மகாராட்டிர முதல்வர் இராஜினாமா செய்கிறார்; ஊடகங்களின் கூச்சலால் ரத்தோரி சிறைக்கு அனுப்ப்ப்படுகிறார்; ஆனால், இங்கே காஷ்மீரில் ஏராளமான படுகொலைகள் நிகழ்ந்த பின்னும் இதுபற்றி ஒரு சலசலப்பு கூட இல்லையே ஏன் என்கிறார்கள் அவர்கள்.<br />
“இந்தியாவின் பிற பகுதிகளில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையிலும் கூட, மக்கள் சமூகம் தனது அக்கறையை வெளிப்படுத்திய விதம் காரணமாக இந்த அரசு தன் இஷ்டம்போல் செயல்பட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், காஷ்மீரில் இந்தப் பாதுகாப்புப் படை சட்ட ரீதியான பாதுகாப்பை மட்டுமல்ல, இந்திய மக்கள் சமூகம் மற்றும் ஊடகத் துறையின் அரசியல் மற்றும் தார்மீக பலத்தையும் பெற்றுத்தான் எங்கள் மீது பாய்கிறது” என்கிறார் வழக்கறிஞர் இம்ரோஸ்.<br />
காஷ்மீரின் அரசியல் பிரச்சினைகள் சிக்கலானவை; உணர்ச்சிபூர்வமான பலவற்றை உள்ளடக்கியதாக, ஓருநாளில் தீர்வுகாண இயலாததாக இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது; ஆயினும், அதே வேளையில் இந்த அரசு குறைந்த பட்சம் மனித உரிமை விசயங்களையாவது உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்கிறார் இந்த வழக்கறிஞர். “நீங்கள் இதைக்கூட செய்யவில்லை என்றால், இந்திய ஜனநாயகம் தன் மூஞ்சியில் தானே கரி பூசிக்கொள்கிறது என்பதைத் தவிர வேறென்ன” என்கிறார் அவர்.<br />
தெருநாய்களைக் கொல்வது தடை செய்யப்பட்டிருப்பதையும், ஒரு கரடியைக் கொன்ற குற்றத்துக்காக 2007-ம் ஆண்டுமுதல் சிறையில் கிடக்கும் இரண்டு காஷ்மீரிகளையும் குறிப்பிட்டு, ”இந்தியாவில் காஷ்மீரிகளைவிட விலங்குகளுக்குக் கூடுதல் நியாயம் கிடைக்கிறது” என்று ஷமீரின் நினைவில் கண்ணீர் வடித்தபடி அவனது தந்தை கூறுகிறார்.<br />
<strong>நியாயம் இல்லை</strong><strong>’</strong><strong></strong> <br />
”இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விசயத்தில் அது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறது. இந்திய அரசியல் அமைப்பில் காஷ்மீரிகளுக்கு நீதி இல்லை” என்கிறார் குலாம் நபி ஹகிம். போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட்த்தில் கலந்துகொண்டு குண்டடிபட்டு இறந்த சுகில் அகமத் தார் என்ற 15 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஃபிதா நபி என்ற 19 வயது சிறுவனின் தந்தை இவர்.<br />
நுரையீரல் சிதைந்து சின்னாபின்னமானதால் மரணத்தைத் தழுவினான் உமர் கயாம் என்ற 17 வயது சிறுவன். “ஆகஸ்ட், 22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போலீசு நடத்திய தாக்குதலுக்கு ஆளாகி அவன் இறந்தான். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நாங்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறந்தோர் பற்றிய அதிகாரபூர்வப் பட்டியலில் அவனது பெயர் சேர்க்கப்படவில்லை” என்கின்றனர் அவனது குடும்பத்தார்.<br />
“காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணா அங்கமாக இருப்பது உண்மையானால், இந்தியா எங்களுக்காக ஏன் வருந்தவில்லை? உடலின் ஒரு உறுப்பு காயமுறுமானால் பிற உறுப்புகள் அதன் வலியை உணரவேண்டும். தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்” என்கிறார் அச் சிறுவனின் தந்தை அப்துல் கயாம்.<br />
<div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><b>நன்றி: மனிதநேய மக்கள் கட்சி </b></div><br />
<br />
</div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-27703934641496879302011-04-29T09:15:00.001+04:002011-04-29T09:15:50.725+04:00ம. ம. க துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி விண் தொலைக்காட்சி நேர்காணல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><object height="390" width="640"><param name="movie" value="http://www.youtube.com/v/4lhLb_CpbOQ&hl=en_US&feature=player_embedded&version=3"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/4lhLb_CpbOQ&hl=en_US&feature=player_embedded&version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"></embed></object></div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-85633405462939212802011-04-29T08:55:00.003+04:002011-04-29T09:27:41.937+04:00லால்பேட்டையில் நடந்த உயர்கல்விக்கான வழிகாட்டும் விழா புகைப்படதொகுப்பு..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" height="400" width="600"><param name="flashvars" value="host=picasaweb.google.com&hl=en_GB&feat=flashalbum&RGB=0x000000&feed=https%3A%2F%2Fpicasaweb.google.com%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2Flalpetexpress%2Falbumid%2F5600652455974439153%3Falt%3Drss%26kind%3Dphoto%26authkey%3DGv1sRgCM3gkNWipYWWKA%26hl%3Den_GB" /><param name="src" value="https://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf" /><embed type="application/x-shockwave-flash" width="600" height="400" src="https://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf" flashvars="host=picasaweb.google.com&hl=en_GB&feat=flashalbum&RGB=0x000000&feed=https%3A%2F%2Fpicasaweb.google.com%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2Flalpetexpress%2Falbumid%2F5600652455974439153%3Falt%3Drss%26kind%3Dphoto%26authkey%3DGv1sRgCM3gkNWipYWWKA%26hl%3Den_GB"></embed></object></div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-37903558952182608402011-04-22T09:40:00.003+04:002011-04-22T09:51:48.434+04:00லால்பேட்டையில் உயர்கல்விக்கான வழிகாட்டும் விழா அழைப்பிதழ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglWa1Eox4tIrrVhVgwfDcbdXoCkmduUdu_3NIK8_TLWu9E9R8Ui-ufadooLth2StfAF8W-LU-Hi9djttFaFxDWnn1m8V7SnAY9QJu7pg__MJA4nvhSjIUSqGMENreN4GbLt1JNmvOE3p4/s1600/3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" i8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglWa1Eox4tIrrVhVgwfDcbdXoCkmduUdu_3NIK8_TLWu9E9R8Ui-ufadooLth2StfAF8W-LU-Hi9djttFaFxDWnn1m8V7SnAY9QJu7pg__MJA4nvhSjIUSqGMENreN4GbLt1JNmvOE3p4/s640/3.JPG" width="360" /></a></div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq7fJ2G7MpWrsEPUjZKfeqZMWaplwRnNGtUz2c9lMwC1gasQc96Rze3BRQjlFavimLogsn3hZPhwYCen1kwfYUaWc6oEXmv693io0K4Sl87-BET68c6hSHnj0q-nVIFN2gM_9w1o0kEzM/s1600/2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" i8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq7fJ2G7MpWrsEPUjZKfeqZMWaplwRnNGtUz2c9lMwC1gasQc96Rze3BRQjlFavimLogsn3hZPhwYCen1kwfYUaWc6oEXmv693io0K4Sl87-BET68c6hSHnj0q-nVIFN2gM_9w1o0kEzM/s640/2.JPG" width="360" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8CtqV44t7_gUKWoGO4J-Fs4qxr78phbclHemBzmXLgz44uNtRZxB8EZ_MBc2E6aoofZnr4gtJcuQd_Ky4zo3p6nqtFi6NCnlL3EpZSb5jatiNw3Bd1N1S2oqx4F7R0ey9RuUzUVB2Fec/s1600/1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" i8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8CtqV44t7_gUKWoGO4J-Fs4qxr78phbclHemBzmXLgz44uNtRZxB8EZ_MBc2E6aoofZnr4gtJcuQd_Ky4zo3p6nqtFi6NCnlL3EpZSb5jatiNw3Bd1N1S2oqx4F7R0ey9RuUzUVB2Fec/s640/1.JPG" width="360" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjuMlf1-QITE6PUNzcuBxanyOti_toylYZiqNxNjkADiO6iQXjwCEMEhtztU4UHrAcQON_lQyz69owFX6bJ3r4VYz8Pseljy70TsCwbaJ43LQvmMA49zuRTctVZlk8hieSaBrtKYe6N94/s1600/4.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" i8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjuMlf1-QITE6PUNzcuBxanyOti_toylYZiqNxNjkADiO6iQXjwCEMEhtztU4UHrAcQON_lQyz69owFX6bJ3r4VYz8Pseljy70TsCwbaJ43LQvmMA49zuRTctVZlk8hieSaBrtKYe6N94/s640/4.JPG" width="360" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div></div></div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-35656599956777188642011-02-19T09:22:00.000+04:002011-02-19T09:22:23.372+04:00நாவின் விபரீதம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><span style="color: #009900;">அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சிசை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றுதான் நாவும். நாவைக் கொண்டு சுவர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.<br />
<br />
மனிதனின் உயர்வுக்கும்;, தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை, சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் ''சிறப்பிடத்தைப்'' பெற்று விடுகிறார்கள். சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி ''மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்'' பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட நாவைப்பற்றி திருக்குர்ஆனும், நபி மொழியும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.<br />
</span>எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப்பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும். (17:36)</strong><br />
<br />
<b>ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (50:18)</b><br />
<b><br />
நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)</b><br />
<b>ஓர் அடியான் சில வார்த்;தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)<br />
<br />
(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்;மிதி)<br />
<br />
<b style="color: #009900;">அரைகுறை ஞானமுள்ள எந்த விஷயத்தையும் நாம் வெளிப்படுத்தக்கூடாது! ஏனெனில் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனை வழங்கப்படும்.<br />
</b><b style="color: #009900;">நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி ஸல் அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவனமாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.</b></b><br />
<div><b style="color: #009900;"><br />
நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.</b></div><div><span style="color: #cc0000;">1. புறம் பேசுதல்<br />
</span><b style="color: #009900;">மனிதர்கள் கூட்டமாகக் கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர். ஆண், பெண் இருபாலரும் அடுத்தவரைப்பற்றி குறிப்பிட்டு புறம் பேசுவது வாடிக்கையான செயலாக மாறி விட்டது. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.<br />
<br />
சிலர் நாங்கள் உண்மையைத்தானே கூறுகிறோம் இதில் தவறென்ன இருக்கிறது? என்று கேட்கலாம். ஒருவரிடத்தில் இருக்கும் தவறைக் கூறுவதே புறமாகும். ஒருவரிடத்தில் தவறிருக்கக் கண்டால் அத்தவறை உரியவரிடம் நேரடியாகக் கூறி அவரது தவறை நீக்க முயல வேண்டுமே தவிர ஊர் முழுக்கப் பறைசாற்றக் கூடாது.</b><br />
<br />
<b>ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? எனத் தோழர்களிடம் வினவினார்கள். அதற்குத் தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப்பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் எனப் பகர்ந்தார்கள். (முஸ்லிம்)</b><br />
<br />
<b style="color: #009900;">புறம் பேசுவது தனது சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதைப் போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.</b><br />
<b><br />
மேலும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். (49:12)</b><br />
<b style="color: #009900;"><br />
புறம் பேசுதலைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது புறம் பேசுபவரின் வார்த்தையைக் கடலில் போட்டால் இதனுடைய கடுமையான சொல்லின் காரணத்தால் கடல் நீரின் தன்மையே மாறிவிடும் என்றார்கள்.</b><br />
<br />
<b style="color: #330033;">நான் நபி ஸல் அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)</b><br />
<br style="color: #009900;" /><b style="color: #009900;">புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களாலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</b><br />
<br />
<b>மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை, கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும், நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே இவர்கள் யார்? என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள். (அஹ்மத், அபூதாவூத்)</b><br />
<b style="color: #009900;"><br />
இப்படிப்பட்ட பெரும் பாவமான புறம் பேசுதலை நாமும் தவிர்ந்து கொண்டு, அவை பேசப்படும் இடத்தை விட்டு விலகி விடவும் வேண்டும்.</b><br />
<b><br />
(முஃமீன்கள்) வீணானதைச் செவியுற்றால் அதைப்புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள். (28:55)<br />
<br />
(ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனத்திற்குரியவர்கள்) வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள். (23:3)</b><br />
<br />
<b style="color: #009900;">புறம் பேசுதலைத் தவிர்ந்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய மணிமொழிகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.</b><br />
<b><br />
1. முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ''எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி ஸல் அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)<br />
<br />
2. எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)<br />
<br />
3. நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப்பிடித்துக் கொள்ளத்தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ''எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி! பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இதுதான் என்று கூறினார்கள்.<br />
<br />
அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி). ஆதாரம் : திர்மிதி<br />
<br />
<br />
<b style="color: #cc0000;">2. அவதூறு</b><br />
<b><br />
நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு, கடுமையான வேதனையும் உண்டு. (24:23)</b><br />
<br />
<b style="color: #cc0000;">3. கோள்</b><br />
<br />
<b style="color: #009900;">''ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை'' சிலர் தொழிலாகவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப் பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்லாமல் சுவர்க்கம் செல்லவே முடியாது. கப்ரில் கடுமையான வேதனையுமுண்டு என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது.</b><br />
<b><br />
குறை சொல்லி புறம் பேசித்திரியும், ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104:1)</b><br />
<b><br />
கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)</b><br />
<br />
<b>நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும் போது இந்தக் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள் அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. ஏன்றாலும், அது பெரும் பாவம்தான். ஆவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றொருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)</b><br />
<br />
<br />
<b style="color: #cc0000;">4. பொய் சாட்சி</b><b><br />
<br />
அவர்கள் (அல்லாஹ்வின் அடியார்கள்) பொய் சாட்சி சொல்லமாட்டார்கள். மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம்</b> <b>செல்வார்களாயின் கண்ணியமானவர்களாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள். (25:72)<br />
<br />
பெரும் பாவங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ''அல்லாஹ்விற்கு இணைவைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது, பொய் சாட்சி சொல்லுவது'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)</b><br />
<br />
<br />
<span style="color: #cc0000;">5. தர்மம் செய்ததை சொல்லிக் காட்டுதல்<br />
</span><b>நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் தர்மங்களை, பாழாக்கி விடாதீர்கள். (2:264)<br />
<br />
மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு, கடுமையான வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன், (தனது) கீழாடையை (பெருமைக்காக, கரண்டை காலுக்கு கீழ்) தொங்க விடுபவன், (தான் செய்த தர்மத்தை) சொல்லிக்காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள். (முஸ்லிம்)</b><br />
<br />
<br />
<b style="color: #cc0000;">6. சபித்தல்</b><br />
<b><br />
ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, அபூதாவூத்)<br />
<br />
ஒருவர் இன்னொருவரை ''பாவி'' என்றோ, ''காஃபிர்'' என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)</b><br />
<br />
<br />
<b style="color: #cc0000;">7. இறந்தவர்களை ஏசக்கூடாது</b><br />
<b><br />
இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதை பெற்றுக் கொண்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)</b><br />
<br />
<br />
<b style="color: #cc0000;">8. பக்கத்து வீட்டுக்காரருக்கு துன்பம் தருதல்</b><br />
<br />
<b>யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும், இல்லையெனில் மௌனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)</b><br />
<br />
<br />
<b style="color: #cc0000;"><br />
9. காலத்தைத் திட்டுதல்</b><br />
<br />
<b>காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள், காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும், பகலையும் மாறி வரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)</b><br />
<br />
<b style="color: #009900;">இதுவரை நாம் நாவினால் ஏற்படும் தீங்குகளையும் அவற்றைப் பற்றிய திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் எச்சரிக்கைகளையும் கண்டோம்.<br />
<br />
சொர்க்கம் செல்வதற்கு நாவு தடையாகிறது என்பதை எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் நாவை சரியாக பயன் பயன்படுத்துவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையும் கூறுகிறார்கள்.</b><br />
<br />
<b>எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பெற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)</b><br />
<br />
<br />
<b style="color: #cc0000;"><br />
அன்புள்ள சகோதர, சகோதரிகளே!</b><br />
<br />
<b style="color: #009900;">இதுவரை நாவின் விபரீதத்தைப் பற்றித் தெரிந்தோம். இதே நாவை நல்ல காரியங்களில் பயன்படுத்தினால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. நாவைக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாம்;, குர்ஆன் ஓதலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம். இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம். நாவை நல்ல வழிகளில் பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகiளில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.</b><br />
<br />
<span style="color: #cc0000;">1 . குர்ஆன் ஓதுதல்</span><b><br />
· நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு) பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)<br />
<br />
குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ''அலிஃப்,லாம்,மீம் என்பது ஓர் எழுத்து'' என்று நான் சொல்லமாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)</b><br />
<br />
<b style="color: #cc0000;">2 . தஸ்பீஹ் செய்தல்</b><br />
<br />
<b> இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக இலகுவானவை, இறைவனின் தராசில் மிக கனமானவை, இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை (அவ்விரு வார்த்தை) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)</b><br />
<br />
<b style="color: #999999;"><span style="color: #cc0000;">3 . நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்</span></b><br />
<br />
<b> (விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (3:110)</b><br />
<br />
<b style="color: #009900;">நாவு மனிதனை சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய உறுப்பு என்பதைத் தெரிந்தோம். ஆகவே நரகம் செல்லக்கூடிய (சொல்) செயல்களிலிருந்து நம் நாவைப்பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய (சொல்) செயல்களைச் செய்து நாவினால் சுவர்க்கம் செல்ல நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக</b>. </b></div><div style="text-align: left;"><b>நன்றி: தமுமுக துபை இணையதளம்.</b></div></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-28034998340043824302011-02-18T18:18:00.000+04:002011-02-18T18:18:36.944+04:00எகிப்தில் வெற்றி ஊர்வலம்!!!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEila3lnh510bVFIl1jyB4N3qF5RsTHk1_N0Yfk3vYLe4XStAbCfvDplfqdJAmDixS_ppB32C5g5bh_WJtbHmfquL1BRWKTJLgmb8UnhOTjnyAlLonOg4lClj-1TJiLpODFFFvNtcSr2nGU/s1600/165336952.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="210" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEila3lnh510bVFIl1jyB4N3qF5RsTHk1_N0Yfk3vYLe4XStAbCfvDplfqdJAmDixS_ppB32C5g5bh_WJtbHmfquL1BRWKTJLgmb8UnhOTjnyAlLonOg4lClj-1TJiLpODFFFvNtcSr2nGU/s320/165336952.jpg" width="320" /></a></div><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">எகிப்து நாட்டினை கடந்த முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கை விரட்டியடித்ததை கொண்டாடும் விதமாக எகிப்தியர்கள் இன்று வெள்ளிக் கிழமை தலைநகர் கெய்ரோவில் ஒன்று திரண்டு வெற்றி ஊர்வலம் நடத்தினர்.</span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">சுமார் பதினெட்டு நாட்கள் நடத்திய அதிபரை வெளியேற கோரி நடத்திய போராட்டத்தின் போது சுமார் 356 பேர்கள் கொல்லப்பட்டதாகவும்5550 பேர்கள் காயங்கள் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.</span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"></span><br />
<div>இந்நிலையில் ஹோஸ்னி முபாரக்கை விரட்டப்பட்டதை கொண்டாடும் விதமாக எகிப்தியர்கள் இன்று கெய்ரோவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வெற்றி ஊர்வலம் நடத்தியுள்ளனர். பின்னர் தஹ்ரீர் சதுக்கத்தில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையினை பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் யூசுப் அல்</div><div> கர்ளாவி நடத்தினார். இறுதிவரை பின்வாங்காமல் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற எகிப்தியர்களை அவர் குத்பா உரையின் போது பாராட்டினார். </div><div>புதிய எகிப்து உருவாகும் வரை போராட்டம் ஓயாது என குத்பா உரையின் போது அறிஞர் அல் கர்ளாவி குறிப்பிட்டார்.</div><div>அதிபருக்கெதிராக போராட்டம் நடைபெற்ற வேளையில் கைது செய்யப்பட்டவர்களை ராணுவ அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான முஹம்மது வகீத் கூறியிருக்கிறார் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது.</div><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</span></div>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1174512620876631199.post-25825707896253708812011-02-18T17:00:00.000+04:002011-02-18T17:00:28.536+04:00புகைப்பிடிப்பது தொடர்பாக புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரரின் கேள்விக்கு பதிலளிக்கிறார் டாக்டர் ஜாகிர் நாயக்....!<iframe height="344" src="http://www.youtube.com/embed/pblASqFsaPU?fs=1" frameborder="0" width="425" allowfullscreen=""></iframe>கொள்ளுமேடு பை.மு.ரிபாயிhttp://www.blogger.com/profile/08361215879778267744noreply@blogger.com