ஞாயிறு, 2 மே, 2010

துபாயில் மாபெரும் இரத்ததான முகாம்




துபாயில் மாபெரும் இரத்ததான முகாம்தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்தும் சேவைகளை செய்யும் தமுமுக வின்கிளையான முஸ்லிம் முன்னேற்ற கழகம் துபாய் மண்டலம் சார்பில் 30 -04 -2010அன்று 5 வது மாபெரும் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யபட்டது .


துபாய்அல்வாசல் மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 50 நபர்களுக்குஅனுமதி பெறப்பட்டு இறுதியில் 65 நபர்கள் இரத்ததானம்செய்தனர்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமயசகோதரர்களும் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாகஅமைத்தது .


மண்டலதலைவர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை ஏற்க்கசெயலாளர் அதிரை SMA சாகுல் ஹமீது அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சி இனிதேதொடங்கியது .நிகழ்ச்சியை சகோதரர் அப்துல் ரவூப் ஒருங்கிணைத்தார் .வாகனஏற்பாடுகளை சகோதரர் மேலப்பாளையம் மதினா ,மேலப்பாளையம் கரீம்.வி.களத்தூர் உமர் பாரூக் அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் டேய்ரா .அல்கூஸ் ,சோனாப்பூர் கிளை சகோதரர்களும்கலந்து கொண்டனர் அல்ஹம்துல்லிலாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே !)