வெள்ளி, 17 டிசம்பர், 2010

அல்-அய்னில் நடைபெற்ற இரத்த தான முகாம்

அல்- அய்ன் மண்டல தமுமுக சார்பில் இந்த ஆண்டின் இரண்டாவது இரத்த தான முகாம் 17/12/2010 வெள்ளியன்று மாலை  அல்- அய்ன் டவுன் சென்டரில் அமீரக தமுமுக செயலாளர் சகோதரர் யாஸீன் நூருல்லாஹ் அமீரக தமுமுக துணை செயலாளர் சகோதரர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது.
அல்- அய்ன் மண்டல தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்நிகழ்வில் அல்- அய்ன் மண்டல இரத்த வங்கிக்காக நடமாடும் இரத்த சேகரிப்பு பேருந்து (mobile blood bank) கொண்டு வரப்பட்டு இரத்தம் சேகரிக்கப் பட்டது.
அதிக  அளவில் இரத்த தானம் செய்ய சகோதரர்கள் பெருமளவில் ஆர்வத்துடன் குழுமினர். மருத்துவரின் பரிசோதனையின் பேரில் 60 நபர்கள் மாத்திரமே தானம் வழங்க முடிந்தது.
இம்முகாமுக்காக என்.சி.இ.கேம்ப்,கத்தாரா,ஜிம்மி,கிளின்கோ மற்றும் மஸியாத் கிளைகளிலிருந்தும் அல்- அய்னின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சகோதரர்கள் திரண்டு வந்தனர்.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே..

வெள்ளி, 10 டிசம்பர், 2010

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.

சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

மாபெரும் இரத்த தான முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லா எதிர் வரும் 17 /12 /2010 வெள்ளிக் கிழமை மாலை 4  மணிக்கு அல்-அய்ன் பங்காளி மார்க்கெட்டில் அல்-அய்ன் மண்டல தமுமுக சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. அதில் கழக சகோதரர்கள் பங்கெடுப்பதுடன் இந்த முகாம் வெற்றி பெற துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முகாம் குறித்த தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். 050- 1386785/050-1131541/050-5752436

கொள்ளுமேடு F . முஹம்மது ரிபாயி
தலைவர்
அல்-அய்ன் மண்டல தமுமுக

திங்கள், 6 டிசம்பர், 2010

டிசம்பர் 6 திணறியது மண்ணை அலைகடலென திரண்டனர் மக்கள் !

லால்பேட்டை/ :டிசம்பர் 6 இந்திய ஜனநாய படுகொலை செய்த கருப்பு நாளாகும், இந்திய உலகளவில் வெட்கி தலைகுனிந்த நாளாகும், அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தை சங்பரிவார் கும்பல்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இந்த நாளை இந்தியா முழுவதும் ஜனநாயக படுகொலை தினமாகவும் கருப்பு தினமாகவும் போராட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்களும் நடத்தி வருகின்றார்கள்.
இந்த டிசம்பர் 6ஐ நமது பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காட்டுமன்னர்கோயில் இல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது, இப்போராட்டத்திற்கு பல ஊர்களில் இருந்து வாகனங்கள் மூலம் அணி அணியாக மன்னையை நோக்கி அல்லாஹ் அக்பர் என்ற முழக்கத்துடன் காலை 9மணி முதல் சென்றுகொண்டிருந்தார்கள்.
லால்பேட்டையில் இருந்தும் இருசக்கர வாகனங்களிலும் கார் மற்றும் வேன்களில் பெண்கள் உட்பட்ட சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமுடன் அணிவகுத்து சென்றனர்.
இத்தொடர் முழக்க ஆர்பாட்டத்திற்கு 4 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் சமுதாய பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்வமாக எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள்.
இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் இதர சமுதாய மற்றும் நமது சமுதாய தோழமை கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்திரலாக கலந்துகொண்டார்கள்,
இப்போராட்டத்திற்கு H.மெஹராஜ்தீன் தலைமை வகித்தார், வரவேற்பு மற்றும் கண்டன உரையை அப்துல் சமத் வாசித்தார், 3வது வார்டு உறுப்பினர் யாசிர் அரபாத், பேருராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள்  ம ம க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
தமீமுன் அன்சாரி பேச்சு :
இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு வந்திருந்த ம ம கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எம். தமீமுன் அன்சாரி பேசுகையில் அறுபது ஆண்டுகளுக்கு மேல் நீதிக்காக காத்திருந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு அலஹாபாத் உயர்நிதிமன்றம் ஒருதலைபட்சமாக தனது தீர்ப்பை வழங்கியதாகவும், இது கிராமங்களில் நடக்கும் சில கட்டபஞ்சாயத்து தீர்ப்பு போல வழங்கியதாகவும், மேலும் முஸ்லீம்கள் பாபரி மஸ்ஜித் காவி கூட்டங்களால் இடிக்கப்பட்டபோது எந்த அளவுக்கு மனம் உடைந்தார்களோ அதை விட மிகவும் வேதனை அடைந்தார்கள் இந்த தீர்ப்பினால் என்றார், இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியா நிதித்துறை மீது நம்பிக்கை உள்ளது அதனால்தான் நாங்கள் உச்சநிதிமன்றத்தை நாடியிருக்கிறோம்,

Powered By Cincopa

மேலும் அவர் பேசுகையில் வரலாறுகளை நினைவு காட்டி இப்ராஹீம் லூடியின் ஆட்சியில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்கள் கொடுமை படுத்தபடுகிரார்கள் என்றும் இதனால் ஹிந்துக்கள் ஒன்று கூடி ஆப்கானிஸ்தான்னில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாபர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி நீங்கள் எங்கள் நாட்டை ஆளவேண்டும் எங்களுக்கு நிம்மதியான ஆட்சியை தரவேண்டும். இன்னும் உங்களுடைய ஆட்சியை பற்றி எல்லா தரப்பினரும் நன்றாக கூறி வருகின்றார்கள் என்றதால் பானிபட் போரில் இப்ராஹீம் லூடியை தோற்கடித்து டெல்லியை கைப்பற்றி ஆட்சி செலுத்தினார்,
இக்காலங்களில் பாபரின் தளபதி மிர்பாய் அயோத்திக்கு வரும்போது ஒரு கட்டிடம் அறைகுறையாக இருந்ததை கண்டார், இது யாருடையது என்று கேட்கும்போது, இப்ராஹீம லோடி அவர்களால் பள்ளிவாசல் கட்டப்பட இருந்தது அந்த நேரத்தில் பாபர் அவரை போரில் தோற்கடித்து கொல்லப்பட்டார் இதனால் இந்த முயற்சி பாதியில் நின்றுவிட்டதாக தெரிவித்தனர், உடனே பாபரின் தளபதி மீதமுள்ள கட்டிட வேலைகளை முடித்து பாபர் மஸ்ஜித் உருவாக்கினார் இதுவே பாபரி மஸ்ஜிதின் உண்மை வரலாறாகும்.
அனால் காவி வெறியர்கள் பாபரை ஒரு ஹிந்துக்களுக்கு எதிரி போல சித்தரிக்கிறார்கள், இன்னும் தமீமுன் அன்சாரி கூறுகையில் பாபரை அவரது ஆட்சி காலத்தில் வன்மையாக எதிர்த்து வந்த சீக்கியர் ஒருவர் கூட பாபர் ராமர் கோயிலை இடித்து பள்ளி கட்டியதாக குறிப்பிடவில்லை என்றார்.
தமீமுன் அன்சாரி எச்சரிக்கை :
மேலும் அவர் பேசுகையில் முஸ்லீம்கள் இன்னும் அமைதியாக இருப்பது உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்றுதான், நாங்கள் இந்தியாவில் வாழும் இருபது கோடிக்கு அதிகமான முஸ்லீம்கள் ஒன்று சேர்ந்தால் எப்படி அல்லாஹ் புனித மக்காவை “அபாபில்” பறவைகள் கொண்டு காப்பற்றினனோ அதுபோல நாங்களும் அல்லாஹ்வின் துணையோடு சென்று பள்ளியை கட்டவேண்டி இருக்கும் என்றார்
இறுதியாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் முடித்து பெண்கள் இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள், இப்போரட்டத்தினால் காட்டுமன்னர்கோயில் பேருந்து நிலைய சாலை போக்குவரத்து தடைபட்டது, பேருந்துகள் வேறு தடத்தில் மாற்றி விடப்பட்டது. கடைசியாக வந்திருந்தவர்கள் அமைதியாக கலைந்து செல்லும்படியும், பாதுகாப்பு வழங்கிய காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மறக்கப்படும் இஸ்லாமிய புத்தாண்டு....

இஸ்லாமிய மாதங்களில் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த பந்தங்களையும் சொத்து சுகங்களையும் அல்லாஹ்விற்காக துறந்து சொந்த மண்ணை விட்டு பிரிந்து மதீனா நகருக்குப் பிரவேசித்த அந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய புத்தாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
நபியவர்கள் அனைத்தையும் துறந்து மற்றொரு மண்ணில் தஞ்சம் புக வேண்டிய அவசியம் ஏன் உருவானது? என்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர்.
மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை ஆகிய இம்மூன்று தீய குணங்களை தன்னகத்தே குடிகொண்டிருந்த ஒரு காட்டரபி சமூகத்தில் பிறந்து அம்மக்களிடையே மண்டிக்கிடந்த இனவெறி குலவெறி என மனித சமூகத்திற்கு ஒவ்வாத கொள்கைகளை எதிர்த்து ஓரிறை கோட்பாட்டை பரப்புரை செய்ததால் சினங்கொண்ட அம் மக்கா நகரத்து காட்டுமிராண்டிகள் அவரை கொலை செய்யத் துணிந்தனர்.
சத்திய மார்கத்தை இப் புவியெங்கும் பரப்பிட சபதம் கொண்ட அம்மாமனிதர் தமது இலட்சியத்தைக் காக்க நாடு துறந்தார் அம்மாபெரும் தியாகத்தை நினைவு கூறுவது இப்புத்தாண்டு தினத்தின் முக்கிய அம்சமாகும்.
ஆனால் இன்றைய சமூகம் அந்த தினத்தை நபிகளார் செய்த தியாகத்தை மறக்கத்துனிந்து விட்டதோ என அஞ்சக்கூடிய அளவிற்கு இந்த நாளை தெரியாமல் இருந்து வருகின்றனர்.
இந்த அவல நிலையைக் களைந்து முஸ்லிம்களின் தேசிய அடையாளங்களில் ஒன்றான இந்த இஸ்லாமிய புத்தாண்டை நினைவில் கொண்டு நபியவர்களைப் போல நாடு துறக்கும் தியாகம் செய்ய நம்மால் முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் இஸ்லாம் தடுத்திருக்கும் பாவமான காரியங்களிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன் என இந்நாளில் நாமனைவரும் சபதம் கொள்வோமாக.
வாசகர்கள் அனைவருக்கும் இனிய இஸ்லாமிய புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.


டிசம்பர் 6: தொடர் முழக்கப் போராட்டம் ஏன்?- தமிமுன் அன்சாரி

இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்த பாப்ரி மஸ்ஜித், மதவெறி பயங்கரவாதிகளால் 1992, டிச.6 அன்று தகர்க்கப்பட்டது.இந்தியர்களின் அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ளிட்ட பண்புகளின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் விழுந்த பேரிடியாக அத்துயர நிகழ்வு அமைந்தது. உலக அளவில் இந்திய தேசம் தலை குனிந்தது.பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர்.6ஐ கறுப்பு தினமாக, கடந்த 18 ஆண்டுகளாக தேசம் கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த செப்.29,2010 அன்று பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற சுமார் 60 ஆண்டுகால வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தது. அது தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா? என்ற விவாதத்துக்கு வழி வகுத்திருக்கிறது. சட்ட நுட்பங்களின் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்காமல் புராண நம்பிக்கைகளின் அடிப்படையிலும், புதிய பிரச்சனைகள் வரக்கூடாது என்ற நோக்கிலும் அத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக இந்திய சட்ட நிபுணர்களும், செய்தி ஊடகங்களும், அரசியல் தலைவர்களும், அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிவில் வழக்கில் இது போன்ற தீர்ப்புகள், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் பல மோசமான தீர்ப்புகள் வெளிவரக் காரணமாகிவிடும் என கண்டித்துள்ளனர். பாப்ரி மஸ்ஜித் இடம் தொடர்பான வழக்கில் மூன்று தரப்பு மனு செய்தார்கள் என்பதற்காக மூன்று பேருக்கு நிலத்தை பிரித்துக் கொடுப்பது என்ன நியாயம்? ஒருவேளை 5 பேர் வழக்கு தொடுத்திருந்தால் 5 பேருக்கும் நீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்குமா? என தேசமே கேள்வி எழுப்புகிறது. அதுவும் நிராகரிக்கப்பட்ட இரண்டு மனுதாரர்களுக்கும் நிலத்தில் சொந்தம் இருப்பதாகக் கூறுவது எந்த வகை சட்ட நீதி என்ற கேள்விக்கு பதில் இல்லை.450 ஆண்டு காலத்துக்கும் மேலாக அனுபவித்த ஒரு சொத்தில் 1528ம் ஆண்டு முதல் 1949 டிச 22 வரை தொழுகை நடத்தப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பான ஆவணங்களை சமர்த்தபின்னரும் அந்த நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமில்லை என்பதும், அங்குதான் ராமர் பிறந்தார் என்பதும், ‘போனால் போகிறது உங்களுக்கும் ஒரு துண்டு நிலம் தருகிறோம்’ என்பதும் அரசமரத்தடியில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து வடிவிலான தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. இதை இத்தோடு விட்டுவிட வேண்டும் என பலர் ‘நல்லெண்ண’ அறிவுரைகளை வழங்குகிறார்கள். பாப்ரி மஸ்ஜிதை இடித்தது போல், நாளை காசியிலும், மதுராவிலும் உள்ள பள்ளிவாசல்களையும் இடிப்போம் என்றும், மேலும் நாடு முழுக்க குறி வைத்திருக்கும் 3 ஆயிரம் பள்ளிவாசல்களையும் கேட்போம் என்றும் விஸ்வஹிந்து பரிசத் கூக்குரலிடுகிறது. இவை குறித்து ‘சமரசம்‘ பேசும் தலைவர்கள் ஏனோ கண்டு கொள்வதில்லை.பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ‘பெருந்தன்மை’ காட்டினால், மேலும் மூவாயிரம் பள்ளிவாசல்களை இழக்க வேண்டிவருமே என்ற நியாயமான அச்சத்திற்கு யாரும் பதில் சொல்ல முன்வருவதில்லை. இந்நிலையில் நீதிகேட்டு நெடும்பயணத்தை நடத்தி வரும் தமுமுக, தன் கடமைகளைத் தொடர்கிறது. 1995 முதல் மக்களைத் திரட்டி டிசம்பர் 6களில் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில்:எதிர்வரும் டிசம்பர் 6, 2010 அன்று• பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு குறித்த மேல் முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்.• பாப்ரி மஸ்ஜிதை இடித்த வழக்கில் ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தவேண்டும்.• பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்கள் குறித்து லிபர்ஹான் கமிஷன் விசாரித்து குற்றம் சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் நடைபெறும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் நியாயவான்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். இது மனிதநேயத்திற்கும், மதவெறிக்கும் இடையே நடக்கும் வாழ்வுரிமை போராட்டமாகும்.ஏற்கனவே 18 ஆண்டுகள் போராட்டத்தில் கழிந்து விட்டன. ஆனாலும் சலிப்படைய மாட்டோம். இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், போராடிக் கொண்டே இருப்போம்.இது குறிப்பிட்ட சமூக மக்களுக்கான போராட்டம் அல்ல. இந்திய அரசியல் சாசன சட்டத்தையும், சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.அனைத்து சமுதாய சகோதரர்களே, தமிழின உணர்வாளர்களே, திராவிட இயக்கச் சொந்தங்களே, இடதுசாரித் தோழர்களே, ஒடுக்கப்பட்ட சமூகப் போராளிகளே, ஆதிக்க எதிர்ப்பு சிந்தனையாளர்களே.. வாருங்கள். ஒன்றுபடுவோம். நீதிக்காகப் போராடுவோம்.

தமிமுன் அன்சாரியின் Face Book குறிப்பிலிருந்து.....

முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை "பஞ்சா" என்ற பெயரில் பலர் இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர். மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 

முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது இஸ்லாத்தில் உள்ள பண்டிகை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல் மேலும் மாற்று மதத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று நம் சகோதரர்களும் இதுபோன்று ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது. 

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமில்லை. மாற்று மதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி ஷியாக்களால் உருவாக்கப்பட்டவைதான் இவையனைத்தும். குறிப்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதன் தாத்பரியம் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகும். அதாவது ஷியாக்களின் கொள்கையான ஐந்து புனிதர்களை வணங்கும் கொள்கைதான் இந்த பஞ்சாவின் அடிப்படையாகும்.
அதாவது
1) முஹம்மது (ஸல்) அவர்கள்,
2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),
3) அலி (ரலி),
4) ஹஸன் (ரலி),
5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது. 

இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும். அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து பெரும்பாலும் இந்த பண்டிகைகள் உயிரோட்டமற்று ஏதோ கடனுக்காக நடத்தப்படுகின்றன. ஷியாக்களால் உருவாக்கப்பட்டு அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய அரசாங்கமும் இதை முஸ்லிம்களின் பண்டிகையாகவே கருதுகிறது. இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுவதுதான் கொடுமையிலும் கொடுமை.  

இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்கதினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸைன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி) இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக இப் பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. 


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.
(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்) 


மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன்(ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு மற்ற அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும். 


ஊர்வலம் என்ற பெயரில் கொட்டு மேளதாளங்களுடன் செல்வதால் பல சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற அறியாமையினால் செய்யும் செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன. அன்பிற்குறிய முஸ்லிம்களே! நமது இறைவன் ஒருவன்தான். அவனுக்கு எந்தவகையிலும் நாம் இணைவைக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு தூதுத்துவம் நிறைவுற்றுவிட்டது. அதற்குப்பின்னால் ஏற்படடுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். நபி (ஸல்) அவர்கள் எந்த காரணத்திற்காக நோன்பு நோற்றார்களோ அதே காரணத்திற்காக நாமும் நோன்பு நோற்று அதற்குரிய முழு நன்மைகளையும் அடைய அல்லாஹ் அருள் செய்வானாக.
 
நன்றி- இஸ்லாம் கல்வி.காம்,

வெள்ளி, 26 நவம்பர், 2010

நட்புக்கு இலக்கணம்..! உமர் ஷரீப்....

(இரத்த தானம் செய்கிறார் உமர் ஷரிப்... )
கடந்த 2008  தொடங்கி அவருடன் எனக்கு பழக்கம். அமீரகத்திற்கு வந்து சிலமாதங்கள் கழித்து அமீரக தமுமுக நிர்வாகிகளை முதன் முதலாக அமீரக செயலாளர் யாசின் நூருல்லாஹ் அவர்களது இல்லத்தில் வைத்து சந்திக்கும் போது அவர் எனக்கு அறிமுகமானார்.

அன்று தொடங்கி அவர் கடந்த தியாகத் திருநாள் வரை என்னுடன் நேரிலும் தொலைபேசியிலும் நிகழ்த்திய உரையாடல்கள் கொஞ்ச நெஞ்சமல்ல..! புதிதாக யாரையாவது அவர் ஒருமுறை சந்தித்தால் போதும் உடனடியாக அவர்களது தொலைபேசி எண்னை கேட்டு வாங்கிக் கொண்டு அவர்களுடன் நட்பை தொடர்ந்து கொண்டே இருப்பார். ஒரு விஷயத்தில் மாத்திரம் அவர் கவனமாக இருப்பார்... தான் பொதுசெயலாளர் ஹைதர் அலியின் மருமகன் என்பதை யாரிடமும் சொல்லிக் கொள்ளமாட்டார். என்னுடன் எங்கேயாவது வெளியே செல்ல நேர்ந்தால் என்னிடம் தான் யார் என்பதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்.ஹைதரின் மருமகன் என்பதற்காக தான் அதிகம் கவனிக்கப்பட வேண்டும் என்ற  பிரபலத்தை விரும்பாதவராக வாழ்ந்தார்.
நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தொடர்பை துண்டித்து விட்டு அவரது எண்ணிலிருந்து எண்னை அழைத்து மணிக்கணக்கில் உரையாடுவார்.ஏன் எனது அழைப்பைத் துண்டிக்கிறீர்கள்? எனக் கேட்டால்  "நீங்க கம்மி சம்பளத்துக்கு வேலை செய்றீங்க ரிபாயி பாய் உங்க பணத்தை வீணாக்காதீங்க " என்று சொல்வார்.

இறுதியாக தியாகத் திருநாளன்று எண்னை அழைத்து பெருநாள் வாழ்த்து பரிமாறிக் கொண்டது தான் அவருடன் நான்  இறுதியாக பேசிய பேச்சாக இருந்தது.

நேற்று முதல் நாள் புதனன்று அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் மூலம் எனது செவியில்  கேட்ட அவரது வபாத்து செய்தி நெஞ்சில் பேரிடியாக விழுந்தது.

"யா அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்க பூங்காவில் அவருக்கு இருப்பிடத்தை வழங்குவாயாக" என்று பிரார்த்திக்க  நூற்றுக்கணக்கான சகோதர உள்ளங்கள் ஷார்ஜாவில் அவருக்கான ஜனாஸா தொழுகைக்காக குழுமியதை காண முடிந்தது.

அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக...!

வியாழன், 25 நவம்பர், 2010

ஷார்ஜாவில் காலமானார் சகோதரர் - உமர் சரீஃப்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
                      24-11-2010 அன்று ஷார்ஜாவில் காலமான சகோதரர் - உமர் சரீஃப் அவர்களின் உடல் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை 26-11-2010 காலை சரியாக 9மணியலவில் அன்னாரின் ஜனாஸா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும்.
இடம் :-
மஸ்ஜிதுல் ஸஹாபா
அல் காசிமியா மருத்துவமணை அருகில்
ஷார்ஜா
மேலும் விபரங்களுக்கு : நஜீர் - 050 1736892, ஹாரிஸ் - 055 4128182.
----------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
 தொண்டியை சேர்ந்த சகோதரர். உமர்  சரீஃப் (வயது-29) அவர்கள் இன்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் எதிர்பாராத விபத்து ஒன்றில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். (இவர் தமுமுகவின் பொதுச்செயலாலர் சகோ-ஹைதர் அலி அவர்களின் மருமகன் ஆவார் மற்றும் தமுமுக துபை மண்டலத்தின் நிர்வாகியுமாவார்)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
சகோ.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்யுங்கள்.
நன்றி! வஸ்ஸலாம்!!
தமுமுக துபை மண்டலம்
தொடர்பு எண்கள்: 00971 50 4474563 . 00917 55 291049
07-05-2010 அன்று சகோதரர். உமர்  சரீஃப் இரத்ததானம் செய்யும் பொழுது எடுத்த படம்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

செவ்வாய், 26 அக்டோபர், 2010

இஸ்லாத்தை தழுவினார்

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் உறவினர்
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்லி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்திலிருந்து தன்னை விடுவித்து இஸ்லாத்தை தழுவிய தகவல் உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.


அபுதாபியிலிருந்து வெளிவரும் அமீரகத்தின் பிரபல ஆங்கில நாளேடான தி நேசனல் இன்று (26அக்டோபர்2010)வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

45 வயதான லாரன் போத் என்கிற அப்பெண்மணி, ஈரானின் பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனலான பிரஸ் டிவி யில் பணியாற்றி வருகிறார்.கடந்த 24ந் தேதி ஞாயிறன்று லண்டன் நகரில் நடைபெற்ற உலகளாவிய அமைதி மாநாட்டில் பலத்த ஆரவாரங்களுக்கிடையே, தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிவித்தார்.

பின்னர் தி மெயில் என்ற இங்கிலாந்தின் ஆங்கில நாளேட்டின் நிருபரிடம் பேசிய போது, தான் ஹிஜாப் அணிவதாகவும் ஐவேளை தொழுது வருவதாகவும் மேலும் மது பானங்கள் அருந்துவதையும் பன்றி இறைச்சி சாப்பிடுவதையும் முற்றிலும் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்தார். இஸ்லாத்தை தழுவியதிலிருந்து இன்று வரை 45 நாள்கள் ஆகிவிட்டன..தனது வாழ்நாளின் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட இத்தனை நாள்களுக்கு மது அருந்தாமல் இருந்ததில்லை என தெரிவித்துள்ள அவர், இரவாகிவிட்டால் யாராவது தமக்கு மது ஊற்றிக் கொடுத்தே ஆக வேண்டும் என்றிருந்த மனநிலையிலிருந்து தாம் முற்றிலும் விடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

பாலஸ்தீனில் ஊடகத்திற்காக பணியாற்றிய போது இஸ்லாத்தை படிக்கத் தொடங்கியதாக கூறும் இவர், இராக் போருக்கெதிராகவும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரங்கேற்றி வரும் அக்கிரமத்திற்கெதிராகவும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

டோனி பிளேருக்கு சமீபத்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்.. முஸ்லிம்களை நீங்கள் பைத்தியக்காரர்களாகவும், அபாயகரமானவர்களாகவும் நீங்கள் பார்க்கிறீர் என விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் வேறொரு மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்ட டோனி பிளேர் தனது உறவினர் ஒருவரின் இஸ்லாமிய பிரவேசம் குறித்து; கருத்து தெரிவிக்கவில்லை.

லாரன் போத்தின் இஸ்லாமிய பிரவேசத்தை பெரும்பாலான முஸ்லிம்கள் வரவேற்றுள்ளனர். நேற்றைய தினம் இணையதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் போர்க் குற்றவாளியான டோனி பிளேருக்கு இப்போது நல்லதோர் உறவினர் கிடைத்துள்ளார் என பதிவு செய்துள்ளனர்.

தமிழில் : கொள்ளுமேடு ரிஃபாயி.

சனி, 16 அக்டோபர், 2010

புறக்கணிக்கப்பட்ட சலாம்

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.

இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் சலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236
முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -
சிலர் சலாம் கூறும் போது புரியும் படியாகவோ அல்லது முழுமையாகவோ கூறுவதில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் சகாபாக்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒரு சஹாபி வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் என்றார். நபி (ஸல்) அவர்கள் பத்து என்று கூறினார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைலக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் இருபது என்றார்கள். மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் முப்பது என்று கூறினார்கள். சஹாபாக்கள் ஆர்வமிகுதியால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, முதலில் சலாம் கூறியவருக்கு பத்து நன்மைகள், இரண்டாவது சலாம் கூறியவருக்கு இருபது நன்மைகள், முன்றாவது சலாம் கூறியவருக்கு முப்பது நன்மைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
‘சலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்:
 நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வருகிறது: -
உங்களிடையே ஸலாத்தைக் கொண்டு பரப்புங்கள். சலாம் சொல்வதால் இரு உள்ளங்களுக்கு இடையே இணக்கம் ஏற்படுகிறது.
நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) , ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5175)
வீடுகளில் நுழையும் முன் சலாம் கூறுவதன் அவசியம்: -
நம்முடைய வீட்டிலோ அல்லது பிறருடைய வீட்டிலோ நுழையும்போது நம்மில் எத்தனை பேர் சலாம் சொல்லி நுழையக் கூடியவர்களாக இருக்கிறோம்?. பிறருடைய வீட்டில் நுழையும் போது சமையல் வாசனை முக்கைத் துளைத்தவுடன் இன்று என்ன பிரியானி சமையலா? என்று கேட்வாறு உள்ளே நுழைகிறோம். ஆனால் இஸலாம் வலியுறுத்திக் கூறும் சலாம் சொல்வதில்லை அல்லது மறந்து விடுகிறோம்.
அத்தியாயம் 24, ஸூரத்துந் நூர் (பேரொளி), வசனம் 27 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244
கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறுதல்: -
கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறக் கூடாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே காணப்படுகிறது. இது தவறானதாகும். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலே நுழையுமுன் மனைவிகளுக்கும், சிறியவர்களுக்கும் முந்திக்கொண்டு சலாம் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்:
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.
அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள், வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.
மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -
இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.
ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

நன்றி- சுவனத் தென்றல்.காம்,

வியாழன், 14 அக்டோபர், 2010

இஸ்லாமிய ஒளியில் தலைமைத்துவம்.

'முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.' (புகாரி)


'மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்' (புகாரி, முஸ்லிம்)

மேலும் இஸ்லாமிய உம்மத்தின் அடித்தளமே அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பட்டுள்ளது என்பதைத்தான் உமர் (ரலி) இப்படி இயம்பினாhர்;கள் 'நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை.' (ஸுனன் அத்தாரமி)
தலைமைக்கு வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை கொடுக்கும் அதே வேளை அத்தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான பெருமானார் (ஸல்) வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.

அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் அஹ்ஜாப் -21)


தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்
1. தக்வா - தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. 'மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்' (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு ஏற்ப இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் உள்ளவராகவும் தன் செயல்களுக்குரிய கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்காமல் அல்லஹ்விடம் மட்டுமே எதிர்பார்க்க கூடிய தலைவர்களையே இஸ்லாம் எதிர்பார்கின்றது.
2. அறிவு - வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இஸ்லாம் வழி எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம். மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகளை பற்றியும் விரிவான அறிவு கொண்டவராய் இருத்தலின் அவசியத்தை பற்றி உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து, ஜாஹிலிய்யாவை அறியாத ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

3. உறுதி கொண்ட நெஞ்சம் - 'அல்லாஹ்விற்கு மிக உவப்பான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக செய்வதே' (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முடிக்கக் கூடிய திறன் உடையவராக தலைமை இருத்தல் அவசியம். எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் நெஞ்சுரம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.
4. நிலைமையை கணிக்கும் திறன் - தனது பலம், பலவீனத்தை பற்றி இஸ்லாமிய தலைமை தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராய் இருக்க வேண்டும். பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போன்று தெரியாவிட்டாலும் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை கொண்டு செயல்பட வேண்டும். ஹீதைபியா உடன்படிக்கையின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை மிகச்சிறந்த உதாரணம்.

5. நீதி செலுத்துதல் - தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். 'மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும், நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.' (5:8)
6. திடவுறுதி, பொறுமை, வீரம் - இம்மூன்று பண்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இஸ்லாமிய
பாதையானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பனி ஆதலால் பல்வேறு குறுக்கீடுகள் வரும். இடைத்தடங்கல்;களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் தீரத்துடன் பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தலைமை இருத்தல் அவசியம்.
7. இஸ்திகாமத் - சத்தியப் பாதையில் இருந்து தன்னை திருப்பி விட எவ்வளவோ உபாயங்களை மேற்கொண்ட போதும் இன்னல்களை கொடுத்த போதும் நிலைகுலையாமல் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, இம்மனிதர்கள் சூரியனை எனது ஒரு கையிலும் சந்திரனை மறுகையிலும் கொண்டு வந்து வைத்தாலும் கூட நான் இதனை கை விடமாட்டேன், அல்லாஹ் எனக்கு வெற்றியைத் தருவான் அல்லது நான் இதன் வழியில் செத்து மடிவேண்' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் சூளுரைத்தது போன்ற தன்மை உடையவராக தலைமை இருத்தல் அவசியம்.

8. பொது அறிவு திறன் - இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புரிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலையைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமது எண்ணங்களையம், திட்;டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு 'சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்' எனும் இறைவாக்கியத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராய் இருத்தல் வேண்டும்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான வார்த்தைகளாகவே காணப்பட்டது. அதனை கேட்ட அனைவரும் எளிதில் விளங்கிக் கொண்டனர். (அபூதாவூத்)
நான் சுருக்கமாக, ஆனால் அதிக விளக்கமுள்ள வார்த்தைகளை பேசச்கூடியவனாக அனுப்பப்பட்டுள்ளேன்.(புகாரி)
9. சேவை மனப்பான்மை - 'சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்' (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.

10. மஷீரா - தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும் ஞானமும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும். 'இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வோர் காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்' (ஷீரா 38) சகல காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக (ஆல இம்ரான்- 159)
நன்றி: துபை அப்துல் ரசாக்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

கட்டப் பஞ்சாயத்து - இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து

உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் நேற்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.

இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும்  இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.

சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள்  தரப்பில் கூறப்படுகின்றது

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

சனி, 28 ஆகஸ்ட், 2010

அல்-அய்னில் எழுச்சியுடன் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி...


அருள் வளம் நிறைந்த ரமளான் மாதத்தில் இதயங்களை இணைக்கும் நிகழ்வுகள் உலகெங்கிலும் நிகழ்ந்து வருகின்றன.குறிப்பாக இஃப்தார் நிகழ்ச்சிகள் மூலமாக சமூக நல்லிணக்கமும்,மகிழ்சியும் இதயங்களில் விதைக்கப்படுகின்றன என்றால்.. இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

மனிதநேயமும்,சமூகநீதியும் உலகினில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டினை செயல் வடிவம் கொடுத்திட உழகை;கும் தமுமுக ஊழியர்கள் ரமளானில் செய்து வரும் எண்ணற்ற நல்லறங்களில்.. மகுடமாய் விளங்கிக் கொண்டிருக்கின்றன இந்த இஃப்தார் நிகழ்வுகள்.

அல்-அய்ன் மண்டலம் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த வியாழக்கிழமை 17 வது நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அல்-அய்ன் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பிரபல உணவகம் ஒன்றின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.


இதைனையொட்டி மார்க்க சமுதாய விழிப்புணர்வு பிரச்சார உரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கடும் கோடை வெப்பத்தையும் பொறுட்படுத்தாது நோன்பாளிகள் 4.30 மணி தொடங்கி நிகழ்ச்சி அரங்கத்திற்கு வரத்தொடங்கினர்.


சரியாக 5 மணிக்கு மண்டல தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின.மௌலவி அப்துல் காதர் ஜெய்லானி கிராஅத் ஓதினார். மஸியாத் கிளின்கோ பகுதி கிளையின் ஆலோசகர் மேலப்பாளையம் மௌலவி பஷீர் ஆலிம் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றினார். மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி வரவேற்புரையாற்றினார்.

அமீரக முமுக செயலாளர் யாஸீன் நூருல்லாஹ்,அமீரக முமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர்,மண்டல துணைத் தலைவர் நாச்சிகுளம் அசாலி அஹமது, மண்டல செயலாளர் மன்ணை ஹாஜா மைதீன்,மண்டல பொருளாளர் பூதமங்களம் ஜாஹிர் ஹுஸைன்,மண்டல மூத்த நிர்வாகி தோப்புத்துறை சர்புதீன்,நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கீழை முஹம்மது இபுனு,ஷேக் தாவூத்,அப்துல் முத்தலிப், மற்றும் மஸியாத் கிளின்கோ பகுதி கிளை நிர்வாகிகள்,அல்-ஜிமி பகுதி நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.


தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தலைமை கழக பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தஃபா ரமளானில் செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் உரையாற்றினார்.இறுதியாக உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தமுமுக தொடங்குவதற்கு முன்னர் தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் சந்தித்த இன்னல்களையும் அது தொடங்கப்பட்டதற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எவ்வாறு மரியாதையைப் பெற்றுத் தந்தது என்பதையும் தமிழக அரசியலில் மமக வின் எழுச்சி குறித்தும் தனக்கே உரித்தான பாணியில் விளக்கினார்.

கூட்டம் அளவுக்கதிகமாக கூடியதால் ஏராளமான நோன்பாளிகள் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே உரைகளை செவிமடுத்தனர்.

இஃப்தார் நேரம் தொடங்தியவுடன் நோன்பாளிகளுக்கு பழங்களும் பழச்சாறும் வழங்கப்பட்டன. பின்னர் நோன்பாளிகள் அணைவரும் உடனடியாக அருகில் உள்ள பள்ளியில் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அந்த உணவகத்திலேயே அவர்களுக்கு உணவு விருந்து பறிமாறப்பட்டது.

மண்டல துணை செயலாளர் அதிரை அப்துல் ரஹ்மான்,இணை செயலாளர்கள் களப்பால் சையது யூசுஃப்,விழுப்புரம் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சகோதரர்கள் நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போது வாகன வசதி செய்து கொடுத்தால் மாத்திரமே பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலை மாறி பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாத நிலையிலும் பெரிய அளவில் மக்கள் திரண்டிருக்கின்றனர் என்றால் இது சமுதாயம் தமுமுக வின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பைக் காட்டுவதாக அமைந்திருப்பதாக மூத்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

கலந்தாய்வுக் கூட்டம்.


அல்-அய்ன் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாயகத்திலிருந்து
வருகை தந்திருக்கும் தலைமை நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்
நடைபெற்றது.

அமீரக முமுக செயலாளர் யாசின் நூருலாஹ் தலைமை தாங்கினார். தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அமீரக முமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மமக துணை பொது செயலாளர் தமிமுன் அன்சாரி அல்- அய்ன் மண்டல முமுகவின் கடந்த ரமலான் முதல் இந்த ரமலான் வரை   நடந்த
பணிகள்  குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள்   வழங்கினார். பின்னர் சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே..!