ஞாயிறு, 12 ஜூன், 2011

இராமநாதபுரம் எம்.எல்.ஏ. பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள்

முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தலைமையிலான தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே மீனவர்களுடைய நலனைப் பேணுவதிலே அக்கரை கொண்டு பல்வேறு அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. அந்த அப்படையில் 1974ல் தமிழகத்தில் திமுக அரசும், மத்தியிலே காங்கிரஸ் அரசும் ஆட்சியிலே இருந்தபோது காலங்காலமாக இராமநாபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான இருந்து விடுதலைப் பெற்று பிறகு நமது நாட்டின் சொத்தாக மாறிய கச்சச் தீவை தாரை வார்த்துவிட்டார்கள். எனக்கு முன்னர் இங்கே உரையாற்றிய மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்டதைப்போல, கச்சத்தீவுவை தாரை வார்த்து நம்முடைய தமிழக மீனவர்களுக்கு குறிப்பாக இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக...


முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அன்றாடம் நம்முடைய மீனவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடிய ஒரு பிரச்சினை, கச்சத் தீவை தாரைவார்க்கும் பிரச்சினையாக அமைந்திருக்கின்றது இதில் மிக முக்கியமாக ஒரு விஷயத்தை மட்டும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். கச்சத் தீவு தொடர்பான சட்டத்திலே கச்சத் தீவுக்கு செல்வதற்கும், அந்த பகுதியிலே மீன் பிடிப்பதற்கும் ஏன் அந்தத் தீவிலே மீன் வலைகளை காய வைப்பதற்கும்கூட தாரை வார்த்தச் சட்டத்திலே உரிமை இருந்தாலும் கூட, இலங்கையிலே தமிழ் மக்களுக்கு எதிரான போர் நடைபெற்றிருந்த காலத்திலே 1983ல் தமிழ்நாடு என்ற ஒரு சட்டத்தின் வாயிலாக நம்முடைய மாற்றுப்பட்டு கச்சத் தீவுக்கு நாம் செல்லக்கூடிய உரிமை தடுக்கப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது. இப்போது போர் முடிவுற்ற நிலையிலே இந்தச் சட்டத்தையும் திருத்தி நம்முடைய மீனவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்லி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தை மனதார ஆதரித்து விடைபெறுகிறேன். நன்றி (மேசையைத் தட்டும் ஒலி)

முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகின்றேன். ஊழல் மலிந்த, அராஜகம் நிறைந்த, சுயநல ஆட்சியை வீழ்த்த அனைத்துத் தரப்பினரையும், ஒருங்கிணைத்து மக்கள் விரும்பிய கூட்டணியை அமைத்து மக்களின் மௌனப் புரட்சிக்கு வித்திட்டு, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலே வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று தற்போது 3&வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் எங்கள் அன்பு சகோதரிக்கும் (மேசை தட்டும் ஒலி) அவரது தலைமையின் கீழ் செயல்படும் இலட்சோபலட்ச அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழகத்தில், ஜனநாயத்தைக் காப்பாற்றும் இந்த அறப்பணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம் பெற்ற எங்கள¢கூட்டணிக் கட்சிகளான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவற்றின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் நலனுக்கெதிரான கூட்டணியை தோல்வியுறச் செய்யவேண்டுமென்று வீறுகொண்டு எழுந்து செயல்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சகோதரர் சீமானுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மிரட்டல்கள், இழிசொற்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு நடுநிலையுடன் செயல்பட்டு தமிழகத்தின் ஜனநாயகம், பணநாயகமாக மாறாமல் தடுத்து நிறுத்தி அதைத் தடுத்து நிறுத்துவதையே ஒரு சவாலாகவே கருதி மனஉறுதியுடன் செயல்பட்ட தலைமை தேர்தல் ஆணையாளர் குரேஷி அவர்களுக்கும், திரு.பிரவின்குமார் தலைமையிலான தமிழக தேர்தல் ஆணையத்தின் அத்துணை அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து வகையான கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி சுயநலனை விட நாட்டு நலனே மேல் என்பதை நெஞ்சில் சுமந்து தங்கள் கையில் உள்ள எனும் வாக்குச்சீட்டு களாக மாற்றி சமீபத்தில் எகிப்தில் நடைபெற்றுதுபோல ஒரு அமைதிப் புரட்சியை தமிழகத்திலும் ஏற்படுத்தி நல்லாட்சி ஏற்ற்ட வழிவகை செய்த தமிழக வாக்காளப்பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

16 ஆண்டுகளுக்கு மேலாக தன்னலம் பாராமல் அளப்பரிய தியாகங்களுடன் மனிதநேய சேவைகளைச் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கண்மணிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற அயராது உழைத்த என் கட்சியின் சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நான் போட்டியிட்ட இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் உலகின் பல்வேறு பகுதிகளிலே வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. ஈழ மண்ணில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷே என் நண்பர் என்று தன்னைச் சொல்வதிலே பெருமை கொள்ளும் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக எனக்கு எதிராகக் களம் இறக்கப்பட்டார். அவர் மட்டும் அல்ல, காங்கிரஸ் கட்சியும் கூட ராஜபக்ஷேயின் நண்பராகத்தான் இருந்து வருகிறது. இதனால் தான் டெல்லியில் நடைபெற்ற ஊழல் மலிந்து போட்டிகளின் நிறைவு விழாவிற்கு ராஜபக்ஷேவிற்கு சிவப்புக் கம்பன வரவேற்பு அளித்தார்கள். அந்த சிவப்புக் கம்பளம் என் தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் அடையாளமாகத்தான் எனக்குக் காட்சியளித்தது.

காங்கிரஸ் கட்சியின் ராஜபக்ஷே ஆதரவை நிராகரித்து அவரது நண்பரான காங்கிரஸ் வேட்பாளருக்கு சரியான பாடம் கற்பித்து என்னைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற வைத்த இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வெற்றிக்காக அரும்பாடுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றி, நடந்து முடிந்த இந்த 14 வது சட்டப் பேரவைக்கான இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசிடம் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் துடிப்புடனும், கோபத்துடனும், விவேகத்துடனும் இந்த புதிய அரசின் ஆரம்பக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

அருமையான 6 மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்த ஆட்சி தொடங்கியுள்ளது. அனைவரையும் அரவணைக்கும் வகையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு ஆளுநர் உரையும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை நிறைவேற்றுவதற்கான வழிவகை ஆளுநர் உரையிலே இடம்பெற்றுள்ளது. அதை மனிதநேய மக்கள் மனமார வரவேற்கிறது.

கடந்த அரசு அவசரக் கோலத்தில் நடைமுறைப்படுத்திய சமச்சீர் கல்விக் கொள்கையை மேல் ஆய்வுக்காக இந்த அரசு நிறுத்தி வைத்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. சிறுபான்மை மக்களின் மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை அந்த மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்து 10 வது மற்றும் ப்ளஸ்2விலே தேர்வு எழுதும் வாய்ப்பை திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையிலே மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக பழுத்த கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரை புறந்தள்ளப்பட்டது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறை மேல் ஆய்வு செய்யப்படும்போது அரசியல் சாசன சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறுபான்மை மக்கள் தமிழுடன் சேர்த்து தாய் மொழியை கற்பதற்கும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதற்கும் வழிவகுக்கப்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரத்தில் சிறுபான்மை மக்களின் நலனின் அக்கறை கொண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது திருச்சி, வேலூர், பரமக்குடி என்று பல்வேறு ஊர்களிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்திலே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார். சிறுபான்மை முஸ்லிம்களின் இந்த உள்ளக்கிடக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முறையில் உள்ள சிக்கல்களினால் அதன் பலனை சில துறைகளில் குறிப்பாக உயர் மருத்துவ படிப்பு சேர்க்கை, பல்ககலைக்கழகங்களிலே பேராசிரியர் நியமனம் முதலியவற்றில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த குளறுபடிகள் நீக்கப்படுவதற்கும், நவிந்தோர் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அமலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டார்கள். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த திமுக அரசு 2009 லே தமிழ்நாடு திருமணங்கள் புதிவுச் சட்டம் என்ற பெயரில் கட்டாயமாக திருமணங்கள் அனைவரும் புதிவு செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது. காலம் காலமாக முஸ்லிம்களின் திருமணங்கள் எழுத்துபூர்வமாக அதனை நடத்தும் ஜமாத்துகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக அரசு இந்தத் திருமணங்களைப் பதிவு செய்ய கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்தில் கொண்டு வந்து விதிமுறைகள், முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு முரணாக இருந்தன, தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

சென்ற 2010, மார் 6ம் தேதி நாள் உள்பட அனைத்து முஸ்லிம்கள் அமைப்புகளின் பிரதிநிகள் சட்ட அமைச்சரைச் சந்தித்து, கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள ஆட்சேபணைகளை வெளிப்படுத்தினோம். ஆனால், அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை சென்ற திமுக அரசு நிராகரித்தது. தேர்தலிலே படுதோல்வி அடைந்தது.

அரசினால் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. மாறாக, இந்தப் பதிவிற்காக முந்தைய திமுக அரசு கொண்டுவந்த விதிமுறைகளைத்தான் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். ஜமாத்துகள், காஜிகள் பதிவு செய்யும் திருமணம் தொடர்பான பதிவுச் சான்றினை அப்படியே ஏற்றுக்கொண்டு வேறு எவ்வித குறிப்பாவணங்களும் இல்லாமல் பதிவு துறை பதிவு செய்து, சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கையாகும். அதாவது தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009 விதிமுறைகளிலே பிரிவு5, உட்பிரிவு4லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கை, இந்தக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்று, இதை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றித் தருவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்கள். இந்தக் கோரிக்கையை அவர்கள் விரைவில் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் குழு சார்பாக ஹஜ் செல்வதற்கு (குறுக்கீடு)

முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் : மிக்க நன்றி, அமைச்சர் அவர்களே, இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் குழு சார்பாக ஹஜ் செல்வதற்கு 10400 பேர் விண்ணப்பித்தார்கள், இவர்களில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 3400 பேர்களுக்கு மட்டுமே குலுக்கல்மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வாய்ப்பு இழந்த சுமார் 7000 பேரில் பாதி பேருக்காவது வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யவேண்டுமென்று கேட்க்கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது, குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலே பட்டா நிலங்களிலே சர்ச்சுகள், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு இருக்ககூடிய சிக்கலை இந்த அரசு, அதிமுக அரசு நிவர்த்தி செய்யும் என்று குறிப்பிட்டார்கள். அதையும் நி¬வேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ள இராமநாதபுரம் தொகுதி மீனவர்கள் நிறைந்த தொகுதி, மீனவர்களின் நலனின் இந்த அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக, தொடக்கமாக இந்த அரசு தேர்தலிலே வாக்குறுதி அளித்தபடி மீன்பிடி டைக் காலத்திற்கு வழங்கப்படும் உதவித் தொகையை மாதம் ஒன்றுக்கு ரூ.2000/& ஆக உயர்த்தியதை மணமார வரவேற்கிறேன்.

கச்சத்தீவு தொடர்பாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் மீனவர்களின் நலனின் இந்த அரசுக்குள்ள அக்கறைந வெளிப்படுத்துகிறது. இதே போல, பருவகாத்தால் நான்கு மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழலில் இருக்கும் மீனவக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4000 ரூபாயாக வழங்கப்படும் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

பாரம்பரிய மீனவர்கள் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி நோக்கோடு நடுக்கடலில் மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் ஏற்றுமதிக் கப்பல் பூங்கா அமைக்கப்படும் என்று அஇஅதிமுக&வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா இராமநாதபுரம் தொகுதியில் விரைவில் அமைய ஆவண செய்ய வேண்டுமெனப் பணிவண்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அஇஅதிமுக&வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மீன் பூங்காக்களில் குறைந்தது ஐந்து தொழில் வளர்ச்சயில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன். அடுத்து தொடர்ந்து நம்முடைய தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும். அந்த வகையிலேதான் அஇஅதிமுக&வினுடைய தேர்தல் அறிக்கையிலே மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதை ஏற்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சூழலில் தேர்தல் நேரத்திலே நான்கு மீனவர்கள் இ£ரமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள், விக்டஸ், அந்தோனிராஜ், ஜான்பால் மற்றும் மாரிமுத்து என்ற இந்த நான்கு மீனவர்களும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உலகக் கோப்பை கிரிப்கெட் போட்டி நடைபெற்ற அந்த தினத்திலே மீன் பிடிப்பதந்காக TN-10-WFB-626 என்ற படகிலே சென்றிருக்கின்றார்கள். கிரிக்கெட் போட்டியிலே இலங்கை தோல்வியடைந்தது. இலங்கை தோல்வி அடைந்ததற்குப் பழிவாங்ழுவதற்காக வேண்டி, நம்முடைய இந்த நான்கு மீனவர்களும் சித்திரவதை வெய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதிலே, மிகப்பெரிய கவலை மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், இந்த செய்தி, 2 ஆம் தேதியே அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், அவர்களுடைய சடலத்தையும் இலங்கை கடற்படையினர் தூக்கிச் சென்றுவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து இந்த செய்தியை அன்றை தமிழக அரசு மறைத்து இந்த நான்கு மீனவர்களும் காணாமல் போய்விட்டார்கள் என்று சொல்லி சில நாட்களாகத் தேடி, பிறகு இலங்கையிலுள்ள ஒரு பத்திரிகையிலே இரண்டு சடலங்கள் & விக்டஸினுடைய சடலமும், இன்னொருவருடைய சடலமும் ஒதுங்கியிருக்கின்றது என்று செய்திகளெல்லாம் வந்தபிறகு மீனவக் குழுக்கள் 6 பேர் கொண்ட குழு இலங்கைக்குச் செல்கின்றது.

முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் : அந்த குழுவும் கப்பலிலேயே சுடும் வெயிலிலே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதற்குப் பிறகு விக்டஸினுடைய உடல் யாழ்ப்பாணத்திலேயே கண்டெடுககப்படுகின்றது. அதிலே பல காயங்கள், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த மறு தினம், அந்தோனிராஜினுடைய உடல் தமிழகத்திலே தொண்டிக்கு அருகே கரை ஒதுங்குகிறது. தேர்தல் முடிந்த மறுநாள் 14 ஆம் தேதி ஜான் பாலினுடைய உடல் கரை ஒதுங்குகிறது. 16 ஆம் தேதி மாரிமுத்துவினுடைய உடல் தலை இல்லாமல் கரை ஒதுங்குகிறது. இதிலே மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மீனவர்கள் காணாமல் போனால் அவர்களுடைய உடல் கிடைத்தால் மட்டுதான் அரசாங்கம் அவர்களுடைய குடும்பத்திற்கு இழப்பீடு தரக்கூடியதொரு நிலையிலே, இந்த நான்கு மீனவர்களில் ஒருவருடைய உடல், விக்டஸினுடைய உடல் யாழ்ப்பாணத்திலே கண்டெடுக்கப்பட்ட பிறகு நான்கு குடும்பங்களுக்கும் தமிழக அரசு அன்றை தமிழக அரசு இழப்பீடு கொடுக்கின்றது. இதிலே நமக்குள்ள சந்தேகம் என்னவென்றால் தேர்தல் நேரத்திலே இந்த நான்கு மீனவர்களையும் கிங்களப் பேரினவாத இலங்கை அரசு கிரிக்கெட் உலகக் கோப்பைப்போட்டியிலே தோல்வியடைந்தற்காகச் சுட்டுக் கொன்றிருக்கிஙனறது. சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது. இந்த உண்மைய மறைத்திருக்கின்றார்கள். இதற்காக தமிழக அரசு முழமையான ஓர் விசாரணையை ஏற்படுத்தி இந்த நான்கு மீனவர்களினுடைய (குறுக்கீடு)

முனைவர் எம் ஹெச் ஜவாஹிருல்லா " இது வேறு அது வேறு இந்த 4 மீனவர்களுக்கும் அதிமுக சார்பாக ஒரு லட்சம் கொடுத்தார்கள் .ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையும் இந்த உண்மையை மறைத்தவர்கள் மீதான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் .அதே போல் கடந்த 30 ஆண்டுகளாக 500 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.அவாகளுடைய குடும்பத்தின் வாரிசுகளுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி இந்த 4 மீனவர்களும் சென்ற படகு என்ன ஆனது என்பதைப்பற்றிய விவரம் இது வரை தெரியவில்லை அந்த படகுக்காக வேண்டி தமிழக அரசு இழப்பீடு தரவேண்டும் . இந்த 4 குடும்பங்களினுடைய உறுப்பினர்களுக்கு அரசு வேலை தருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக்கொண்டு இறுதியாக சுருக்கமாக சில செய்திகளை மட்டும் சொல்லி கோரிக்கைகளை மட்டும் முன் வைத்து விடை பெறுகின்றேன் .

இராமநாதபுரம் மாவட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளாகிவிட்டது . ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற க்கழகத்தினுடைய நிறுவனர் , ஏழைகளின் பங்காளர் ,பாரத ரத்னா எம்ஜி ஆர் அவர்களுடைய காலத்திலேயே தான் இராமநாத புரம்மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகமும் இராமனாதபுரத்திலே அமைக்கப்பட்டது.(மேசையை தட்டும் ஒலி) இந்த இராமநாத புரம் மாவட்டம் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய இந்த மாவட்டத்தை எம் ஜி ஆர் அவர்கள் உயிர்பித்தார்கள்.அதற்கு சரியான மாவட்டத்தலைநகர் அந்தஸ்து கொடுத்தார்கள் இந்த ஆட்சியிலே மிகவும் பிற்படுத்தப்பட்ட தொழில் வளம் இல்லாத விவசாயமும் அதிகம் இல்லாத இந்த மாவட்டத்தை தமிழகத்தையே எப்படி இந்தியாவினுடைய முன்னோடி மாநிலமாக ஆக்கவேண்டுமேன்று அதிமுக அரசு முயற்சி செய்திருக்கிறதோ அதே போல எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தை தமிழகத்தில் மிகவும் முன்னோடியான மாவட்டமாக உருவாக்குவதற்கு இந்த அரசு.

முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்: இராமநாதபுரம் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டிருக்கின்றது. இராமேஸ்வரத்திலே யாத்ரிகர்களும், சுற்றுல்லாப் பயணிகளும் ஏராளமாக வருகின்றார்கள். அதற்கு அடிப்படை கட்டமைப்பு வவசதிகள் அளிக்கப்பட வேண்டும். இராமநாதபுரத்திலே சென்ற அரசு பெயரளவிலே மருத்துவக் கல்லூரி தொடங்கியதாக அறிவிப்பு மட்டும் செய்தது. வேறு எந்த நடவடிக்கையும் இல்லை. அதுவும் தொடர வேண்டும். இராமநாதபுரத்திலே ஓடக்கூடிய போக்குவரத்துக் கழகத்தினுடைய தலைமையகம் கும்பகோணத்திலே இருக்கின்றது. அந்தக் கோட்டம் கும்பகோணத்திலிருந்து காரைக்குடிக்கு மாற்ற வேண்டுமென்று கேட்டுகொண்டு நல்ல வாய்ப்பைத் தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்.

அதற்கு விளக்கமளித்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எஸ் கோகுல இந்திரா உறுப்பினர் பேசும்போது இஸ்லாமியர் சில கோரிக்கைகளை திருமண பதிவு சம்பந்தமாக கூறியிருக்கின்றார் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி விளக்கமாக சொல்லி வாக்குறுதியில் சொல்லியுள்ளதாக சொல்லியிருக்கின்றார்கள்..உறுப்பினர் அந்த கோரிக்கைகளை விளக்கமாக எங்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் நிச்சயமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடனடியாக அதற்குரிய (மேசையை தட்டும் ஒலி)நியாயப்படுத்தப்பட்ட அவர்களுடைய கோரிக்கையை சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக சாதி பாராத நீதி மானாக இதுவரை விளங்ககூடிய முதலமைச்சர் அம்மா அவர்கள் உடனடியாக அதற்குள்ள ஆய்வுகள் செய்து நிவாரணமும் அவர்களுக்குள்ள அந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார்

இலஞ்ச, ஊழல், அதிகார துஷ் பிரயோகங்களை அறவே விரும்பாத அரசர்!!!!!!

முஹம்மது மக்தூம் அப்துல் ஜப்பார் அவர்களின் Facebook  குறிப்புகளிலிருந்து....

நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636, 6679)

சனி, 11 ஜூன், 2011

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.

இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.
ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது.
இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள்.
பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.
ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.

ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர், "பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்".

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார்.

இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,

Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள்.
Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு.
One Reason - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு.
The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம்
Thanks: syed lalpet Facebook notes....

சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரலை எதிரொலித்த ஜவாஹிருல்லாஹ்!

சட்டமன்ற மமக கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சமுதாயத்தின் குரலை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.

வியாழன்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கெடுத்து அவர் பேசியது: பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்யும் சட்டம், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

இஸ்லாமியர்களின் திருணங்கள் ஜமாத்துக்களில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் திமுக அரசு கொண்டு வந்த திருமணங்கள் கட்டாய பதிவு என்கிற சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இதுகுறித்த கோரிக்கையை அப்போதைய திமுக அரசிடம் வைத்தோம். ஆனால் நிராகரித்து விட்டது.

திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. ஆனால், பதிவுக்கான விதிமுறைகளை எதிர்க்கிறோம். எந்தக் குறிப்பாணையும் இல்லாமல் ஜமாத்துக்களின் சான்றுகளை வைத்துக் கொண்டு திருமணங்களை பதிவு செய்திட வேண்டும் என்று பேராசிரியர் தனது பேச்சை தொடர, அமைச்சர் கோகுல இந்திரா (குறுக்கிட்டு): திருமண பதிவு சம்பந்தமாக உறுப்பினர் சில கோரிக்கைகளை வைத்தார்.

அவரது கோரிக்கையை விளக்கமாக எங்களிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
முதல்அமைச்சர் ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்றார்.


தொடர்ந்து பேராசியர் பேசுகையில், ''இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 10,400 பேர் அரசிடம் விண்ணப்பித்தனர். ஆனால், இதில் 3 ஆயிரம் பேருக்குத்தான் ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைத்தது. எனவே, மீதமுள்ளவர்களில் பாதி பேருக்காவது அங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

 வருங்காலத்தில் இன்னும் வலுவாக சமுதாயத்தின் கருத்தை பதிவு செய்வார்.....
Thanks....Aym yusuf' facebook notes

வியாழன், 9 ஜூன், 2011

ஊழல் மற்றும் மதுபான ஆற்றில் மூழ்கிக் கிடக்கும் குஜராத் அன்னா ஹசாரே பரபரப்பு குற்றச்சாட்டு

ஊழலுக்கு எதிராக போர் முரசம் கொட்டி வரும் சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே   நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் குறித்து தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.    மோடி யின் அரசு ஓர் ஊழல் நிறைந்த அரசு என்றும் அது ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங் களை கையகப்படுத்தும் செயலில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது என்றும் சமூக நல ஆர்வலர் அன்னாஹசாரே கடுமை யாக சாடியுள்ளார்.

ஹசாரேயின் கருத்துக்கள் மோடி அரசின்  கொடூரத்தை வெளிப்படுத்தி காட்டுவதாக இருந்தது.  இருப்பினும் இனப்படு கொலை தவிர்த்து மோடியின் நிர்வாகம் நல்ல முறையில் நடை பெறுவதாக ஒரு குருட்டு கருத்தோட்டம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்தது.

2002ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலை நிகழ்வுகளுக்கும் மோடிக்கும் எவ்விதத் தொடர்பும்  இருக்க முடியாது என பல ஊடகங்களும் மோடியை வளர்ச்சிக்கான  அரசியல் வாதியாக  வர்ணித்தன. காந்தியடிகள் பிறந்த மாநிலம் ஆதலால் அங்கு பூரண  மது விலக்கு என்றுமே நடைமுறையில் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அதைக்கூட மோடியின் சாதனையாக டமாரம் அடிக்க ஒரு கூட்டம் காத்திருந்தது,  மோடிக்கு முன்பாக ஆட்சி செய்தவர்கள் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் அதைக்கூட மோடியால் செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் அன்னாஹசாரே வெளியிட்ட கருத்துக்கள் மாயை களை உடைத்து உண்மைகளை வெளிப்படுத்தியது. குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதாக கூறப்படுவது ஒரு மாயை என்றும் மாநிலத்தில் பாலைவிட அதிகமாக மதுபானங் கள் தான் ஆறாக ஓடுகின்றன என்றும் கூறி பரபரப்பு தீயை பற்றவைத்திருக்கிறார்.

லஞ்ச ஊழலுக்கு எதிராக பாடுபட்டுவரும் அன்னாஹசாரே   கடந்த மாதம்  மோடி அரசை நல்லாட்சி என்று பாராட்டினார். பின்னர் அது தவறு என்று உணர்ந்து கொண்டதாக கூறி தனது மோடி ஆதரவு கருத்துக் களை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஹபீபா பாலன்