சனி, 16 மார்ச், 2013

ஆபத்தை விளைவிக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள்:ஓர் எச்சரிக்கை

இன்றைய இஸ்லாமிய இளைய தலைமுறையினரின் நடத்தைகள் படுமோசமான நிலையில் இருக்கிறது.இந்த அவல நிலையைத் துடைத்தொழிக்க முறையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாமல் போனால் கல்வி,தொழில்,குடும்பம் ஆகிய துறைகளில் நமது வளரும் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது தகவல் தொடர்பு சாதனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தவண்ணம் உள்ளன. கல்வி, பொருளாதார பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும்இச்சாதனங்கள்,
ஆபாசம் போன்ற சமூக சீர்கேடுகளை பரப்புவதற்காக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

செல்போன்களும்,தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்

செல்போன்கள் பயன்பாட்டிற்கு வருமுன் வீட்டில் கம்பிவட தொலைபேசி இணைப்பை வைத்திருப்போர் கூடுதல் கட்டணம் (பில்) வந்துவிடுமோ என்று அஞ்சி அவசியத் தேவைகளுக்காக மட்டுமே அதனை பயன்படுத்தி வந்தனர்.
செல்போன்கள் பயன்பாட்டிற்கு வந்ததற்கு பின்னர் குடும்பத்தில் பெரியவர்கள் சிறியோர் உட்பட அணைவரும் இதனை பயன்படுத்;த தொடங்கி விட்டனர்.இதனால் குடும்ப வருமானத்தில் ஒரு கனிசமான தொகையை செல்போன் அட்டைகளுக்காக செலவிடும் போக்கு தற்போது அதிகரித்து விட்டது.

அவசியம் இல்லாவிட்டாலும் ஆடம்பரத்திற்காக மனைவி,மக்களுக்கு விலையுயர்ந்த செல்போன்ளை வாங்கித் தரும் பழக்கம் இன்றைய சமூகத்தில் நாகரீகமாக கருதப்படுகிறது.

நவீன வசதிகளுடன் கூடிய செல்போன்களின் வரத்து சந்தைகளில் இன்றைக்கு அதிகரித்துள்ளதால்; சமூகத்தின் அணைத்து தரப்பினரிடமும் இத்தகைய செல்போன்களுக்கு மவுசு கூடியுள்ளது.இவற்றில் இருக்கும் புளூடூத்,காமிரா,இணையம் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி ஆபாசமான அருவருக்கத்தக்க காரியங்களை தங்களுக்கு மத்தியில் நமது இளைய தலைமுறையினர் பரிமாறிக் கொள்வதை நம்மால் காண முடிகிறது.
கள்ளத்த்தனமாக மணிக்கணக்கில் நமது இளைஞர்களும் இளம்பெண்களும் மாற்றார்களுடன் உரையாடும் போக்கு தற்போது செல்போன்கள் வாயிலாக அதிகரித்துள்ளது.இவ்வாறு தொடரும் செல்போன் உரையாடல்கள், இறுதியில் குடும்பத்தாரைப் பகைத்துக் கொண்டு வீட்டை விட்டு அந்நியர்களுடன் ஓடிவிடும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது ஒரு புறமிருக்க,பொழுது போக்கு ஊடகம் எனப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சேனல்கள் சமூகத்தை இன்னொரு வகையில் சீர்கேடு எனும் படு நாசக் குழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு வெளிவரும் திரைப்படங்களும்,தொலைக்காட்சி நாடகத் தொடர்கள், நிகழ்ச்சிகள் அணைத்தும் தங்கு தடையற்ற முறை தவறிய ஆண்-பெண் கலப்புறவுக்கு சமூகத்தை தயார் படுத்தும் வகையில் தான் தயாரிக்கப் படுகின்றன.

நடன அரங்குகள் ( DANCE CLUB )போன்றவை மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டும் தான் இருந்தன என்பதாக சில காலங்களுக்கு முன் வரை கேள்வி பட்டிருக்கிறோம்.ஆனால் இத்தகைய நடன அரங்குகளை நமது தொலைக்காட்சி சேனல்கள் தமது நிகழ்ச்சிகளின் வாயிலாக ஒவ்வொரு வீடுகளிலும் அரங்கேற்றி வருவதை இன்று நம்மால் காண முடிகிறது.
நடன அரங்குகள் போன்ற ஆபாச கேளிக்கை மையங்கள் குறித்து கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத பாமர மக்களுக்கு நடன போட்டி என்ற பெயரில் சினிமாப் பாடல்களுக்கு அரைகுறை ஆடையுடன் பெண்னை ஆணுடன் ஆபாசமாக ஆடவிட்டு புது வித ஆபாச இன்பத்தை பார்வையாளர்களுக்கு நமது தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன.

சுருங்கச் சொன்னால் ஆபாசமான விஷயங்களை காண்பது கண்கள் செய்யும் விபச்சாரம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் எச்சரித்துள்ள அந்த பாவத்தை செய்பவர்களாக சமூகத்தை இந்த தொலைக்காட்சிகள் மாற்றியிருக்கின்றன.
குடும்ப உறவுகளை குலைக்கும் மெகா சீரியல்களும்,அவ்வப்போது ஒளிபரப்ப படும் விளம்பரங்களும் காண்போர் மனங்களில் ஓர் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன..?

இத்தகைய இழிவுகளிலிருந்து சமூகத்தை சீர் படுத்த இஸ்லாம் சில வழிகளை கற்றுத் தருகிறது.இறைவன் தன்னிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுமாறு குர்ஆனில் நமக்கு கற்றுத் தருகிறான்..

'(நபியே நீர் கூறும்) இருள் படரும் போது ஏற்படும் தீங்குகளை விட்டும் (இறைவா)உன்னிடம் (நான்)காவல் தேடுகிறேன். (சூரா அல் பலக்- 3)

இதனை விவரித்து நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்...
சூரியன் மறையும் நேரம் வந்து விட்டால் உங்களின் சிறுவர்களை வீட்டிலிருந்து வெளியில் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நேரத்தில் ஷைத்தான் வீதியில் சுற்றுகிறான். (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).ஆதாரம்:புகாரி, முஸ்லிம் )

எவ்வளவு உண்மை..!ஷைத்தான் வருவதாக நபிகளார் கூறும் அந்த இருள் சூழ்ந்த வேளையில் தான் பாவமான அருவருக்கத்தக்க,தீய சிந்தனையைத் தூண்டக் கூடிய நாடகங்களும் நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகின்றன.

இந்த நேரங்களில் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் ஷைத்தானிய சேனல்களிடமிருந்து தற்காத்து கொள்ளாமல் போனதால் அதன் கதாபாத்திரங்களில் லயித்து ஒழுக்கம்,சமுதாயக் கட்டுப்பாடு ஆகியவை காற்றில் பறக்க விடப்பட்டு முறையற்ற ஆண்-பெண் கலப்புறவு தங்கு தடையின்றி உள்ளூர் முதல் உலக அளவில் அரங்கேறி வருகின்றது.
தொலை தொடர்புக்கான எளிய சாதனமாக பயன்பட்ட செல்போன்கள் ,இத்தகைய கள்ளத் தனங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி தரும் தரகு வேலை செய்பவையாக உருமாறியிருக்கின்றன.இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கின்றன என்பதை தற்போது நாம் கண்டு வருகின்றோம்.

ஆகவே நமது பெண்களின் வெளி உலகத் தொடர்புகள் எவ்வாறு இருக்க வேண்டு;ம் என்பதை குறித்தும், செல்போன்,தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படங்கள், இணையதளம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை முறைப்படி கையாள்வதற்குரிய கீழ்கானும் சில ஆலோசனைகள் நமது குடும்பங்களில் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

1.பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்,வேலையில்லா இளைஞர்கள்,இளம் பெண்கள் (திருமணமான-திருமணமாகாத)ஆகிய தரப்பினரை செல்போன் பயன்படுத்துவதை குடும்ப பெரியவர்கள் கட்டாயம் அனுமதிக்க கூடாது.மேற்படி தரப்பினர் அவசியம் கருதி வெளியே செல்லும் போது அவசரமாக குடும்பத்தாரை தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால்..அருகிலுள்ள பொது தொலைபேசி சேவை (Pஊழு) பூத்களை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

2.குடும்ப பெரியவர்கள்,தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள்,பாடல்கள்,நடனப் போட்டிகள் போன்ற பாலுணர்வைத் தூண்டுபவற்றையும்,குடும்ப உறவுகளை சீர்குலைக்கும் நாடக நெடுந்தொடர்களையும் தமது குடும்பத்தினர் பார்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

தொலைக்காட்சி சேனல்களை முற்றிலுமாக பார்க்கவே கூடாது என்பது இதன் பொருளல்ல அறிவியல் கண்டுபிடிப்புகள்,மருத்துவ உண்மைகள்,வன விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள்,சிறார்களுக்கு தெம்பையும் துணிவையும் ஊட்டும் (ADVENTURE- இடர்பாடான சூழ்நிலைகளில் பயணம் செய்யும்) நிகழ்ச்சிகள்,ஏழை நாடுகள் மற்றும் போரினால் சீரழிந்து கிடக்கும் நாடுகளில் மக்கள் படும் விவரிக்க இயலாத ஏழ்மையையும் துன்பங்களையும் சித்தரிக்கும் (DOCUMENTARY) ஆவணப் படங்களை போன்றவற்றை பார்க்கவும் அதிலிருந்து படிப்பினை பெறவும் இளைஞர்களையும் சிறுவர்களையும் ஊக்கப் படுத்த வேண்டும்.இதற்கு அவர்கள் தயாராகாத பட்சத்தில் தொலைக்காட்சியை மூடிவிடுவது சிறந்ததாகும்.

3.வீட்டில் இணையதள வசதி உள்ளவர்கள் அதனைப் பயன்படுத்துவோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.அவர்கள் எந்த மாதிரியான தளங்களில் தமது நேரங்களை செலவிடுகின்றனர்..?அவை எப்படி பட்டது என்பதை கண்டறிந்து தீமையை விதைக்கும் தளமாக இருந்தால் அவற்றை காண தடை விதிக்க வேண்டும்.மேலும் சாட்டிங் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் யாருடன் சாட்டிங் செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

4.அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதாக இருந்தாலும் பெண்களை தனித்து பயனம் செய்ய அனுமதிக்கக் கூடாது.அவ்வாறு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் திருமணம் செய்ய விலக்கப்பட்ட (மஹ்ரமான)வர்களோடு மட்டும் பயனிக்க செய்ய வேண்டும்.(கணவனோ அல்லது தந்தை,உடன்பிறந்த சகோதரர்களை துணைக்கு அழைத்து செல்வது சிறந்ததாகும்)சிறுவர்களை மட்டும் துணைக்கு அழைத்து செல்லும் பெண்களை தற்போது பேருந்துகளில் அதிகமாக காண முடிகிறது.அவ்வாறு சிறுவர்களோடு பெண்கள் பயணிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.சிறுவர்கள் துணையோடு பயணித்தல் என்பது தணித்து பயணிப்பதற்கு சமமானதாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.. தனியாக பயணிப்பதில் ஏற்படும் அபாயம் குறித்து நான் அறிந்திருக்கும் அளவுக்கு மக்கள் அறிந்திருந்தால் ஒருவருமே இரவு தனியாக பயணம் செய்யமாட்டார்கள்.(அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி),ஆதாரம்:புகாரி)

பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் அணிந்து செல்வதையும்,மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேக்கப் செய்து கொள்வதையும் வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதையும் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.
மேற்கூறப்பட்ட ஆலோசனைகளை குடும்ப பெரியோர்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து அவற்றை தமது குடும்பத்தில் செயல்படுத்த முன்வர வேண்டும்.

இஸ்லாம் தகவல் தொடர்பு சாதனங்களக்கு எதிரானதா..?

இஸ்லாம் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு எதிரான மார்க்கமல்ல..சாதாரணமாக கத்தியைக் கொண்டு காய்கறி,பழங்கள் போன்றவற்றையும் நறுக்கலாம்.அதே கத்தியைக் கொண்டு ஆளையும் கொல்ல முடியம்.யாரும் கத்தியைக் கொண்டு கொலை பாதகத்தை செய்ய விரும்பமாட்டாhகள்.இதைப் போலவே.. தகவல் தொடர்பு சாதனங்களை ஆக்கப்பூர்வமான வழியில் இஸ்லாம் அனுமதித்துள்ள வகையில் ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுருங்கச் சொன்னால் அவற்றை இல்லாமல் ஆக்குவதை விட.. இஸ்லாமிய மயமாக்கி விடுவதே சாலச் சிறந்ததாகும்.

இறைவன் கூறுகிறான்..
உங்கள் கரங்களை நாசத்தின் பால் கொண்டு செல்லாதீர் (குர்ஆன்:2-195) மேலும் கூறுகிறான்..
விசுவாசிகளே.. நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.. அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். (குர்ஆன்:66-6)

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களை சற்று ஆராய்ந்து மனதில் கொண்டு நம்மை நாமே நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முயல்வோமாக.
இறைவன் நம் அணைவருக்கும் அருள் புரிவானாக....!

நன்றி: மக்கள் உரிமை வார இதழ்.
(மக்கள் உரிமை டிசம்பர் 19-25,2008 இதழில் வெளியான கட்டுரை)
(தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் ஈமானை மறந்து காதல் என்ற பெயரில் மாற்றார்களோடு கள்ள உறவை மேற்கொண்டு சமுதாயத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் ஐக்கிய அரபு அமீரகம் அல்-அய்ன் மண்டல தமுமுக சார்பில் சமுதாயத்தை விழிப்படைய செய்யவும்,அதற்கான ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் மேற்கண்ட கட்டுரை மக்கள் உரிமையில் வெளியிடப்பட்டது)

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தலைவரே............

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாய்... ஒலித்துக் கொண்டிருக்கும் சமுதாயப்பெரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்றைக்கு அசைக்க முடியாத ஆல விருட்சமாக கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதென்றால்... இதன் பின்னணியில் வேர்களாகவும் விழுதுகளாகவும் இருந்து தம்மையே உரமாக்கி அல்லாஹ்வின் துணை கொண்டு இந்த பேரியக்கத்தை தூக்கி நிறுத்திய பெருமைக்குரியோர் பலர் இருக்கின்றனர்.
அத்தகையவர்களில் ஒருவர் தான் தலைவர் எஸ்.எம்.ஜின்னாஅவர்கள். 
இந்திய துணைக்கண்டத்தில் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இந்தப் பேரியக்கம் நிர்மாணிக்கப்பட்ட வேளையில் கடலூர் மாவட்டத்தில் நிர்வாகக் குழுவில் ஒருவராக இடம்பெற்றார்.சிறிது காலம் கழித்து கடலூர் மாவட்ட கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று மாவட்டம் முழுவதிலும் கிளைகளை கட்டமைக்க சூறாவளியாய் களப் பணியாற்றினார். இந்த நாள்களில் அவர் சந்தித்த துன்பங்களும் தொல்லைகளும் கொஞ்ச நெஞ்சமல்ல...

இவரது களப்பணியை  கண்டு பொறுக்காத காவல் துறை இவர்மீது பல்வேறு பொய்வழக்குகளை புனைந்து இவரை முடக்க சதி செய்தது.இவரது ஊர் ஜமாஅத் கூட இவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இவரை 
புறக்கணித்தது.

இந்த துயரங்கள்ஒருபுறமிருக்க 2004 ஆம் ஆண்டு இந்த பேரியக்கத்தில் 
இருந்து வெளியேறி சென்று வேறொரு இயக்கத்தை உருவாக்கியவர்கள், 
ஜின்னா  தம்மோடு வருவார் என்று  எதிர்பார்த்தனர்.ஆனால் தலைவர் ஜின்னா அவர்களோ.. அவர்களது எதிர்பார்ப்பை  தவிடுபொடியாக்கி
விட்டு தாம் பாடுபட்டு உருவாக்கிய இந்த பெரியக்கத்திலேயே இன்னும் வீரியமாக களப்பணியை தொடர்ந்தார்.

இதனால் சினங்கொண்ட அந்த அமைப்பினர்,தங்கள் தமுமுகவிலிருந்து 
தூக்கி சென்ற  பத்திரிகையில் இவரைப்பற்றி எழுதிய அவதூறுகள் கொஞ்ச நெஞ்சமல்ல,இது போன்ற எத்தனையோ  தடைக்கற்கள் அனைத்தையும்
படிக் கற்களாக்கி சமுதாயப் பேரமைப்பை வீரியத்தோடு வழிநடத்தினார்.

இதனால் கழகம் எனும் எல்லையை தாண்டி சமுதாய மக்களிடத்தில்"ஒரு
மக்கள் தலைவனாக"உருவெடுத்தார். இவரை புறக்கணித்த ஊர் ஜமாஅத்தார்களும் இவரை அரவணைத்துக் கொண்டனர்.
 ( கடந்த ஜூலை 14 ஆம் தேதி லால்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.. இதுவே இவர் பங்கேற்ற கழகத்தின் கடைசி நிகழ்ச்சியாகும்.)
பின்னர் மாநில துணைச்செயலாளராக கழகத்தில் பணி உயர்வு அளிக்கப்பட்டு கடலூர் மாவட்டத்துக்கு வெளியேயும் சென்று கழகப் பணியாற்றினார்.இதன் மூலம் பல்வேறு தரப்பினரின் அன்பையும் பெற்றார்.குறிப்பாக புதுச்சேரியில் களமாடி வரும் மனித உரிமை போராளி கோ.சுகுமாரன் அவர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். அடிப்படையில் இவர்  ஒரு விவசாயி .., ஆதலால் விவசாய சங்கங்களுடன்   நல்லுறவை பேணி வந்தார்.

இன்றைக்கு கடலூர் மாவட்டத்தில் தமுமுக வடக்கு தெற்கு என்று இரண்டாக செயல்படும் அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது.இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது அல்லாஹ்வின் கிருபையால் தலைவர் ஜின்னா அவர்களின் உழைப்புதான்.

இன்றைக்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றும் சகோதரர் நெய்வேலி அபூபக்கர் சித்திக்,வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் வி.எம்.ஷேக் தாவூத்,கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக வின் இன்றைய தலைவர் மானியம் ஆடூர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் போன்ற கழகத்தின் தளபதிகள் அனைவரும் தலைவர் ஜின்னாவின் பாசறையில் பயின்ற போராளிகளாவர்.

வயது வித்தியாசம் பாராமல் அணைவரிடமும் நல்ல மரியாதையோடு நடந்து கொள்வார்.இரவு 2 மணிக்கு போன் செய்தால் கூட கோபப்படாமல் பேசுவார்.
2006 ஆம் ஆண்டு நான் மலேசியாவில் இருந்த போது அங்கே இந்திய முஸ்லிம் சமூகத்தின் அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.கோலாலம்பூரில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்து கொண்டு,நான் வசிக்கும் ஈப்போ நகருக்கு அன்றிரவு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அப்பொழுது இந்தியாவில் நேரம் இரவு சுமார் 1 மணி இருக்கும்.அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் நான் தலைவர் ஜின்னா அவர்களுக்கு போன்  செய்து "கோலாலம்பூரில்  தலைவரை சந்தித்த" செய்தியை அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன்.அவரும் ஆர்வமாக என்னிடம் அந்த சமயத்திலும் கழக செயல்பாடுகள் பற்றி சளைக்காமல் கலந்துரையாடினார்.

பின்னர் 1 வருடம் கழித்து நான் தாயகம் திரும்பிய சமயத்தில் சிதம்பரம் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கழகத்தின் அப்போதைய பொதுச்செயலாளரும்,அன்றைய தமிழக வக்பு வாரியத் தலைவரும்,மூத்த தலைவருமான செ.ஹைதர் அலி அவர்களை விருந்தினர் மாளிகையில் சந்தித்து சில நிமிடங்கள் நான் பேசிக் கொண்டிருந்த போது  அங்கே வந்த தலைவர் ஜின்னா அவர்கள் என்னை பற்றி ஹைதர் அலி  அவர்களிடம்.. "இரவு 1 மணி 2 மணி ஆனாலும் என்னிடம் தொலைபேசியில் பேசக்கூடிய சகோதரர் இவர்" என்பதாக என்னைப் பற்றி சிலாகித்துக் கூறினார்.  
2007 ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றைக்கும் என்  கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கிறது.அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் கொள்ளுமேட்டில் தமுமுக சார்பாக "தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் தனி  இட ஒதுக்கீடு கூறி  ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு அன்றைய கழக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஜே.எஸ்.ரிபாயி அவர்களும் அன்றைய மாநில செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும் தேதி கொடுத்திருந்தார்கள்.

கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் கொள்ளுமேடு கிளை தமுமுக  சகோதரர்கள் இதற்காக மும்முரமாக களப்பணி ஆற்றிக் கொண்டிருந்தனர்.அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதிலுமுள்ள கிளைகளுக்கு நேரில் சென்று அழைப்பு கொடுப்பது என்று முடிவு செய்து அதன் படி மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கினோம்.

அதில் இன்றைய கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக செயலாளரும்,அப்போதைய கொள்ளுமேடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவருமான சகோதரர் என்.அமானுல்லாஹ்,அன்றைக்கு கடலூர் மாவட்ட தமுமுகவின் உலமாக்கள் அணி செயலாளராக இருந்த நான்,
கொள்ளுமேடு கிளை தமுமுக செயலாளர் வஜ்ஹுல்லாஹ்  ஆகியோர் காரில் பயணத்தை தொடக்கி நேராக தலைவர் ஜின்னா அவர்களின் வீட்டுக்கு சென்று அவரையும் எங்களின் சுற்றுப்பயனத்தொடு இணைத்து கொண்டு கடலூர் மாவட்டம் முழுவதும்   ஒவ்வொரு கிளைக்கும் சென்று பொதுக் கூட்டத்துக்காக அழைப்பு கொடுத்தோம்.
எல்லா ஊர்களையும் முடித்து விட்டு இறுதியாக லால்பேட்டையை நோக்கி நாங்கள் சென்றோம்.லால்பேட்டையை நெருங்கும் முன்பே தலைவர் ஜின்னா அவர்கள் அப்போதைய மாவட்ட துணைத் தலைவர் மர்ஹூம் முனவ்வர் ஹுசைன் அவர்களை தொடர்பு கொண்டு "நவ்வரு... நாங்க இப்போ லால்பெட்டைக்கு வந்து கொண்டிருக்கோம்.. நீ நேரா கைக்காட்டிக்கு வந்துடு"என்று என்பதாக அவரை வர சொல்லி விட்டார்.
அவரும் எங்களின் வருகைக்காக கைக்காட்ட்யில்  காத்துக் கொண்டிருந்த வேளையில்.... எங்களின் கார் கைக்காட்டியை நெருங்கும் பொது... எங்களோடு காரில் இருந்த கொள்ளுமேடு கிளை செயலாளர் வஜ்ஹுல்லாஹ் தலைவரிடம்... "தலைவரே... அங்கே  பாருங்க... நம்ம பட்டாம்பாக்கம் ரஜாக் நிக்கிறா மாதிரி தெரியிது"என்றார். 

(இந்த பட்டாம்பாக்கம் ரசாக் அவர்கள் தமுமுக 2004 ஆம் ஆண்டு பிரிவினை ஏற்படும் வரைக்கும்  தமுமுகவின் மாவட்ட தொண்டரணி செயலாளராக இருந்தவர்.பின்னர் ததஜவுக்கு போய் அங்கே மாவட்ட செயலாளராக இருந்து,பின்னர் மாநில நிர்வாகியாக இருந்து கொண்டிருந்த சமயம்.)

உடனே தலைவர் வஜ்ஹுல்லாஹ்விடமும்,என்னிடமும் "நீங்க ரெண்டு பெரும் ரஜாக்'க்கு கிட்ட பேசிட்டு இருங்க... அந்த கேப்புல நான் வந்து அங்கே நுழைஞ்சிடுறேன்"என்றார்.நாங்கள் "என்ன....? என்று அவரிடம் கேட்ட பொது.. "தமுமுகவிலிருந்து  ரஜாக் வெளியில் போனதிலேர்ந்து அவரை நான் சந்திக்கவும்  இல்லை... போன்ல பேசலாம்ன்னு அவர் மொபைல்க்கு போன் செஞ்சா அப்பவும் அவர்கிட்ட பேச முடியிறது இல்ல...இன்னிக்கி நல்ல சந்தர்பம்.. ரஜாக்'கை எப்படியாவது சந்திச்சிரனும். என்றார்.
உடனே நானும் வஜ்ஹுல்லாஹ்வும் காரிலிருந்து இறங்கி... ரஜாக்'கை நோக்கி  சென்று சலாம் சொல்லி கை கொடுத்து தலைவரின் ப்ளான் படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்த சமயத்தில் தலைவர் அங்கே  நுழைந்து ரஜாக் அவர்களின் கரங்களை பிடித்து கொண்டு.."ராஜாக்கு... எப்படி இருக்கே..? என்று அவரிடம் அக்கறையோடு நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
( இங்கே இன்னொரு முக்கியமான விசயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.மலேசியாவுக்கு போயிருந்த  பிஜே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு,அவ்வாறு அவர் வெளியேற்றப்பட்டதற்கு
 தமுமுகவும்,தமிமுன் அன்சாரியும் தான் காரணம் என்று வழக்கம் போல அண்ணன் பிஜே தமுமுகவை "காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்ததால்,
அப்பொழுது  ததஜவினர் "ரொம்பவும் தமுமுகவினர் மீது கொலைவெறியில் இருந்தனர்.இந்த சமயத்தில் தான் ஜின்னா - ரசாக்
இடையில் சந்திப்பு நடைபெறுகிறது.)

தமக்கு துரோகம் இழைத்தவர்களோடும் கூட நல்லுறவை பேண வேண்டும் என்று விரும்பிய அந்த நல்ல இதயம் இன்று நம்மை விட்டு அல்லாஹ்வின் பால் சென்று விட்டது என்ற தகவல் என் காதுகளில் எட்டியபோது எனது இதயம் சுக்கு  நூறாகிப் போனது.

கடந்த ஆண்டு சிதம்பரம் நகருக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் வருகை தந்த போது,அன்றைய தினத்தில் தான்  தலைவரை நான் கடைசியாக நேரில் சந்தித்தேன்.கடந்த ரமளானில் திடீரென நான் அமீரகத்துக்கு புறப்பட வேண்டிய கட்டாய சூழல் உருவான போது ,தலைவரை நேரில் சென்று சந்தித்து என்னால் விடைபெற முடியவில்லை.. விமான நிலையத்துக்கு காரில் பயணித்துக் கொண்டே.. தலைவரிடம் பயணம் சொன்னேன்.அப்பொழுது கூட அவர் என்னிடம்... "என்ன ரிபாயி... உன்கிட்ட நேரில் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன்... முடியாமல் போயிடுச்சே..."என்று வருத்தப் பட்டார்.தொலைபேசியிலேயே நீண்ட 
நேரம் இயக்க-சமுதாய விசயங்களை என்னிடம் அப்பொழுது பேசினார். 

கடந்த வருடம் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தை அவர் செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரத்தில் தலைமையேற்று நடத்தினார்.அன்றைய தினத்தில் விடுமுறையில் தாயகம் சென்றிருந்த வேளையில்,காஞ்சி மாவட்டத்தில்  விபத்து ஒன்றில் சிக்கி பலியான அமீரகத்தில் (தமுமுக நிர்வாகியின் நிறுவனத்தில்) பணியாற்றிய ஒரு மாற்று மத பொறியாளர் சம்பந்தமாக அவரிடம் பேசினேன்.இதுவே அவரிடம் நான் கடைசியாக பேசியது.

தலைவரே...... என்று உம்மை நான் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம்... "சொல்லுங்க ரிபாய்"..... என்று சொல்வீரே.... இனி உன் குரலை கேட்க முடியாமல் போயிடுச்சே.......
இன்ஷா அல்லாஹ் உம்மை நான் மறுமையில் சந்திக்கிறேன்...

அல்லாஹ் உமது பாவங்களை மன்னித்து உமது சேவைகளை அங்கீகரித்து... ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தில் உம்மை சேர்ப்பானாக என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...

கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி 
அல் அய்ன்.