ஞாயிறு, 13 டிசம்பர், 2009

கோவையில் மவ்லவி. அப்துற் ரஹிம் மருத்துவமனை

கோவையில் மவ்லவி. அப்துற் ரஹிம் மருத்துவமனை
த மு மு க வின் மாநில செயலாளர் ஒருவரான (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் அவர்கள் 2005ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சேலம் வந்தார். பிறகு பிரசசாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் போது. சேலம் ஆம்பூர் ரோடு அருகில் விபத்தில் வபாத்தானர் (இன்னாலில்லாஹி)
அப்துல் ரஹீம் அவர்கள் பெயரில் நாகூர்யில் சுனாமி பேரிடர் பாதுகாப்பு மையம் நிறுவப் பட்டது. அதை அடுத்து கோவையில் த மு மு க சார்பில் நினைவு மருத்துவ மனை துவக்கப்பட்டு 04 -12 -09 அன்று அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த மருத்துவமனை அர்பணித்து தமுமுக பொதுச்செயலாளர் S.ஹைதர் அலி திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர் கோவை உமர், மாநில துனைச்செயலாளர் கோவை செய்யது மற்றும் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் குமரன், அரசு மருத்துவமனை R M O டாக்டர் சிவப்பிரகாசம். தமுமுக மாவட்ட நிர்வாகிகள் அப்துல் பஷிர், ரபிக், அகமது கபீர் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சுல்தான் அமீர், ஷாஜகான், டி எம் எஸ். அப்பாஸ் ,அப்பாஸ், ஜபார், கவிஞர் ஹக், பாரக்துல்லாஹ். ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் குனிசை அப்துல் ரஹ்மான், இப்ராஹிம், பாருக், பஷிர் செய்துயிருந்தார்கள்.

Thanks .tmmk.info