புதன், 17 மார்ச், 2010

மாணவர்களை சீரழிக்கும் ஆபாச போஸ்டர்கள்

ராமநாதபுரம் : பள்ளி குழந்தைகளை சீரழிக்கும் ஆபாச போஸ்டர்கள் பொதுஇடத்தில் ஒட்டப்பட்டுவது, மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரத்தில் விதிமுறை மீறும் செயல்களுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில் பொதுஇடங்களில் ஒட்டப்படும் ஆபாச போஸ்டர்களின் தொல்லை குறைந்தபாடில்லை. கலெக்டர் மூலம் பல்வேறு எச்சரிக்கைவிடப்பட்டும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.
குறிப்பாக பள்ளி, கோயில் பகுதிகளில் இந்த கலாசாரம் அதிகமாக உள்ளன. குழந் தைகள் , பெண்கள் கூடும் இது போன்ற இடத்தில் ஆபாச போஸ்டர்கள் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, ராமநாதபுரம், பரமக்குடியில் ஆபாச போஸ்டர் கள் பிரவேசம் அதிகமாகவே உள்ளன. "இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்ற, எச்சரிக்கையையும் மீறி, இச்செயல் தொடர காரணம் என்ன? அதிகாரிகள் முறையாக கண்காணித்திருந்தால் இது தொடர்ந்திருக்காது. ஆபாச படங்களை ஒளிபரப்புவதே தவறு, அதையும் வெட்ட வெளிச்சமாக போஸ்டர்கள் ஒட்டுவது இங்கு மட்டுமே சாத்தியம். தொடரும் இந்த அத்துமீறல் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தவறினால், பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கலக்கும் அபாயம் ஏற்படலாம். மாணவ, மாணவிகளை குறிவைத்து சீர்கெடுத்து வரும் இந்த ஆபாச போஸ்டர் கலாசாரத்தை களையெடுக்க, மாவட்ட கலெக்டரும் முன்வர வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடும் தியேட்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Thanks: www.dinamalar.com