வியாழன், 3 ஜூன், 2010

திருமணம் செய்ய மாட்டோம்'

புகை பிடிப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானவர்களையோ, திருமணம் செய்ய மாட்டோம்' என்று மாணவியரும், "தங்களது மகள்களுக்கு, போதைக்கு அடிமையானவர்களை, திருமணம் செய்து வைக்க மாட்டோம்' என பெற்றோரும் உறுதி எடுத்து கொண்டனர். இதே போல் தமிழக மாணவிகளும், பெற்றோர்களும்உறுதி எடுக்க வேண்டும்.

கேரள மாநிலம் கண்ணூரில், கண்ணூர் மலபார் புற்றுநோய் தடுப்பு மையத்தில், புகையிலை எதிர்ப்பு தினவிழா நடந்தது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த, திரளான மாணவியரும், அவர்களது பெற்றோரும், கலந்து கொண்டனர்.புகை பிடிப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானர்களையோ, திருமணம் செய்து கொள்ள மாட்டோமென மாணவியரும், போதைக்கு அடிமையானவர்களுக்கு, தங்கள் மகள்களை, திருமணம் செய்து கொடுக்க மாட்டோமென, பெற்றோரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.கேரள மாநிலத்தில் தான் சிகரெட், பீடி போன்றவை அதிகளவு விற்பனையாகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் திரளான மாணவிகள் புகைப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானவர்களையோ, திருமணம் செய்ய மாட்டோம் என்று உறுதி எடுத்து கொண்டது போல் தமிழகத்தை சேர்ந்த மாணவிகளும் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும்
நன்றி: துபாய் மைதீன்