புதன், 25 ஆகஸ்ட், 2010

இளைஞரை டயர் டியுப் கொண்டு அடித்து சித்திரவதை..! காவல்துறை அராஜகம்...

டெல்லி. தனது சம்பளத்தை கேட்ட தொழிலாளியை அவரது முதலாளியின் ஏவலாளியாக மாறி அத்தொழிலாளியை அடித்து சித்திரவதை செய்த
காவல்துறைiயினரின் மிருகத் தனமான சம்பவமொன்று நமது தேசத்தில் இன்று பதிவாகியிருக்கிறது.

இச்சம்பவம் நடந்தது நமது தேசத்தின் தலைநகரமான டெல்லி மாநகரத்தில்...! தெற்கு டெல்லியில் கோவிந்தபுரி என்ற பகுதியில் கௌரிசங்கர்
என்பவருக்கு சொந்தமான பட்டன் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார் சுபாஷ் என்ற தொழிலாளி.சில மாதங்களுக்கு முன் அந்த
வேலையை விட்டு ராஜினாமா செய்து சென்ற அவர் கடந்த சனிக்கிழமையன்று தனது பழைய முதலாளியான கௌரிசங்கரிடம் வந்து தனது சேர
வேண்டிய சம்பள பாக்கியான ரூ 40 ஆயிரத்தை தருமாறு கேட்டிருக்கிறார்.

பணத்தை தர மனமில்லாத கௌரிசங்கர் சுபாஷை மிரட்டும் தொனியில் பேசியதுடன் தனக்கு பழக்கமான போலிஸ்காரர்களிடம் நான் இவனது கடையில்
திருட்டு பொருட்களைப் பார்த்தேன் என ஒரு பொய்யை அவிழ்த்து விட போலிஸார் 23 வயதான சுபாஷை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று
எந்த வித கேள்வியையும் கேட்காமல் தங்களுக்கே உரித்தான பாணியில் அவரை கதறக்கதற டயர் டியுப் கொண்டும் லத்தியைக் கொண்டும் அடித்திருக்கின்றனர் ;.

சட்ட ரீதியிலான உதவிகளைப் பெறுவதற்கு தடை செய்யும் வகையில் அலரது எசல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு வெளித்தொடர்புகளைத் துண்டித்துள்ளனர்.
விஷயத்தை கேள்விப்பட்ட இவரது உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்கட்டார்.

வல்லரசு நாடு என்ற இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் தலை நகரில் இப்படி ஒரு சம்பவம்
நடைபெற்றிருப்பது கண்டணத்திற்குரியது.

நன்றி: என்டிடிவி இணையதளம்.