ஞாயிறு, 13 ஜூன், 2010

தொடரும் அல்-அய்ன் முமுக வின் கடனுதவித் திட்டம்....!

தமிழகத்திற்கு வெளியே வளைகுடாப் போன்ற நாடுகளிலும் தடம் பதித்த தமுமுக, அந்த நாடுகளிலும் தமது சேவைக் கரங்களை அகல விரித்து வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான முறையில் செயல்பட்டு சமூகத்தில் பல்வேறு தரப்பினரிடதிலும் பெருத்த ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்ற அல்-அய்ன் மண்டல முமுக வின் வட்டியில்லாக் கடனுதவித் திட்டம், தற்போது ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

இத் திட்டம், துப்புரவு நிறுவனங்களிலும், கட்டுமான நிறுவனங்களிலும், உணவு உற்பத்தி நிறுவனம் போன்றவற்றில் குறைந்த சம்பளத்திற்கு வேலை
செய்பவர்கள் மத்தியில் இத் திட்டம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
குழந்தைகளின் கல்வி,பெண் திருமணம், போன்ற அத்தியாவசிய செலவுகளுக்காக கடன் பெற்றவர்கள் இத் திட்டத்தை நெகிழ்ச்சியுடன் பாராட்டுகின்றனர். இத் திட்டத்தில் தனது வருமானத்தில் ஒரு சிறு பகுதியை சிறு சேமிப்பாக சேமிதவர்கள், ஆண்டு முடிவில் அதனை ஒரு பெரிய தொகையாக திரும்பப் பெரும் போது, மகிழ்ச்சிப் பெருக்கில் நன்றி தெரிவிக்கின்றதை நம்மால் நேரில்காண முடிந்தது.


கடந்த ஆண்டைப் போலவே இத்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக
மீண்டும் கீழை முஹம்மது இபுனு அவர்களே முமுக நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.அலுவல் குழு உறுப்பினர்களாக தோப்புத்துறை
ஷேக் தாவுத், அப்துல் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்து இத் திட்டத்தை விரிவாக நடத்த வேண்டுமென சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-கொள்ளுமேடு பை.மு.ரிபாயி,
அல் அய்னிலிருந்து.
நன்றி: மக்கள் உரிமை