திங்கள், 6 டிசம்பர், 2010

டிசம்பர் 6 திணறியது மண்ணை அலைகடலென திரண்டனர் மக்கள் !

லால்பேட்டை/ :டிசம்பர் 6 இந்திய ஜனநாய படுகொலை செய்த கருப்பு நாளாகும், இந்திய உலகளவில் வெட்கி தலைகுனிந்த நாளாகும், அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தை சங்பரிவார் கும்பல்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இந்த நாளை இந்தியா முழுவதும் ஜனநாயக படுகொலை தினமாகவும் கருப்பு தினமாகவும் போராட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்களும் நடத்தி வருகின்றார்கள்.
இந்த டிசம்பர் 6ஐ நமது பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காட்டுமன்னர்கோயில் இல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது, இப்போராட்டத்திற்கு பல ஊர்களில் இருந்து வாகனங்கள் மூலம் அணி அணியாக மன்னையை நோக்கி அல்லாஹ் அக்பர் என்ற முழக்கத்துடன் காலை 9மணி முதல் சென்றுகொண்டிருந்தார்கள்.
லால்பேட்டையில் இருந்தும் இருசக்கர வாகனங்களிலும் கார் மற்றும் வேன்களில் பெண்கள் உட்பட்ட சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமுடன் அணிவகுத்து சென்றனர்.
இத்தொடர் முழக்க ஆர்பாட்டத்திற்கு 4 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் சமுதாய பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்வமாக எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள்.
இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் இதர சமுதாய மற்றும் நமது சமுதாய தோழமை கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்திரலாக கலந்துகொண்டார்கள்,
இப்போராட்டத்திற்கு H.மெஹராஜ்தீன் தலைமை வகித்தார், வரவேற்பு மற்றும் கண்டன உரையை அப்துல் சமத் வாசித்தார், 3வது வார்டு உறுப்பினர் யாசிர் அரபாத், பேருராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள்  ம ம க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
தமீமுன் அன்சாரி பேச்சு :
இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு வந்திருந்த ம ம கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எம். தமீமுன் அன்சாரி பேசுகையில் அறுபது ஆண்டுகளுக்கு மேல் நீதிக்காக காத்திருந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு அலஹாபாத் உயர்நிதிமன்றம் ஒருதலைபட்சமாக தனது தீர்ப்பை வழங்கியதாகவும், இது கிராமங்களில் நடக்கும் சில கட்டபஞ்சாயத்து தீர்ப்பு போல வழங்கியதாகவும், மேலும் முஸ்லீம்கள் பாபரி மஸ்ஜித் காவி கூட்டங்களால் இடிக்கப்பட்டபோது எந்த அளவுக்கு மனம் உடைந்தார்களோ அதை விட மிகவும் வேதனை அடைந்தார்கள் இந்த தீர்ப்பினால் என்றார், இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியா நிதித்துறை மீது நம்பிக்கை உள்ளது அதனால்தான் நாங்கள் உச்சநிதிமன்றத்தை நாடியிருக்கிறோம்,

Powered By Cincopa

மேலும் அவர் பேசுகையில் வரலாறுகளை நினைவு காட்டி இப்ராஹீம் லூடியின் ஆட்சியில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்கள் கொடுமை படுத்தபடுகிரார்கள் என்றும் இதனால் ஹிந்துக்கள் ஒன்று கூடி ஆப்கானிஸ்தான்னில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாபர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி நீங்கள் எங்கள் நாட்டை ஆளவேண்டும் எங்களுக்கு நிம்மதியான ஆட்சியை தரவேண்டும். இன்னும் உங்களுடைய ஆட்சியை பற்றி எல்லா தரப்பினரும் நன்றாக கூறி வருகின்றார்கள் என்றதால் பானிபட் போரில் இப்ராஹீம் லூடியை தோற்கடித்து டெல்லியை கைப்பற்றி ஆட்சி செலுத்தினார்,
இக்காலங்களில் பாபரின் தளபதி மிர்பாய் அயோத்திக்கு வரும்போது ஒரு கட்டிடம் அறைகுறையாக இருந்ததை கண்டார், இது யாருடையது என்று கேட்கும்போது, இப்ராஹீம லோடி அவர்களால் பள்ளிவாசல் கட்டப்பட இருந்தது அந்த நேரத்தில் பாபர் அவரை போரில் தோற்கடித்து கொல்லப்பட்டார் இதனால் இந்த முயற்சி பாதியில் நின்றுவிட்டதாக தெரிவித்தனர், உடனே பாபரின் தளபதி மீதமுள்ள கட்டிட வேலைகளை முடித்து பாபர் மஸ்ஜித் உருவாக்கினார் இதுவே பாபரி மஸ்ஜிதின் உண்மை வரலாறாகும்.
அனால் காவி வெறியர்கள் பாபரை ஒரு ஹிந்துக்களுக்கு எதிரி போல சித்தரிக்கிறார்கள், இன்னும் தமீமுன் அன்சாரி கூறுகையில் பாபரை அவரது ஆட்சி காலத்தில் வன்மையாக எதிர்த்து வந்த சீக்கியர் ஒருவர் கூட பாபர் ராமர் கோயிலை இடித்து பள்ளி கட்டியதாக குறிப்பிடவில்லை என்றார்.
தமீமுன் அன்சாரி எச்சரிக்கை :
மேலும் அவர் பேசுகையில் முஸ்லீம்கள் இன்னும் அமைதியாக இருப்பது உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்றுதான், நாங்கள் இந்தியாவில் வாழும் இருபது கோடிக்கு அதிகமான முஸ்லீம்கள் ஒன்று சேர்ந்தால் எப்படி அல்லாஹ் புனித மக்காவை “அபாபில்” பறவைகள் கொண்டு காப்பற்றினனோ அதுபோல நாங்களும் அல்லாஹ்வின் துணையோடு சென்று பள்ளியை கட்டவேண்டி இருக்கும் என்றார்
இறுதியாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் முடித்து பெண்கள் இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள், இப்போரட்டத்தினால் காட்டுமன்னர்கோயில் பேருந்து நிலைய சாலை போக்குவரத்து தடைபட்டது, பேருந்துகள் வேறு தடத்தில் மாற்றி விடப்பட்டது. கடைசியாக வந்திருந்தவர்கள் அமைதியாக கலைந்து செல்லும்படியும், பாதுகாப்பு வழங்கிய காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.